June

திருப்தியுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,26 முதல் 29 வரை) “எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்” (வசனம் 27). எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுருமரங்கள் பள்ளத்தாக்குகளில் இருக்கிற காட்டத்தி மரங்களைப் போலவும் மிகுதியாக இருந்தன என்னும் வார்த்தைகள் சாலொமோனின் செல்வச் சிறப்பைப் பறைசாற்றும் வார்த்தைகளாகும். சாலைகளில் வெள்ளிப் பாளங்கள் கொட்டிக் கிடந்தன என்று நாம் இதை அர்த்தப்படுத்தக்கூடாது. மாறாக, கற்கள் எவ்வளவு மலிவாகவும் மிகுதியாகவும்…

June

பணிந்துகொள்ளும் வாழ்க்கை

2024 ஜூன் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,24 முதல் 25 வரை) “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்” (வசனம் 24). சாலொமோனின் இருதயத்தில் தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக பூமியிலுள்ள சகல அரசர்களும் அவனுடைய பிரசன்னத்தை நாடிவந்தார்கள். அதாவது அவன் சகல ராஜாக்களைக் காட்டிலும் சிறந்தவனாகவும், மேலானவனாகவும் விளங்கினான். இது கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கென அளித்த, “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய…

June

ஞானமுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,23) “பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்” (வசனம் 23). கர்த்தரோடுள்ள தொடர்பு சாலொமோனை இந்தப் பூமியிலுள்ள பிற ராஜாக்களைக் காட்டிலும் சிறந்தவனாக மாற்றியது. கர்த்தரோடுள்ள தொடர்பு தானியேலையும், அவனுடைய மூன்று நண்பர்களையும் பாபிலோன் ராஜ்யத்தில் சிறந்தவர்களாக மாற்றியது. “இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்” (தானியேல் 1,17). “பேதுருவும் யோவானும் படிப்பறியாதவர்களாயிருந்தாலும் அவர்கள் இயேசுவுடனேகூட…

June

மகிமையுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,14 முதல் 22 வரை) “ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது” (வசனம் 15). சாலொமோன் அரியணைக்கு வந்த புதிதில், கர்த்தர் அவனுக்குத் தரிசனமானபோது, அவன் அவரிடத்தில் ஞானத்தைக் கேட்டான். அப்பொழுது அவர், “இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை” (1 ராஜாக்கள் 3,13) என்று வாக்களித்தார்.…

June

ஒப்புவித்தலின் வாழ்க்கை

2024 ஜூன் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,10 முதல் 13 வரை) “அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்” (வசனம் 10). சேபாவின் ராஜஸ்திரீ ஏன் சாலொமோன் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்? இதற்கான பதிலை சாலொமோன் எழுதிய நீதிமொழிகளிலிருந்தே நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும். அவன் “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதிமொழிகள் 3,13) என்று எழுதிவைத்திருக்கிறான்.…

June

சாட்சியுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 25 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:9) “உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக” (வச. 9). சாலொமோனின் ஞானம், அவனது நிர்வாகத் திறமை, அவனுடைய அரண்மனையின் அழகு, வேலைக்காரர்கள், உணவு வகைகள், விருந்தோம்பல், நடைபெற்ற விவாதங்கள் ஆகிய எல்லாவற்றையும் கண்ட சேபாவின் ராஜஸ்திரீயின் கவனம் தேவனாகிய கர்த்தர் மீது திரும்பியது. இந்தப் பெண்மணி எருசலேமுக்கு சுற்றுலா வரவில்லை. இவளுக்கு ஞானத்தின்மீது நாட்டமும், அதை அறிந்துகொள்ள வேண்டும் என்னும்…

June

பாக்கியவான்கள்

2024 ஜூன் 24 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:6-8) “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (வச. 7). சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்ட செய்திகள் யாவும் நேரில் வந்தபோது உண்மையென கண்டுகொண்டாள். அவளது ஆர்வமும் பிரயாசமும் சாலொமோனை கூடுதலாக அறிந்துகொள்ளச் செய்தன. நாம் இரட்சிக்கப்படும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குழந்தையாகத் தொடங்குகிறோம். நாளாக நாளாக நாம் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நோக்கிப் பயணிக்கிறோம். நம்மிடத்திலும் ஆர்வமும் உற்சாகமும் இருக்குமானால்…

June

விசுவாசித்து அறிந்துகொள்ளுதல்

2024 ஜூன் 23 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:4-5) “சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,… கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,” (வச. 4,5). கர்த்தர் சாலொமோனுக்கு அருளிய ஞானத்தையும், அந்த ஞானத்தால் விளைந்த சகல திறமையான காரியங்களையும், அவனுடைய ஐசுவரியத்தையும் சேபாவின் ராஜஸ்திரீ கண்டபோது ஆச்சரியத்தால் நிறைந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமை கொண்டவளைப் போல ஆனாள். இப்படியிருக்க சாலொமோனுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்த கர்த்தருடைய ஞானம் எவ்வாறு இருக்கும்?…

June

ராஜாவுடன் தனிப்பட்ட நெருக்கம்

2024 ஜூன் 22 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:2-3)   “அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை” (வச. 3). பூமியினுடைய தென் திசையின் கடைசி எல்லையிலிருந்து, அதாவது இஸ்ரவேல் நாட்டிற்கு தெற்குப் பகுதியில் இருக்கிற தூரமான நாட்டிலிருந்து சேபா நாட்டின் ராஜஸ்திரீ, சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவனோடு உரையாட வேண்டும், அவனைக் காண வேண்டும் என்னும் ஆவலில் அவனைத் தேடி வந்தாள். சாலோமோனிலும் பெரியவரோ பரலோகத்திலிருந்து நம்மைத்…

June

நற்செய்தி அறிவித்தல்

2024 ஜூன் 21 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:1-3) “கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது” (வச. 1). சாலொமோனின் புகழ் அன்றைக்கு அறியப்பட்டிருந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. கர்த்தர் அருளிய தெய்வீக ஞானத்தால் அவன் நாட்டை நிர்வகித்த திறனையும், வளர்ச்சியையும் செழிப்பையும் கண்ட மக்களும், வணிகர்களும் அவனைப் பற்றிய செய்தியை உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தனர். ஒரு விசுவாசிக்கு கர்த்தருடைய நாமத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு புகழ்ச்சியும் கீர்த்தியும் இல்லை. இயேசு நாதரைச் சுமந்த…