November

எதிரியை எதிர்கொள்ளுதல்

2024 நவம்பர் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,7 முதல் 10 வரை) “அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்…” (வசனம் 7). உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று பெனாதாத் கேட்டபோது தலையசைத்த ஆகாப், உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்று சொன்னபோது விழித்துக்கொண்டான். இது தன்மானத்துக்கு விழுந்த பேரிடி…

November

பெலவீனமும் தோல்வியும்

2024 நவம்பர் 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,1 முதல் 6 வரை) “உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது…” (வசனம் 3). “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்” (வசனம் 1). தாவீது ராஜாவாயிருந்த காலத்தில், அவன் சீரியர்களை அடக்கிவைத்திருந்தான். சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள் (வாசிக்க: 2 சாமுவேல் 8,6). இப்பொழுது இஸ்ரவேலரின் பின்மாற்றமான நிலையானது, சீரியர் பலங்கொண்டு இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து…

November

அறிந்த சத்தியத்துக் கேற்றபடி வாழுவோம்

2024 நவம்பர் 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,1) “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்” (வசனம் 1). சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் படையோடு, இஸ்ரவேல் நாட்டுக்கும் அதன் அரசனாகிய ஆகாபுக்கும் எதிராக வந்தான். இதிலிருந்து, கர்த்தரால் எலியாவுக்குக் கட்டளையிட்டபடி, அவன் இன்னும் சீரியாவின் ராஜாவாக ஆசகேலும், இஸ்ரவேலின் ராஜாவா யெகூவும் பதவிக்கு வரவில்லை என்று அறிந்துகொள்கிறோம் (19,15 முதல் 16). ஆயினும் ராஜாக்களின் இருதயங்களைத்…

November

முழுமையான ஒப்புவித்தல்

2024 நவம்பர் 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,19 முதல் 21 வரை) “அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான்” (வசனம் 20). எலிசா தனது அழைப்பைப் புரிந்துகொண்டு, தன் மாடுகளைவிட்டு எலியாவின் பின் ஓடினான். முதல் அழைப்பிலேயே தன்னைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, எலியாவைப் பின்பற்றிச் செல்லும்படி அவனது இருதயம் ஆயத்தமாக இருந்தது. அவன் எவ்விதத்திலும் தயக்கங்காட்டவில்லை.…

November

கீழ்ப்படிதலுள்ள ஊழியன்

2024 நவம்பர் 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,19 முதல் 21 வரை) “அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வசனம் 19). எலியா முதல் வேலையாக, தனக்குப்பின் தனது வாரிசாக எலிசாவை ஏற்படுத்தும்படி அவனைத் தேடி அவனது சொந்த ஊருக்குச் சென்றான். எலியா இங்கே எந்தத்…

November

உண்மையுள்ள விசுவாசிகள்

2024 நவம்பர் 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,18) “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” (வசனம் 18). “ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்” (வசனம் 17) என்று கர்த்தர் சொன்ன பிறகு, “ஆனாலும்” பாகாலை வணங்காத ஏழாயிரம் பேரை மீதியாக வைத்திருக்கிறேன் என்று கூறினார். அதாவது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் தண்டனை இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கப்பட்டாலும் அதிலிருந்து பாகாலை…

November

மாற்றங்களுக்கு ஆயத்தமாயிருப்போம்

2024 நவம்பர் 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,16 முதல் 17 வரை) “யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்” (வசனம் 17). கர்த்தரால் எலியாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மூன்றாவது நபர் எலிசா ஆவான். “ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வசனம் 16) என்று கர்த்தர் எலியாவுக்குக் கட்டளையிட்டார். அதாவது எலியாவுக்குப் பின் அவனுடைய இடத்தில் கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசியாக ஊழியம் செய்யப்போகிறவன். இஸ்ரவேல் மக்களை கர்த்தருக்கு நேராகத்…

November

கர்த்தருடைய கருவிகள்

2024 நவம்பர் 3 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 19,16 முதல் 17 வரை) “சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்” (வசனம் 17). கர்த்தர் எலியாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மூன்று நபர்களைப் பற்றி இன்னும் சற்றுச் சிந்திப்போம். அதைக் குறித்து கர்த்தர் சொல்கிறதாவது, “ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்”  (வசனம் 17). ஆசகேல் ஓர் அந்நிய நாட்டு அரசன். குறிப்பாகச்…

November

மீண்டும் பொறுப்பு

2024 நவம்பர் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,16) “பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வசனம் 16). கர்த்தர் எலியாவுக்கு அவன் முந்தி செய்த வேலையைக் கொடுக்காமல் புதிய வேலையைக் கொடுத்தார் என்று கண்டோம். அதாவது மூன்று நபர்களை அபிஷேகம் செய்வதே அவனுடைய புதிய வேலை. நான் மட்டுமே உண்மையுள்ளவனாக இருக்கிறேன், நான் மட்டுமே யேசபேலுக்குத் தப்பி மீந்திருக்கிறேன்…

November

மீண்டும் பொறுப்பு

2024 நவம்பர்1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,15) “அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய் ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி …” (வசனம் 15). எலியாவின் மனக்குழப்பத்திற்கு மருந்து அவனைப் பணி செய்ய வைப்பதே என்று கர்த்தர் உணர்ந்தார் என்று தெரிகிறது. நாமும்கூட சோம்பிக்கிடக்கும்போது பல்வேறு எதிர்மறை சிந்தனைகளால் ஆட்கொள்ளப்படுவோம். ஆகவே கர்த்தர் அவனுக்கு மறுபடியும் வேலையைக் கொடுத்தார். அவர் அவனை ஒரு நீண்ட பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். சீரியா…