July

மெய்யான அரசர்

2024 ஜூலை 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,1 முதல் 15 வரை) “முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி…” (வசனம் 8). சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அவன் தந்தையின் ஸ்தானத்தில் அரசனாகப் பதவியேற்றான். நாம் இந்த உலகத்தில் நிரந்தரமாக உயிரோடு இருக்கப்போவதில்லை. நாம் வகிக்கிற பதவியையோ, பொறுப்பையோ அல்லது சொத்துகளையோ நமக்குப் பின்வரும் சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்பதே உண்மை. சாலொமோன் இந்தக்…

July

வாழ்வின் முடிவும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,43) “சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 43). “உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப் பண்ணுவேன்” (3,14) என்று கர்த்தர் சாலொமோனிடம் கூறியிருந்தார். சாலொமோன் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளாததால் நீடித்த ஆயுள்வரைக்கும் அவன் செல்லவில்லை. நமது வாழ்நாள் உலக மருத்துவம், உடற்பயிற்சி,…

July

பொறுப்பும் அதன் காலமும்

2024 ஜூலை 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,41 முதல் 42 வரை) “சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்” (வசனம் 42). சாலொமோனால் எழுதப்பட்ட நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய நூல்கள் தவிர, அவனது அன்றாட ராஜாங்க நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவன் செய்தவை அனைத்தும் சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என நாம் அறியவருகிறோம் (வசனம் 41). அவன் மூலமாக நமக்கு என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று ஆவியானவர்…

July

சிட்சையும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,26 முதல் 39 வரை) “இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்” (வசனம் 39). “சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்” (வசனம் 26). ஆதாத் மற்றும் ரேசோன் என்னும் இரண்டு எதிரிகளை நாட்டிற்கு வெளியே இருந்து எழுப்பியதுமல்லாமல் உள்ளேயிருந்து யெரொபெயாம் என்னும் விரோதியையும் கர்த்தர்…

July

கீழ்ப்படியாமையும் எதிரிகளும்

2024 ஜூலை 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,23 முதல் 25 வரை) “எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்” (வசனம் 23). தேவன் சாலொமோனுக்கு எதிராக மற்றொரு எதிரியையும் எழுப்பினார். அவனுடைய பெயர் ரேசோன். இவனிமித்தமும் சாலொமோனின் தூக்கம் கெட்டு, சமாதானம் தொலைந்தது. இஸ்ரவேலின் தெற்குத் திசையிலிருந்து ஆதாத்  என்னும் விரோதியை கர்த்தர் அனுமதித்தது போல (வசனங்கள் 14-22), இப்பொழுது அதன் வடக்குப் பகுதியான சீரியாவிலிருந்து மற்றோர் எதிரியையும் கர்த்தர்…

July

கீழ்ப்படியாமையும் சிட்சையும்

2024 ஜூலை 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,14 முதல் 22 வரை) “கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்” (வசனம் 14). சாலொமோன் ஒரு காலத்தில், “என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (1 ராஜாக்கள் 5,4) என்று அறிக்கையிட்டான். ஆனால் இப்பொழுது நிலைமை அவனுக்கு உவப்பானதாக இல்லை. அவன் அந்நிய தேவர்களைத் தொழுதுகொண்டு வழிவிலகிச் சென்றதால்,…

July

கீழ்ப்படிதலும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,11 முதல் 13 வரை) “நான் (கர்த்தர்) உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்” (வசனம் 11). நியாயப்பிரமாணம் நிபந்தனையோடு கூடிய ஆசீர்வாதத்தையே வாக்குப்பண்ணுகிறது. அதைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம், அதைக் கடைப்பிடிக்காவிடில் அது சாபம். கர்த்தர் தாவீதுக்கு அருளிய வாக்குறுதியிலும் இதுவே பிரதிபலித்தது. தாவீதின் சந்ததியினர் கீழ்ப்படிந்தால் மட்டுமே,…

July

அன்பும் கோபமும்

2024 ஜூலை 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,10) “அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்” (வசனம் 10). சாலொமோன் ஆலயத்தைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் தம்முடைய மகிமையால் அதை நிரப்பினார். தன்னுடைய நாமம் விளங்கும் ஸ்தலமாக அதைத் தெரிந்துகொண்டார். இதன் மூலமாக பூமியெங்கிலும் தான் ஒருவரே மெய்யான தேவன் என்பதை அறியச் செய்தார். மேலும் சாலொமோனுக்கு அவர் அருளிய ஞானத்தின் வாயிலாகவும் பூமியிலுள்ள ராஜாக்கள் அனைவரும் இவ்வுண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆனால்…

July

கீழ்ப்படியாத இருதயம்

2024 ஜூலை 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,9) “அவன் (சாலொமோன்) கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,” (வசனம் 9). கர்த்தர் சாலொமோனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தரிசனமாகியிருந்தார் (வசனம் 9). முதல் முறை அவன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தொடக்க காலத்திலும், இரண்டாம் முறை அவன் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட சமயத்திலும் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகியிருந்தார். இவ்விரண்டிலும், என் கட்டளைகளையும், என் நியமங்களையும் கைக்கொண்டு என் வழிகளில் நடக்க வேண்டும் என்றும், வேறே…

July

உத்தமமான இருதயம்

2024 ஜூலை 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,4 முதல் 8 வரை) “அதினால் அவனுடைய (சாலொமோனுடைய) இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை” (வசனம் 4). “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்” (வசனம் 4). சாலொமோனுக்கு வயதான போது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை தங்களுடைய கடவுள்களின் பக்கம் திருப்பினார்கள். சாலொமோன் இளமையில் புத்திசாலியாக விளங்கினான். ஆனால் அவனுடைய வயது…