மனசாட்சியில் தெளிவாயிருத்தல்
2025 மார்ச் 2 (வேத பகுதி) 2 ராஜாக்கள் 5,18 முதல் 19 வரை “ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக”(வசனம் 18). நாகமான் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தான். “இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிட வேண்டும்” (வசனம் 18) என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது, “என் ஆண்டவன் (அரசன்) பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணிய வேண்டியதாகும்”…