February

பெப்ரவரி 21

கர்த்தரை நோக்கிஅமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7). நீ திரும்பத் திரும்பஜெபித்து, கர்த்தருக்குக் காத்திருந்தும், இன்னும் நீ ஒரு பதிலையும் காணவில்லையா? நீஒன்றும் நடக்கக் காணாததால் ஓய்ந்துபோனாயோ? நீ எல்லாவற்றையும் வீண் என்றுவிட்டுவிடும் தறுவாயிலிருக்கிறாயா? நீ ஒருவேளை சரியான முறையில் காத்திராதிருக்கலாம்.இது உன்னைச் சரியான இடத்திலிருந்து எடுத்து அவர் உன்னைச் சந்திக்கும் இடத்தில்கொண்டுபோய்ச் சேர்க்கலாம். பொறுமையாய்க் காத்திரு(ரோ.8:25). பொறுமை கவலையைப் போக்குகிறது. அவர் வருவேன் என்று சொன்னார். அவரின்வாக்கு அவர் பிரசன்னத்திற்குச் சமம். பொறுமை உன் கண்ணீரைத் துடைக்கிறது.…

February

பெப்ரவரி 20

உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது. (மத்.17:20). நம்மைக் காப்பாற்றவும்வெற்றியளிக்கவும், கர்த்தருடைய வல்லமையுண்டு என்று தீர்மானிக்கிறவர்களுக்குக் கர்த்தருடையவாக்கு அனுபவ உண்மையானது என்று காட்டக்கூடிய வாழ்க்கை நடத்துவது சாத்தியமாகும். தினமும் நம்முடைய கவலைகளைஅவர்மீது போட்டுவிட்டு, ஆழ்ந்த சமாதானத்தைப் பெறவும் கூடும். இந்த வார்த்தையில்அடங்கியிருக்கும் பொருளின் பிரகாரம் நம்முடைய எண்ணங்களையும், யோசனைகளையும்சுத்திகரித்துக் கொள்வது சாத்தியமாகும். தேவனின் சித்தத்தையாவற்றிலும் கண்டு, பெருமூச்சோடு அல்ல, சங்கீதத்தோடு பெற்றுக்கொள்வதும் சாத்தியமாகும். தெய்வீகச் சக்தியில்பூரணமாய்ச் சரண் புகுந்து, அதனால் மென்மேலும் பலனடையலாம். நமது பலவீனத்தில் நாம்பொறுமையாயிருக்கத் தீர்மானித்திருக்கும்போது, பொறுமையை…

February

பெப்ரவரி 19

கனி கொடுக்கிற கொடிஎதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார் (யோ.15:2). தன்னையே குறியாக வைத்துவந்த அநேக உபத்திரவங்களைக்கண்டு ஒரு கர்த்தருடைய பிள்ளை மலைத்துப் போனாள். இலையுதிர்காலத்தில் அப்பெண் ஒரு திராட்சத் தோட்டத்தைக் கடந்து சென்றாள். அந்தத் தோட்டம்சுத்தம் செய்யப்படாமல் கொடிகளில் இலைகள் நிறைந்து அவ்விடம் முழுவதும் கவனிக்கப்படாமல்பாழாய்க் கிடப்பதையும் கண்டாள். அப்போது தெய்வீகத் தோட்டக்காரனாகிய தேவன்அவளுக்கு ஓர் உண்மையைத் தெரிவித்தார். அதை அவள் மற்றவர்களுக்குக் கூற விரும்புகிறாள். என் அருமைப் பிள்ளையே,உன் ஜீவியத்தில்…

