May

ஸ்தாபிதமும் பெலனும்

2024 மே 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,13 முதல் 22 வரை) “அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்” (வசனம் 1). மோசே ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டும்போது, அதற்கு வேண்டிய வெண்கல வேலைகளைச் செய்வதற்கு பெசலெயேல் என்னும் ஒரு மனிதனை ஆவியானவர் எழுப்பினார். “அவன் விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,…

May

முன்னுரிமை பற்றிய காரியம்

2024 மே 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,1 முதல் 12 வரை) “சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது” (வசனம் 1). சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட காலத்தைக் காட்டிலும் தன் அரண்மனையைக் கட்டுவதற்கு ஏறத்தாழ இருமடங்கு காலத்தை எடுத்துக்கொண்டான். இதன் மூலம் அவன் ஆலயத்தை அவசரகதியில் கட்டினான் என்றோ, அரண்மனையை பொறுமையுடன் நிதானமாகக் கட்டினான் என்றோ நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அவன் ஆலயத்தை விரைவாகக்…

May

முடிக்கப்பட்ட பணி

2024 மே 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,31 முதல் 38 வரை) “நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு, பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது” (வசனம் 37 முதல் 38). ஆசரிப்புக் கூடாரத்தில் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கு திரை இருந்தது. ஆனால் தேவாலயத்தில் அந்த ஸ்தலத்துக்குள் நுழைவதற்கு கதவுகள் உண்டாக்கப்பட்டன. இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லும்…

May

ஒழுங்கும் கிரமமும்

2024 மே 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,29 முதல் 30 வரை) “ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்” (வசனம் 29). தங்கத் தகடுகளால் மூடப்பட்ட தேவாலயத்தின் சுவர்கள் பாதுகாப்பை வழங்கும் கேருபீன்கள், புசிக்கிறவனுக்கு ஆற்றலைத் தரும் பேரீச்சை மரங்கள், மற்றும் கடவுளுடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் அழகையும் வெளிப்படுத்தும் மலர்ந்த மலர்கள் ஆகியவற்றின் சித்திர வேலைப்பாடுகள் கொண்டதாக விளங்கின. சுவர்கள் நல்ல கலை…

May

ஆவியின் சமாதானம்

2024 மே 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,23 முதல் 28 வரை) “சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது” (வசனம் 23). மோசே உண்டாக்கிய ஆசரிப்புக்கூடாரத்தில் இருந்த கிருபாசனப் பெட்டியின் மீது இரண்டு சிறிய கேருபீன்கள் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாதிரியாகக் கொண்டு, இரண்டு பெரிய கேருபீன்களை சாலொமோன் மகாபரிசுத்த ஸ்தலத்தில் செய்துவைத்தான். ஒவ்வொன்றும் பத்து முழ உயரம் கொண்டதாக இருந்தது. இவ்விரண்டு கேருபீன்களின் இறக்கைகளும் ஏறத்தாழ…

May

உள்ளான பரிசுத்தம்

2024 மே 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,19 முதல் 22 வரை) “கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்” (வசனம் 19). சாலொமோன் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்துக்குள்ளேயே ஒரு பிரத்யேக இடத்தை ஆயத்தப்படுத்தினான். இது சந்நிதி ஸ்தானம் அல்லது மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது. இந்தியக் கோயில்களில் உள்ள கருவறையைப் போன்றது இது. “இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது” (எபிரெயர் 9,3) என்று…

May

அன்பெனும் அலங்காரம்

2024 மே 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,14 முதல் 18 வரை) “ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது” (வசனம் 18). “அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்” (வசனம் 14) என்னும் வாக்கியமானது அலங்கார வேலைக்கு முன், கற்களால் கட்டி முடிக்கப்பட்ட தகவலைச் சொல்லுகிறது. அதாவது ஒரு வீடு சிமெண்ட்டால் பூச்சு வேலை செய்வதற்கு முன், செங்கல்களால் கட்டி முடிக்கப்பட்ட…

May

மனிதரிடத்தில் வாசம்பண்ணுகிற தேவன்

2024 மே 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,11 முதல் 13 வரை) “இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்” (வசனம் 13). இஸ்ரவேல் நாடு சாலொமோன் என்னும் ராஜாவினால் ஆளுகை செய்யப்பட்டது. ஆயினும் அந்த ராஜா ராஜாதி ராஜாவாம் கர்த்தருடைய ஆளுகைக்கு கட்டுப்பட்டவராக நடக்க வேண்டும். இது சாலொமோனுக்கு மட்டுமின்றி, இஸ்ரவேல் நாட்டைப் பற்றிய பொதுவான தேவ திட்டமாக இருந்தது. ஆகவே ராஜா கீழ்ப்படிந்து நடந்துகொண்டால் ராஜாதி ராஜா…

May

கட்டுமான முறை

2024 மே 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,7 முதல் 10 வரை) “ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (வசனம் 7). சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் போது சுத்தியல் அல்லது உளி போன்ற இரும்புக் கருவிகளின் ஓசை எதுவும் அதன் வளாகத்தில் கேட்கப்படவில்லை. அதாவது ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்தும் வேறோர் இடத்தில்…

May

ஆலயத்தின் மாதிரி

2024 மே 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,2 முதல் 6 வரை) “சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது” (வசனம் 2). சாலொமோன் ஆலயத்தை அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமும் இருக்கும்படி கட்டத் தொடங்கினான். இந்த அளவை யார் கொடுத்தது? தாவீது இந்த அளவையும் அதனுடைய மாதிரியையும் கர்த்தரிடமிருந்து பெற்று, அதைத் சாலொமோனுக்கு வழங்கினான்…