பெப்ரவரி 28
அவருடைய நாமத்தைத்துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குசெலுத்தக்கடவோம் (எபி.13:15). ஒரு நகரத்தில் ஊழியம்செய்து வந்து ஓர் உத்தம சுவிசேடகர் ஒரு தினம் ஓர் எளிய பெண்ணின் குடிசைக்குச் சென்றார்.அவளுடைய குடிசைக்குச் செல்லும் பாதை இருண்டு குப்பை கூளம் நிறைந்திருந்தது. அவர் உள்ளேநுழையும் சப்தத்தைக் கேட்டுக் குடிசை மூலையில் படுத்துக்கொண்டிருந்த நீக்ரோ பெண் தன்னைத்தேடி எவரோ ஒரு பெண்மணி வந்திருக்கிறாளென நினைத்து கண்மணி! நீ யாரம்மா? என்று மிகவும்கனிந்த குரலில் கேட்டாள். சுவிசேடகர்…