தேவசாயலைக் கொண்ட மனிதன்
(வேதபகுதி: ஆதியாகமம் 1:26-28) “தேவன் தம்முடைய சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாகவே அவர்களைச் சிருஷ்டித்தார்” (வச. 27). மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவன். மனித குலமே சிருஷ்டிப்பின் மகுடமாகத் திகழ்கிறது. இப்பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினமும் பெற்றிராததும், எந்த உயிரினத்துக்கும் கிடைக்காததுமாகிய சிலாக்கியம் இது. தேவன் தம்முடைய பண்புகளில் சிலவற்றை இந்த மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே மனிதன் சுயமாகச் சிந்திக்கவும், ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கும்படியான ஞானத்தையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறான். ஆகவே…