July

உண்மையுள்ளவனின் சிலாக்கியம்

2024 ஜூலை 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,10 முதல் 16 வரை) “யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்” (வசனம் 13). கர்த்தர் அகியாவின் மூலமாக யெரொபெயாமுக்கும் அவன் சந்ததிக்கும் நேரிடப்போகிற அழிவை முன்னறிவித்தார். நாம் பாவம் செய்யும்போது, அது நமக்கு இனிமையாகத் தோன்றும், அதற்கான விளைவை அனுபவிக்கும்போதோ அது கசப்பானதாக இருக்கும். விக்கிரக ஆராதனை செய்கிறவன் கர்த்தருக்கு விரோதமாகப்…

July

ஏமாற்றுகிறவன் ஏமாற்றமடைவான்

2024 ஜூலை 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,4 முதல் 9 வரை) “அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்” (வசனம் 4). யெரொபெயாமின் மனைவி தன் கணவன் யெரொபெயாம் சொன்னபடியே மாறுவேடத்தில் தீர்க்கதரிசியைச் சந்திக்கச் சென்றாள். ஆனால் இந்தச் சமயத்தில் அகியா வயது முதிர்ந்தவனாக கண்கள் மங்கலடைந்து எதிரே உள்ளவர்களைத் தெளிவாகப் பார்க்க இயலாதவனாக இருந்தான்.…

July

இரட்டை நிலை

2024 ஜூலை 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,1 முதல் 3 வரை) “அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்” (வசனம் 1). கீழ்ப்படியாத யெரொபெயாமுக்கு கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். யெரொபெயாமின் மகன் அபியா நோய்வாய்ப்பட்டான். யெரொபெயாம் ஒரு ராஜாவாயிருந்தாலும், எல்லா மனிதருக்கும் இருக்கிற பிரச்சினை அவனுக்கும் வந்தது. மனிதனாய் பிறக்கிற எவனும், அவன் ஆதாமுக்குள் இருக்கிறபடியால், அவன் வியாதிக்கு அப்பாற்பட்டவன் அல்ல. சில நேரங்களில் கர்த்தர் தமது நோக்கத்தை நிறைவேற்ற…

July

கீழ்ப்படியாத அரசன்

2024 ஜூலை 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,31 முதல் 34 வரை) “யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று” (வசனம் 34). அற்புதமான நிகழ்வுக்குப் பிறகும் யெரொபெயாம் தனது தீய வழியை விட்டுத் திரும்பவில்லை. கர்த்தருடைய எச்சரிப்புகள் அவனுக்கு இரும்புச் சுத்தியலின் அடியைப் போல வந்தன; ஆயினும் குளிர்ந்துபோன இரும்பில் அடித்ததுபோல அவன் இருதயம் மனந்திரும்புதலுக்கு இடம் கொடுக்கவில்லை. அவன் முன்னிருந்ததைக் காட்டிலும் மோசமானதைச் செய்தான். தன்…

July

கீழ்ப்படிதலுள்ள சிங்கம்

2024 ஜூலை 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,23 முதல்  30 வரை) “அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்று போட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது” (வசனம் 24). யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி கழுதையில் ஏறி, தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றான். போகிற வழியில் ஒரு சிங்கம் அவனைக் கொன்றது. கிழவனான தீர்க்கதரிசி, இவன் சிங்கத்தால் கொல்லப்படுவான் என்று…

July

முந்தி நம்மிடத்தில்

2024 ஜூலை 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,20 முதல் 22 வரை) “அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 22). கர்த்தருடைய சித்தத்தை தெளிவாக அறிந்திருந்தும், பிறருடைய ஆதிக்கத்தையும் தாக்கத்தையும் தன்னுடைய வாழ்க்கையில் நுழைவதற்கு அனுமதித்ததன் விளைவை இப்பொழுது யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி அனுபவிக்கிறான்.…

July

பொய்யான தீர்க்கதரிசிகள்

2024 ஜூலை 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,18 முதல் 19 வரை) “அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; … ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்” (வசனம் 18). நம்முடைய பயணத்தில் நாம் எத்தனை இடர்ப்பாடுகளையும், சோர்வுகளையும் சந்தித்தாலும் சரியாக இருப்பதற்கான ஒரே வழி கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதுதான். ஆயினும் நம்மை விழத்தள்ளுவதற்கான சோதனையானது கர்த்தருடைய வார்த்தையைப் போலவே வருகிற பொய்யான வார்த்தைகள்தாம். இந்தப் பெத்தேலின்…

July

பெலவீன நேரத்தில் சோதனை

2024 ஜூலை 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,14 முதல் 17 வரை) “தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்” (வசனம் 14). யூதேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி தன் வேலையை முடித்துவிட்டு, திரும்பிச் செல்கிற வழியில் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அமர்ந்திருந்தான் (வசனம் 14). அவன் யூதேயாவிலிருந்து வந்தது முதல் இதுவரையிலும் எதுவும்…

July

பயனற்ற பாத்திரம்

2024 ஜூலை 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,11 முதல் 14 வரை) “கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்” (வசனம் 11). சில நேரங்களில் புனை கதைகளைக் காட்டிலும் உண்மையான நிகழ்வுகள் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி மற்றம் பெத்தேலில் குடியிருந்த தீர்க்கதரிசி ஆகியோரின் சந்திப்பும் இப்படியான ஒன்றுதான். தேவனுடைய வீடு என்னும் பொருள் கொண்ட பெத்தேலில் தேவனால் பயன்படுத்தப்பட முடியாத கிழவனான ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்து வந்தான்.…

July

தேவனுடைய அடையாளம்

2024 ஜூலை 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,2 முதல் 10 வரை) “கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்” (வசனம் 3). தேவனுடைய மனிதனாகிய இந்தத் தீர்க்கதரிசி, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயரில் ஒரு குமாரன் பிறப்பான், அவன் இந்த மேடையில் தூபங்காட்டுகிற ஆசாரியர்களைப் பலியிடுவான் என்று முன்னறிவித்தான். 340 ஆண்டுகளுக்குப் பிறகு, யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் நாட்களில் இந்தத் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதை வேதம் பதிவு செய்திருக்கிறது (2 ராஜாக்கள் 23,15).…