ஐனவரி 11
என் ஜனத்தை ஆற்றுங்கள்….. என்று… தேவன் சொல்லுகிறார் (ஏசா.40:1). ஆறுதலைச் சேர்த்து வையுங்கள். இதுவே தீர்க்கதிரிசியின் ஊழியம். உலகம் எண்ணில்லாத ஆறுதலற்ற இருதயங்ககளால் நிறைந்திருக்கிறது. நீ இந்த ஊழியத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமுன் அற்கு ஏற்ற பயிற்சி அடையவேண்டும். உன்னுடைய பயிற்சி மிகக் கடினமானது. இந்த ஆறுதலைப் பூரணமாய் நீ அளிப்பதற்கு முன்னதாக, எண்ணிறந்த இருதயங்களிலிருந்து, இரத்தக்கண்ணீர் வடியச் செய்யும் அதே கஷ்டங்களை நீ அனுபவிக்கவேண்டும். இவ்விதமாய் உன் சொந்த ஜீவியமே ஆறுதலளிப்பதாகிய தெய்வீக செய்கையை நீ…