June

சபையின் சாட்சி

2024 ஜூன் 10 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:41-43) “அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்” (வச. 42). நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக (வசனம் 43) என்று சாலொமோன் ஜெபம் செய்தான். அதாவது இஸ்ரவேல் அல்லாத புறஇன மனிதர்களுக்காகவும் இவன் ஜெபித்தான். ஆண்டவரும் தமது…

June

தேவசமூகத்தின் முக்கியத்துவம்

2024 ஜூன் 9 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:31-40) “பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக” (வச. 34). நாம் அனைவருமே ஆதாமின் பாவத்தால் வந்த சுபாவத்தைப் பெற்றிருக்கிறோம். இரட்சிக்கப்பட்ட பிறகும் இந்தச் சுபாவம் நம்மை விட்டு முற்றிலுமாகப் போய்விடவில்லை. ஆகவே பல தருணங்களில் நாம் வீழ்ச்சியைச் சந்திக்கிறோம். ஆயினும் கர்த்தர் நாம் மீண்டும் எழவும், நம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஏற்ற வழிகளை…

June

ஜெபவீடாகிய தேவனுடைய வீடு

2024 ஜூன் 8 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:28-30) “என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்” (வச. 28). இந்த வேதபகுதி ஜெபத்தைப் பற்றிய சில முக்கியமான உண்மைகளை நமக்குப் போதிக்கிறது. தேவனுடைய நாமம் விளங்குவதற்காக கட்டப்பட்ட ஆலயத்தை சாலொமோன் ஜெபவீடாக்கினான். இங்கிருந்து அவன் ஜெபித்தது மட்டுமின்றி, வருங்காலங்களில் மக்கள் ஜெபிக்க வருகிற இடமாகவும் மாற்றினான். ஒரு புதிய…

June

கடவுளின் மாபெரும் தன்மை

2024 ஜூன் 7 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:27) “தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (வச. 27). இந்த வசனத்தின் மூலம் சாலொமோன் ஓர் உண்மையைத் தெரியப்படுத்தினான். அவன் கட்டிய ஆலயத்தில் கர்த்தருடைய சிறப்பான பிரசன்னம் இருந்தபோதிலும், அவர் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கமுடியாதவரும், கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்கு பெரியவருமாக இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதே அது. மகா பெரிய கடவுள் நம்முடைய சிறிய…

June

வாக்கு மாறாத கர்த்தர்

2024 ஜூன் 6 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:23-26) “தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்” (வச. 24). “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை” (வசனம் 23) என்னும் புகழ்ச்சியோடு தன்னுடைய மன்றாட்டைத் தொடங்கினான். கர்த்தர் தனித்துவமானவர் மட்டுமின்றி, அவருக்கு நிகரானவர் வானத்திலும்பூலோகத்திலும் வேறு ஒருவரும் இலர் என்பதை தாவீது உணர்ந்திருந்தான். அதாவது வேறு எந்தக் கோள்களினாலும் சரி, அல்லது…

June

ஜெபம் என்னும் தூபம்

2024 ஜூன் 5 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:22) “பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து” (வச. 22). சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னாக, இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து ஜெபிக்கத் தொடங்கினான். பலிபீடம் பலி செலுத்தும் இடம், அதற்கு முன்பாக நின்று கைகளை விரித்து, வானத்தை நோக்கிப் பார்த்து ஆண்டவரிடம் மன்றாடினான். பலிபீடத்தின் வாயிலாக நாம் ஆண்டவரிடம் நெருங்கிச்…

June

கனவு நிறைவேறுதல்

 2024 ஜூன் 4 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:16-21) “ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்” (வச. 19). சாலொமோன் தன்னுடைய சொற்பொழிவில் இஸ்ரவேலருடைய கடந்த காலத்தைக் குறித்துப் பேசினான். அதில், 480 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்தபோது, அவர்கள் பாடிய பாடலில் இருந்து நினைவுகூர்ந்தான். இதோ அந்த பாடல் வரிகளில் சில: “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்;…

June

ராஜரீக ஆசாரியத்துவம்

2024 ஜூன் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,14 முதல் 15 வரை) “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்” (வசனம் 14). சாலொமோன் இப்போது மக்களைப் பார்த்து பேசத் தொடங்கினான். ஒரு பிரதான ஆசாரியனாக நின்று, ஆரோனின் குடும்பத்தாரில் ஒருவன் சொல்ல வேண்டிய ஆசீர்வாதத்தை இந்த இடத்தில் சாலொமோன் சொன்னான். ஆம், “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்” (வசனம் 14). சாலொமோன் ராஜாவாகப் பதவி வகிக்கிறவன்.…

June

வேத அறிவின் மேன்மை

2024 ஜூன் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,12 முதல் 13 வரை) “தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” (வசனம் 13). கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியதைக் கண்ட சாலொமோன், அவர் ஒரு சிறப்பான வழியில் இந்த ஆலயத்தில் தங்குகிறார் என்பதை உணர்ந்து கொண்டான். இவ்வாறு கூறுவதற்கு முந்தையை காலத்தில் நிகழ்ந்த அவருடைய பிரசன்னத்தின் வெளிப்பாட்டைக் குறித்த அறிவு முக்கியமானது. ஆகவேதான், அவனால் “காரிருளிலே…

June

மேகத்தில் வெளிப்பட்ட மகிமை

2024 ஜூன் 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,10 முதல் 11 வரை) “மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று” (வசனம் 11). கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. இது மகிமையின் மேகம். இது தோன்றியதை பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் அடிக்கடியாக வாசிக்கிறோம். சில சமயங்களில் இது ஷெக்கினா மகிமையின் மேகம் என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய மகிமையை சில குறிப்பிட்ட அடையாளங்களுக்குள்ளும் வரையறைக்குள்ளும் அடக்குவது கடினம்.…