July

கீழ்ப்படியாத அரசன்

2024 ஜூலை 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,31 முதல் 34 வரை) “யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று” (வசனம் 34). அற்புதமான நிகழ்வுக்குப் பிறகும் யெரொபெயாம் தனது தீய வழியை விட்டுத் திரும்பவில்லை. கர்த்தருடைய எச்சரிப்புகள் அவனுக்கு இரும்புச் சுத்தியலின் அடியைப் போல வந்தன; ஆயினும் குளிர்ந்துபோன இரும்பில் அடித்ததுபோல அவன் இருதயம் மனந்திரும்புதலுக்கு இடம் கொடுக்கவில்லை. அவன் முன்னிருந்ததைக் காட்டிலும் மோசமானதைச் செய்தான். தன்…

July

கீழ்ப்படிதலுள்ள சிங்கம்

2024 ஜூலை 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,23 முதல்  30 வரை) “அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்று போட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது” (வசனம் 24). யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி கழுதையில் ஏறி, தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றான். போகிற வழியில் ஒரு சிங்கம் அவனைக் கொன்றது. கிழவனான தீர்க்கதரிசி, இவன் சிங்கத்தால் கொல்லப்படுவான் என்று…

July

முந்தி நம்மிடத்தில்

2024 ஜூலை 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,20 முதல் 22 வரை) “அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 22). கர்த்தருடைய சித்தத்தை தெளிவாக அறிந்திருந்தும், பிறருடைய ஆதிக்கத்தையும் தாக்கத்தையும் தன்னுடைய வாழ்க்கையில் நுழைவதற்கு அனுமதித்ததன் விளைவை இப்பொழுது யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி அனுபவிக்கிறான்.…

July

பொய்யான தீர்க்கதரிசிகள்

2024 ஜூலை 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,18 முதல் 19 வரை) “அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; … ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்” (வசனம் 18). நம்முடைய பயணத்தில் நாம் எத்தனை இடர்ப்பாடுகளையும், சோர்வுகளையும் சந்தித்தாலும் சரியாக இருப்பதற்கான ஒரே வழி கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதுதான். ஆயினும் நம்மை விழத்தள்ளுவதற்கான சோதனையானது கர்த்தருடைய வார்த்தையைப் போலவே வருகிற பொய்யான வார்த்தைகள்தாம். இந்தப் பெத்தேலின்…

July

பெலவீன நேரத்தில் சோதனை

2024 ஜூலை 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,14 முதல் 17 வரை) “தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்” (வசனம் 14). யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி தன் வேலையை முடித்துவிட்டு, திரும்பிச் செல்கிற வழியில் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அமர்ந்திருந்தான் (வசனம் 14). அவன் யூதேயாவிலிருந்து வந்தது முதல் இதுவரையிலும் எதுவும்…

July

பயனற்ற பாத்திரம்

2024 ஜூலை 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,11 முதல் 14 வரை) “கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்” (வசனம் 11). சில நேரங்களில் புனை கதைகளைக் காட்டிலும் உண்மையான நிகழ்வுகள் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி மற்றம் பெத்தேலில் குடியிருந்த தீர்க்கதரிசி ஆகியோரின் சந்திப்பும் இப்படியான ஒன்றுதான். தேவனுடைய வீடு என்னும் பொருள் கொண்ட பெத்தேலில் தேவனால் பயன்படுத்தப்பட முடியாத கிழவனான ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்து வந்தான்.…

July

தேவனுடைய அடையாளம்

2024 ஜூலை 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,2 முதல் 10 வரை) “கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்” (வசனம் 3). தேவனுடைய மனிதனாகிய இந்தத் தீர்க்கதரிசி, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயரில் ஒரு குமாரன் பிறப்பான், அவன் இந்த மேடையில் தூபங்காட்டுகிற ஆசாரியர்களைப் பலியிடுவான் என்று முன்னறிவித்தான். 340 ஆண்டுகளுக்குப் பிறகு, யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் நாட்களில் இந்தத் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதை வேதம் பதிவு செய்திருக்கிறது (2 ராஜாக்கள் 23,15).…

July

தேவனுடைய மனிதன்

2024 ஜூலை 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,1) “யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, …” (வசனம் 1). யெரொபெயாம் பெத்தேலில் தான் உண்டாக்கிய பலிபிடத்தின் மீது ஏறி தூபங்காட்டுவதற்கு ஆயத்தமாக நின்றான். அவன் ஓர் ஆசாரியனாக இராதிருந்தும் துணிகரமாகப் பலிபீடத்தில் பலி செலுத்தும்படி ஏறினான். “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்” (நீதிமொழிகள் 26,17) என்று…

July

பரீட்சைக்கு நில்லாத நவீனமுறைகள்

2024 ஜூலை 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,25 முதல் 33 வரை) “இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்” (வசனம் 30). பத்துக் கோத்திரங்களுக்கு ராஜாவாகிய யெரொபெயாம் எப்பிராயீம் மலைகளில் சீகேம் என்னும் நகரத்தைக் கட்டி அதை தனது அரசாட்சியின் தலைநகராக்கினான். பின்னர் தன் ஆட்சியின் வெற்றியை நிரூபிக்க பெனுவேல் என்னும் நகரையும் கட்டினான். அவனது ஆட்சி முன்னேற்றத்தை நோக்கித் தொடங்கியது. அந்தோ பரிதாபம்! கர்த்தர் அவனுக்கு கிருபையாய்க்…

July

மெய்யான அரசர்

2024 ஜூலை 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,16 முதல் 24 வரை) “யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை” (வசனம் 20). சாலொமோனின் பாவத்தால் பத்துக்கோத்திரங்களை தேவன் யெரொபெயாமுக்குக் கொடுத்துவிட்டார். பாகப்பிரிவினைக்கும், அழிவுக்கும் பாவம் எப்போரும் ஒரு மிகச் சிறந்த தூண்டு சக்தியாகத் திகழ்கிறது. பாவத்துக்கு மூலகாரணமான சாத்தான் மக்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணுகிறான். கர்த்தர் மட்டுமே பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து சமாதானத்தை உண்டுபண்ணுகிறார். ஆகவே நாம் பாவத்திற்கு விலகியிருக்க வேண்டும்.…