August

ஏழு நாள் அரசன்

2024 ஆகஸ்ட் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,15 முதல் 20 வரை) “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்” (வசனம் 15). பொருளாசையைப் போலவே பதவி ஆசையும் மிகவும் மோசமானது. சிம்ரி என்பவனுக்கு இஸ்ரவேலின் நாற்காலியின்மீது ஆசை வந்தது. இவன் பாஷாவின் மகன் ஏலாவைக் கொன்று நாற்காலியில் அமர்ந்தான். மொத்தம் ஏழு நாட்கள் மட்டுமே அவனால் ஆட்சி செய்ய முடிந்தது. மிகக்குறுகிய கால ஆட்சி. இஸ்ரவேலின் கெட்ட ராஜாக்களின்…

August

வழிவழியாய்…

2024 ஆகஸ்ட் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,8 முதல் 14 வரை) “யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்” (வசனம் 8). பாஷா மரித்த பின் அவனுடைய மகன் ஏலா ஆட்சிப் பதவியை ஏற்றான். தந்தையைப் போல மகன் என்னும் பழமொழிக்கு ஏற்பவே இவனுடைய ஆட்சியும் இருந்தது. பாஷா விதைத்ததை இவன் அறுவடை செய்தான். விக்கிரகங்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…

August

சூழ்நிலைகள் என்னும் பாடப்புத்தகம்

2024 ஆகஸ்ட் 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,1 முதல் 7 வரை) “பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று” (வசனம் 1). பாஷா நாதாபைக் கொன்று பட்டத்துக்கு வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவன் தன்னைத் தான் ராஜாவாக ஆக்கிக் கொண்டான் என்று தோன்றுகிறது. ஆயினும் இதற்குப் பின்னாக, மறைமுகமாக கர்த்தருடைய கரம் இருந்ததைப் பின்வரும் வசனம் நமக்கு அறிவிக்கிறது. “நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல்…

July

நல்ல வழியில் செல்வோம்

2024 ஜூலை 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,25 முதல் 34 வரை) “(பாஷா) கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்” (வசனம் 34). இந்த வேதபகுதி, யெரொபெயாமின் குமாரன் நாதாப் இஸ்ரவேலின் அரசனாகப் பதவி ஏற்றான் என்று தொடங்குகிறது. இவன் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி கர்த்தருக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டான். தந்தையின் பாவ வழியையே இவனும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை,…

July

வாழ்வின் முடிவுவரை

2024 ஜூலை 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,22 முதல் 24 வரை) “ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 24). அபியாவுக்குப் பின் அவனுடைய குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது (2 நாளாகமம் 14,1). ஆசா மொத்தமாக நாற்பத்தொரு ஆண்டுகள் அரசாட்சி செய்தான். அதில் கால் பகுதி காலங்கள் அவன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான். எவ்வித போர்களும்…

July

தேவன் எதிர்பார்க்கிற உத்தமம்

2024 ஜூலை 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,16 முதல் 21 வரை) “ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்” (வசனம் 17). இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய யெரொபெயாம் தன்னுடைய ஆட்சியின் கீழுள்ள மக்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே பொன் கன்றுக்குட்டிகளைச் செய்து பெத்தேலிலும் தாணிலும் நிறுவி, அவற்றைத் தொழுதுகொள்ளும்படி ஏற்பாடு செய்தான் (1 ராஜாக்கள் 12,28 முதல் 30 வரை).…

July

ஆவிக்குரிய மறுமலர்ச்சி

2024 ஜூலை 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,9 முதல் 14 வரை) “இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி, நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 9 முதல் 10). சாலொமோனின் கொள்ளுப்பேரனாகிய ஆசா, தனது தந்தை அபியாமின் குறுகியகால ஆட்சிக்குப் பிறகு, இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் யூதாவின் ராஜாவாக அரியணையில் அமர்ந்தான். யூதாவை ஆட்சி செய்த நல்ல ராஜாக்களில் இந்த ஆசாவும் ஒருவன். இவன்…

July

கிருபையைப் புறக்கணித்தல்

2024 ஜூலை 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,1 முதல் 8 வரை) “யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி, மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 1 முதல் 2). சாலொமோனின் மகன் ரெகொபெயாம் இறந்தான். அவனுக்குப் பின் அவனுடைய குமாரன் அபியாம் அரியணையில் அமர்ந்தான். ரெகொபெயாமுக்கு இருபத்தியெட்டு மகன்கள் இருந்தார்கள். பதினெட்டு மனைவிகளில் தந்தையால் நேசிக்கப்பட்ட மாகாளின் மகனாகிய அபியாமுக்கு தேவ கிருபையால் அரசப் பதவி கிடைத்தது (காண்க:…

July

பரிசுத்தத்தில் கலப்படம்

2024 ஜூலை 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,21 முதல் 31 வரை) “சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்” (வசனம் 18). இப்பொழுது கதை இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதா நாட்டிற்குத் திரும்புகிறது. இங்கே சாலொமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கிறான். இவனுடைய தாயின் பெயர்…

July

வாழ்க்கையின் முடிவு

2024 ஜூலை 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,17 முதல் 20 வரை) “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்” (வசனம் 18). கர்த்தர் அகியாவின் மூலமாக உரைத்தது நிறைவேறியது. யெரொபெயாமின் மனைவி தன் வீட்டுக்குள் நுழையும் தருணத்தில் அவளுடைய மகன் அபியா இறந்தான். இவனுடைய மரணத்துக்காக இஸ்ரவேலர் எல்லாரும் துக்கங்கொண்டாடினார்கள். ஆவிக்குரிய இருளான சூழ்நிலையில், தன் வாழ்க்கையின் மூலமாக…