February

பெப்ரவரி 18

நீங்கள்ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம்என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24). என் மகன் பத்துவயதாயிருக்கும்போது, அவனுடைய பாட்டி அவனுக்குக் கிறிஸ்மஸ் பரிசாகத் தபால் பில்லைகள்சேர்த்துவைக்கும் ஒரு புத்தகம் கொடுப்பதாக வாக்களித்தார். கிறிஸ்மஸ் வந்தது.பாட்டியிடமிருந்து அப் புத்தகம் வரவில்லை. அதைக் குறித்து ஒரு செய்தியும் வரவில்லை.நாங்கள் அக்காரியத்தைக் குறித்து ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நாங்கள் அக்காரியத்தைக் குறித்துப் பேசவுமில்லை. அவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதிகளைப் பார்க்க, அவனுடையசிநேகிதர் வந்தபோது, அவனுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெகுமதியைiயும்…

February

பெப்ரவரி 17

இஸ்ரவேல் புத்திரருக்குநான் கொடுக்கும் தேசம் (யோசு.1:2) இவ்விடத்தில் கர்த்தர்நிகழ்காலத்தில் பேசுகிறார். இது அவர் பிறகு செய்யப்போகிற ஒரு காரியமல்ல. இப்பொழுதேசெய்கிற காரியம். விசுவாசம் எப்பொழுதும் இப்படியே பேசும். இப்படியே கர்த்தர் எப்பொழுதும்கொடுக்கிறார். இந்தப்படியே கர்த்தர் இன்றைய தினத்தில் இந்த நிமிடத்தில் உன்னைச்சந்திக்கிறார். இதுவே விசுவாசத்தின் பரீட்சை. யாதாவதொரு காரியம் நடக்கும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருப்பாயென்றால் அது விசுவாசமில்லை, அது நம்பிக்கை. ஊக்கமானவிருப்பமாயிருக்கலாம். ஆனால் அது விசுவாசமல்ல. ஏனென்றால் விசுவாசம் எதிர்பார்த்தலின்நிறைவேறுதலும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நம்பிக்கையான ஜெபத்தைக்குறித்த கட்டளை நிகழ்காலத்திலே…

February

பெப்ரவரி 16

உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன் (நாகூம்1:12). துன்பங்களுக்கு ஓர் அளவுஉண்டு. கர்த்தர் அதை அனுப்பி அதை விலக்குகிறார். எப்பொழுதும் அது விலகும் என்று பெருமூச்சுடன்நீ கேட்கிறாயா? கர்த்தர் வரும்வரை அவர் சித்தத்திற்காக அமைதியாய்க் காத்திருந்து,பொறுமையாய்ச் சகிப்போமாக. தாம் கொண்ட எண்ணம் முழுவதும் நிறைவேறும்போது அவர் கஷ்டங்களைநீக்கிப்போடுவார். துன்பங்கள் நம்முடையநற்குணங்களால் கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கான பரீட்சைகளானால், அவை அவருக்குத் துதிஉண்டாக நம்மை சாட்சி பகரச்செய்யும்போது விலகிப்போம். நம்முடையதுன்பங்களின் மூலம் நாம் கொடுக்கக் கூடிய மகிமை யாவையும் பெற்றுக்கொள்ளும்வரை…

February

பெப்ரவரி 15

எரிச்சலடையாதே (சங்.37:1). எவற்றைக் குறித்தும்மூர்க்கம் அடையாதே. இந்தச் சங்கீதத்தில் தொகுத்துள்ள காரியங்கள்எரிச்சலடையத்தக்கவைகளே. தீமை செய்பவர்கள் நீலாம்பரமும் மெல்லிய வஸ்திரமும் தரித்துச்செழித்திருந்தார்கள். பொல்லாப்புச் செய்பவர்கள் அதியுன்னத பதவியடைந்து துர் அதிஷ்டசாலிகளானதங்கள் சகோதரரைக் கொடுமையாய் நடத்தினார்கள். ஜீவனத்தின் பெருமையோடும், திரளான ஜசுவரியத்தினாலுண்டாகும்சுகபோகத்தோடும், பாவிகளான ஆண்களும், பெண்களும் வீதிகளில் பெருமிதமாய் நடந்தார்கள்.சற்குணமான மனிதர் வருத்தப்பட்டு எரிச்சலடைந்தார்கள். எரிச்சலடையாதே,அதிகமாய்க் கோபங்கொள்ளாதிருப்பாயாக, அமைதியாயிரு. தகுந்த காரணத்துக்கும் எரிச்சல்அடைவது ஏற்றதல்ல. எரிச்சல் யாவற்றையும் உஷ்ணப்படுத்துகிறது. அது நீராவியைஉண்டாக்குகிறதில்லை. புகைவண்டியின் அச்சுக்களில் உஷ்ணம் ஏறுவதானால் பயனொன்றும் இல்லை.அது…

