August

கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்

2024 ஆகஸ்ட் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,19) “அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி…” (வசனம் 19). நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம்முடைய சீடர்களிடம், மக்கள் என்னை யார் என்று கூறுகிறார்கள் என்று கேட்டார். “அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்”…

August

சாந்தமும் விட்டுக்கொடுத்தலும்

2024 ஆகஸ்ட் 30 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 17:19) “அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து (வசனம் 19). இறந்துபோன தன் குழந்தையை தன் மடியில் போட்டு, துக்கத்தால், கேள்விமேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்த சாறிபாத் விதவைக்கு எலியா எவ்விதப் பதிலோ விளக்கமோ அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவளுடைய கோபமான கேள்விக்குக்கூட எலியாவிடமிருந்து மறு உத்தரவும் வழங்கப்படவில்லை…

August

விடைதெரியா குழப்பங்கள்

2024 ஆகஸ்ட் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,18) “என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள்” (வசனம் 18). எலியா ஆகாப் ராஜாவுக்கு முன்பாக நின்று, என் வார்த்தையினாலே அன்றி தேசத்தில் மழை பெய்யாது என்று சொல்லிவிட்டு வந்தான். அதாவது அவனுடைய பாவ வாழ்க்கையைக் கண்டித்து உணர்த்தி, அவனுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளைத் தெரிவித்து வந்திருந்தான். ஆகவே, இந்த சாறிபாத் விதவையும், “என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா…

August

மரணத்திற்கு நீங்கும் வழிகள்

2024 ஆகஸ்ட் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,18) “அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, … என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்? என்றாள்” (வசனம் 18). மனித மனம் எப்பொழுதும் மாறக்கூடியது. “எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமான வைகளையும் செய்தவராகிய, தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்” (சங்கீதம் 106 ,21) என்று இஸ்ரவேல் மக்களைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே இந்த விதவையின் செயல்களும் காணப்பட்டன.…

August

திரும்பிப் பார்த்து சீர்பொருந்துதல்

2024 ஆகஸ்ட் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,17 முதல் 18 வரை) “அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது” (வசனம் 17). சாறிபாத் விதவையின் மகன் நோயின் தீவிரத்தால் இறந்தான். இது அந்த விதவைத் தாய்க்கு மிகுந்த வேதனையைக் கொண்டுவந்திருக்கும். இவளுக்கு மட்டுமின்றி, மகனைச் சாவுக்குப் பறிகொடுக்கிற எந்தத் தாய்க்கும் இவ்வாறுதான் இருந்திருக்கும். இவள் ஏற்கனவே தன் கணவனைப் பறிகொடுத்தவள். இப்பொழுது தன் நம்பிக்கையாயிருக்கிற ஒரே மகனையும் இழந்துவிட்டது என்பது அவளுக்கு…

August

கண்ணீரின் பள்ளத்தாக்குகள்

2024 ஆகஸ்ட் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,17) “இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்” (வசனம் 17). சாறிபாத் விதவை கர்த்தருடைய அற்புதமான பராமரிப்பை அனுபவித்துக்கொண்டிருந்த போதே அவளின் மகன் நோய்வாய்ப்பட்டான். கர்த்தருடைய அடைக்கலத்திலும், சித்தத்தின் மையத்திலும் இருக்கும் போது விசுவாசிகளுக்கு துன்பங்களும், குறைவுகளும், நோய்களும் ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும் என்று இந்த சம்பவமும், இன்னும்பிற நிகழ்வுகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியோரை…

August

மாறாத வார்த்தைகள்

2024 ஆகஸ்ட் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,16) “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை” (வசனம் 16). “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே” காரியங்கள் நடைபெற்றன. கர்த்தருடைய வார்த்தைகள் வெறுமனே தரையில் விழுந்துவிடாது. “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும்” என்று பேதுரு கர்த்தருடைய வார்த்தையின் மாறாத தன்மையைக் குறித்து சாட்சி கூறுகிறார். “என்…

August

திருப்தியுள்ள வாழ்வு

2024 ஆகஸ்ட் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,15 முதல் 16 வரை) “அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (வசனம் 15). இன்றைய நாளிலும் அதே வேதபகுதியிலிருந்து கூடுதலாகச் சில காரியங்களைச் சிந்திக்கலாம். சாறிபாத் விதவைக்கு நேரிட்டதைப் போல, நமது வாழ்க்கையிலும் துன்பங்களும், துயரங்களும் ஏற்படலாம். எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையற்றவர்களாக, அடுத்த வேளை உணவுக்காக என்ன செய்வேன் என்று அவநம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கலாம். ஆயினும் நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், இந்த சாறிபாத் விதவையையும்,…

August

விசுவாச வாழ்வு

2024 ஆகஸ்ட் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,15 முதல் 16 வரை) “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (வசனம் 15). கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை என்று எலியாவால் எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடிந்தது. அது கர்த்தருடைய வார்த்தையின்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தால் ஆகும். எலியா சொன்னது நிறைவேறாவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? எலியா அல்ல,…

August

பொய்யுரையாத தேவன்

2024 ஆகஸ்ட் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,14) “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 14). எலியா அந்த விதவையிடம், “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை” என்று கூறினான். நாட்டில் ஏன் மழை பெய்யவில்லை? நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது ஏன்? ஏன் விளைச்சல் இல்லை? ஏன்…