ஐனவரி 21
அவைகளில் ஒன்றையும் குறித்து கவலைப்படேன் (அப்.20:24). எபிரோனில் தாவீது முடிசூட்டப்பட்டவுடன் பெலிஸ்தர் அனைவரும் தாவீதைத் தேடி வந்தார்கள் என்று சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம் (2.சாமு.5:17). கர்த்தரிடமிருந்து விசேஷமாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது சாத்தான் நம்மைத் தேடிவருகிறான். நாம் கர்த்தருக்காக செய்யும் எந்த ஊழியத்தின் ஆரம்பத்திலும், சத்துரு நம்மைச் சந்தித்தால் அது இரட்சிப்புக்கு முன் அடையாளம் என்று எண்ணி, இரட்டிப்பான ஆசீர்வாதம், வல்லமை, வெற்றி, இவைகளைக் கொடுக்கும்படி தேவனை வேண்டுவோமாக. சக்தி எதிர்ப்பினால் உண்டாக்கப்படுகிறது. வெடிக்கும் சக்தி, எதிர்ப்பைத்தாண்டிச்…