வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது. ஆனால் இதன் மதிப்பை அறியமுடியாத மனிதர் இதனை மிதித்து உருட்டி எறிந்தனர். ஆனால் இந்தக்கல்தான் தேவனுடைய கட்டுமானப்பணியில் மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
வேதாகமத்தின் இந்தப் பதுமராகக் கல்லைப் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்புகள் உண்டு.
1). இது மூலைக்கல் (மத் 21:42, எபே 2:20)
2). இது தலைக்கல் (சக 4:7, அப் 4:11)
3). இது அடிக்கப்பட்ட கல் (1கொரி 10:4)
4). இது இடறல் கல் (1கொரி 1:23)
5). இது உடைக்கும் கல் (தானி 2:34)
6). இது உயிருள்ள தெரிந்தெடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கல் (1பேது 2:4-7)
இந்தக் கல்லின் வருகை உலக ஆசனங்களின் அசைவாக இருக்கும். உயிருள்ள கல்லால் உயிர்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.