December

கிருபையின் ஐசுவரியம்

2024 டிசம்பர் 11 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,27 முதல் 29 வரை  “ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான் ” (வசனம் 27). ஆகாப் எலியாவைக் கண்டபோது முதலாவது அதிருப்தி அடைந்தான். ஆனால் கர்த்தருடைய பயங்கரமான தண்டனையைக் கேட்டபோது மிகவும் பாதிக்கப்பட்டான். உடனே, தான் அணிந்திருந்த ராஜாவுக்குரிய ஆடைகளைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் துக்க நாட்களில் அணியும் இரட்டைப் போர்த்துக்கொண்டு…

December

தூண்டிவிட வேண்டாம்

2024 டிசம்பர் 10 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,25 முதல் 26 வரை  “தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை” (வசனம் 25). கர்த்தர் ஆகாபின்மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவன் தன் மனைவியாகிய யேசபேலின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தான். குடும்பம் என்னும் நிறுவனத்தில் கணவனே தலைவனாக இருக்கிறான். குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அவனிடத்திலேயே உள்ளது. ஆனால் இந்த ஆகாப் அதைச் செய்யத் தவறிவிட்டான்.…

December

நன்மை செய்யப் பழகுவோம்

2024 டிசம்பர் 9 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,22 முதல் 24 வரை  “உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்” (வசனம் 22). எலியா ஆகாபை நோக்கி, “யெரொபெயாமின் குடும்பத்துக்கும், பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன்” என்று கர்த்தரால் உரைத்தான். இவ்விருவரும் இஸ்ரவேலை ஆண்ட மன்னர்கள். இவ்விருவரும் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். இவ்விருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டார்கள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு இவர்கள்மீது உண்டாயிற்று. இவ்விருவரும்…

December

நமது சந்ததியைக் காப்போம்

2024 டிசம்பர் 8 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,21  “உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து … (வசனம் 21). உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரிக்கப்படும் என்பது இஸ்ரவேல் மக்களுக்கு குறிப்பாக ஆகாபுக்கு எதிரான மிகக் கடுமையான தீர்ப்பாகும். குறிப்பாக ராஜா என்னும் பதவிக்கு எதிரானது. “சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும்…

December

பாவத்தின் சம்பளம்

டிசம்பர் 7 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,21 “நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து … (வசனம் 21). “நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணுவேன்” என கர்த்தர் சொன்னதை எலியா ஆகாபுக்கு அறிவித்தான். நான் உனக்குத் தீமையை வரப்பண்ணுவேன் என்பதே இதன் பொருள். ஆகாப் மனந்திரும்பும்படிக்கு கர்த்தர் எத்தனையோ வாய்ப்புகளை அவனுக்குக் கொடுத்தார். விலையேறப்பட்ட தன் ஆத்துமாவைப் பாவம்…

December

பார்வையில் கவனம் தேவை

2024 டிசம்பர் 6 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,20  “அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்” (என்றான்) (வசனம் 20). ஆகாப் எலியாவை திடீரென வரக் கண்டவுடன், “என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா” என்றான். அவன் எலியாவை தன் பகைஞனாகக் கருதினான். கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைப் பெற்று, எவ்வித ஒளிவுமறைவுமின்றி, அதை உண்மையாய் அறிவிக்கிறவர்களை தங்களது எதிரிகளாகக்…

December

பாவம் தொடர்ந்து பிடிக்கும்

2024 டிசம்பர் 5 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,19  “நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்” (வசனம் 19). நேற்றைய பகுதியில் இருந்தே இன்றைய தியானத்தையும் தொடருவோம். “நீ கொலைசெய்ததும், எடுத்துக்கொண்டதும் இல்லையோ” (வசனம் 19) என்று எலியா ஆகாபிடம் கூறினான். எலியா ஆகாபிடம், இரண்டு…

December

எழுந்து புறப்படுவோம்

2024 டிசம்பர் 4 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,17 முதல் 19 வரை  “கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்” (வசனம் 17 முதல் 18). ஏறத்தாழ ஓராண்டு கால இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியாவைச் சந்திக்கிறோம். இப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாயிற்று. தன் பணியைச் செய்யும்படி…

December

சர்வ வியாபியாயிருக்கிற தேவன்

2024 டிசம்பர் 3 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,15 முதல் 16 வரை  “நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்” (வசனம் 16). நாபோத் இறந்துபோனான். அவனுடைய பிள்ளைகளும் அவனோடுகூட கொல்லப்பட்டார்கள். அவனுடைய தோட்டத்தை வேறு எவரும் உரிமை கொண்டாடாதபடிக்கு அதை வாரிசற்றதாக்கினார்கள்.  வாரிசற்றவர்களின் சொத்துகள் அரசுக்குச் சொந்தமாகிவிடும். எனவே மன்னன் என்ற முறையில் அதை உரிமைகோரும்படி ஆகாப் எழுந்து சென்றான். நன்றாகத் திட்டமிடப்பட்ட சதிச் செயல்…

December

தியாக மரணம்

2024 டிசம்பர் 2 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,11 முதல் 14 வரை  “அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்” (வசனம் 11). இஸ்ரவேலின் மூப்பரும் பெரியோரும் யேசபேலுடைய தந்திரமான கட்டளையை நிறைவேற்றுகிற அளவுக்குத் தரந்தாழ்ந்த நிலையானது, பெருவாரியான மக்களும் தேவபக்தியும் பயமும் அற்றவர்களாக மாறிப்போயினர் என்பதற்கான அடையாளமாகும். வேறு வகையில் கூறுவோமாயின் தேசம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானதாக மாறிவிட்டது. ஒரு…