February

பெப்ரவரி 14

சந்தோஷமாயிருங்கள்என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4). இயேசுவில் சந்தோஷமாயிருத்தல்மிக சிறந்த காரியம். நீ இதைச் செய்ய முயலும்போது முதல் தடவை தவறுவதுபோல் காணப்படலாம்.பரவாயில்லை சந்தோஷம் உண்டாகாதபோது, உனக்குள் மகிழ்ச்சியின் ஊற்றில்லாதபோது,காணக்கூடிய தைரியமோ ஆறுதலோ இல்லாதபோது இன்னும் முயன்று அவைகள் எல்லாம் சந்தோஷம்என்று எண்ணு. கர்த்தர் உன் எண்ணத்தை நிறைவேற்றுவார். பலிவதமான சோதனைகள் சூழும்போதுஅவைகளைச் சந்தோஷம் என்று எண்ணு. கர்த்தர் உன்னை வெற்றிக்கொடியையும் ஆனந்த கொடியையும்,போர்முனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்து, பின்பு சத்துரு உன்னைப் பிடிக்கவோமேற்கொள்ளவோ விட்டு விட்டுச் சும்மா இருப்பாரோ?…

February

பெப்ரவரி 13

மலைத்தேசமும் உங்களுடையதாயிருக்கும் (யோசு.17:17). எப்பொழுதும் மேலே இடமுண்டு.பள்ளத்தாக்கு முழுவதிலும் உன் முன்னேற்றத்தைத் தடைபண்ணும் இரும்பு இரதங்களோடு, கானானியர்நிரம்பியிருக்கும்போது நீ மலைமீது ஏறிச்சென்று உயர்ந்த இடங்களைப் பிடித்துக்கொள்.உன்னால் தொடர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாவிட்டால் அவருக்கு ஊழியம்செய்யக்கூடியவர்களுக்காக ஜெபி. உன் பேச்சுத்திறமையில் உலகத்தை அசைக்க உன்னால்முடியாவிட்டால் நீ மோட்சத்தையே அசைக்கலாம். ஊழியம் செய்யச் சந்தர்ப்பங்கள்வாய்க்கவில்லை அல்லது பிறரைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் வேறு ஊழியத்திற்குச்செல்ல முடியவில்லை என்ற இவ்விதத் தடைகள் உனக்கு ஏற்படலாம். இவற்றால் உன்வாழ்க்கையின் முன்னேற்றம் தடைப்பட்டாலும், காணமுடியாத…

February

பெப்ரவரி 12

உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் (மத்.6:32). ஓர் ஊமைப் பிள்ளைகள்பள்ளியைப் பார்வையிடச் சென்ற ஒருவர், கரும்பலகையில் அநேகக் கேள்விகளை எழுதினார்.அதிலொரு கேள்வி, என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும்கூடாதவர்களாகவும் தேவன் ஏன் படைத்தார்? இக் கேள்வி அவர்கள்முகத்திலறைந்தாற்போல் இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு விடையளியாது மரத்துப்போனதுபோல்செயலற்றவர்களாயிருந்தனர் மாணவர். பின்பு ஒரு சிறு பெண் எழுந்தாள். அவளுடைய உதடுகள் துடித்தன.அவள் கண்களில் நீர் நிரம்பிற்று. அவள் கரும்பலகை அண்டை சென்று நடுக்கமின்றி பின்வரும்அருமையான வசனத்தை எழுதினாள். இதுவும்…