December

மாயம்பண்ண வேண்டாம்

2024 டிசம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,29 முதல் 30 வரை)  “பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்” (வசனம் 29). தீர்க்கதரிசி மிகாயாவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பதற்கு ஆகாபின் பெருமையும் கௌரவமும் இடங்கொடுக்கவில்லை. இவன் தீர்க்கதரிசியின் முன்னுரைப்பை தன் சொந்தத் திறமையால் பொய்யாக்க விரும்பினான். “தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” (ரோமர் 13,1) என்பதை அவன் மறந்துவிட்டான். பிரசங்கியார்கள் அல்லது நமது திருச்சபையின் போதகர்கள்…

December

பாடுகளில் உண்மையாயிருத்தல்

2024 டிசம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,24 முதல் 28 வரை  “… சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்” (வசனம் 24). உண்மையைப் பேசின மிகாயாவின் செயலை பொய்த் தீர்க்கதரிசிகளால் தாங்கிக்கொள்ளவில்லை. இருவர் சண்டையிடும்போது, யாருடைய சத்தம் ஓங்கியிருக்கிறதோ அவர்கள் பக்கமே தவறு இருக்கும் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. சிதேக்கியாவின் காரியம் இப்படியாகத்தான் இருந்தது. சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்தான்.…

December

உண்மைக்கு உறுதியாயிருப்போம்

2024 டிசம்பர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,20 முதல் 23 வரை)  “அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது” (வசனம் 21). போரில் ஆகாப் வெற்றி பெறுவான் என்று உரைத்த நானூறு தீர்க்கதரிசிகளுக்குப் பின்னால் இருப்பது யார் என்பதை கர்த்தர் வெளிப்படுத்த விரும்பினார். இந்த நானூறு தீர்க்கதரிசிகளுக்கு எதிராக தன்னந்தனி யொருவனாக மிகாயா நின்றுகொண்டிருந்தான். எனவே அதை மிகாயாவின் வாயிலாக அவர்களுக்கு உணர்த்திக்…

December

வெறுப்பை எதிர்கொள்ளுதல்

2024 டிசம்பர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,17 முதல் 19 வரை)  “அப்பொழுது அவன் (மிகாயா): இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” (வசனம் 17). இப்பொழுது மிகாயா கர்த்தர் தனக்கு உண்மையிலேயே என்ன வெளிப்படுத்தினாரோ அதைச் சொல்லத் தொடங்கினார். இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன் என்னும் காட்சியைக் கூறினான். இஸ்ரேல் தோற்கடிக்கப்படும் என்பது மட்டுமின்றி, அவர்களின் மேய்ப்பனாகிய ஆகாப் கொலை செய்யப்படுவான் என்றும் தெரிவித்தான். பல்வேறு…

December

அடையாள முத்திரை

2024 டிசம்பர் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,15 முதல் 16 வரை)  “ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்” (வசனம் 16). ஆகாப் மிகாயாவிடம், “நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா” என்று கேட்டதற்கு, “போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று பதிலளித்தான் (வசனம் 15). எல்லாத் தீர்க்கதரிசிகளும் ஆகாபிடம் போரில்…

December

தேவசித்தம் அறிதல்

2024 டிசம்பர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,13 முதல் 15 வரை)  “அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 14). “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா” யோசபாத் கேட்டதினிமித்தம், வேறு வழியின்றி, ஆகாப் மிகாயாவை அழைத்து வாருங்கள் என்று சொன்னான். சில நேரங்களில் நாமும்கூட நிர்ப்பந்தங்களின்பேரில் கர்த்தருடைய ஆலோசனையை நாடுகிறோம். நாம் இயல்பாக வகையில் கர்த்தருடன்…

December

போலிகளை இனம் கண்டுகொள்ளுதல்

2024 டிசம்பர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,10 முதல் 12 வரை)  “கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 11). சமாரியாவின் நுழைவாயிலில் ஆகாபும் யோசபாத்தும் சிம்மாசனங்களில் அமர்ந்திருந்தனர். ஒலிமுக வாசலிலேயே அந்தந்த நகரத்தின் உள்ளூர் நீதிமன்றம் இயங்கி வருவது அக்காலத்தைய வழக்கம். இருவரும் நீதி விசாரணை செய்பவர்களைப் போல கர்த்தருடைய சித்தம் இன்னதென்று அறிய அமர்ந்திருந்தார்கள். சட்டம்…

December

உண்மையைத் தேடுதல்

2024 டிசம்பர் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,5 முதல் 9 வரை)  “பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்” (வசனம் 5). ஆகாப் போர் செய்து கீலேயாத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியபோது, யோசபாத் போரைப் பற்றிய தேவனின் சித்தத்தை அறிய விரும்பினான். ஆகாபுக்கு இப்படியான ஒரு சிந்தை ஏற்படவில்லை என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஒரு தேவபக்தியுள்ளவனும் தேவபக்தியற்றவனும் கூட்டுச் சேர்ந்தால் என்ன…

December

உலகத்தோடு ஒத்துப்போதல்

2024 டிசம்பர் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,4)  “யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்” (வசனம் 4). கர்த்தருக்குப் பயந்து நடக்கிற யோசபாத், ஆகாப் ராஜாவுடன் மிதமிஞ்சிய வகையில் இசைந்துபோனது நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. “நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள்”  என்று கூறுமளவுக்கு இறங்கிச் சென்றுவிட்டான். ரூத் தன் மாமியாகிய…

December

முழுமையான கீழ்ப்படிதல் அவசியம்

2024 டிசம்பர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,1 முதல் 4 வரை)  “சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது” (வசனம் 1). சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்தை யுத்தத்தில் அழிப்பதற்கான வாய்ப்பைக் கர்த்தர் ஆகாபுக்கு கொடுத்திருந்தும் அவனைத் தப்பவிட்டுவிட்டான். அதோடுகூட கர்த்தருக்குப் பிரியமில்லாத வகையில் அவனுடன் உடன்படிக்கையும் செய்துகொண்டான். இதனிமித்தம் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாக அவன் படையெடுத்து வரவில்லை. இந்தக் காரியமே இருநாடுகளுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்குச் சமாதானம் நிலவக் காரணமாக அமைந்தது. ஆகாப் கர்த்தருக்கு…