January

ஐனவரி 1

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம். அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். வருடத்தின் துவக்க முதல் வருடத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:11-12). பிரியமுள்ள சிநேகிதரே, இன்று நாம் அறியாத ஓர் ஆரம்பத்திற்கு வந்திருக்கிறோம். ஒரு புது வருடம் நமக்கு முன்பாக இருக்கிறது. அதை நாம் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறோம். அதில் நாம் என்ன காண்போம் என்று யார் சொல்லக்கூடும்?…