March

மயக்கம் நிறைந்த கண்கள்

2025 மார்ச் 13 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:18 “எலிசா கர்த்தரை நோக்கி; இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்”(வச.18). தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபித்த எலிசா, இப்பொழுது எதிரிகளின் கண்களில் மயக்கம் உண்டாகும்படி ஜெபித்தான். இந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்டருளினார். இந்த உலகத்தில் நம்முடைய எதிரிகள் எத்தனை சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், தேவனுடைய வல்லமைக்கும், அவருடைய யதார்த்தத்திற்கும் குருடர்களாகவே இருக்கிறார்கள். இவர்களால் ஒருபோதும் தேவனுடைய…

March

திறக்கப்பட்ட கண்கள் தேவை

2025 மார்ச் 12 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:17) “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”(வச.17). முதலாவது எலிசா தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபம் செய்தான். கர்த்தர் அவனது வேண்டுதலைக் கேட்டார். அப்பொழுது அவன் “இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வசனம் 17). பயந்து கொண்டிருந்தவன் அக்கினிமயமான குதிரைகளையும் இரதங்களையும்…

March

சோதனையின் ஊடாகச் சமாதானத்தோடிருத்தல்

2025 மார்ச் 11 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:13-17) “அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்”(வச.17). நம்மனைவருக்கும் ஒரு சிறப்புக் கண் கண்ணாடி தேவைப்படுகிறது. ஏனெனில் நாம் எல்லாவற்றையும் அவை உண்மையில் இருப்பதைப் போலப் பார்க்க முடிகிறதில்லை என்பதுதான். பகலின் குளிர்ச்சியான வேளையில் உலாவுகிற தேவனைக் காணும்படியே ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டிருந்தனர். ஆனால், “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள்…

March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2024 மார்ச் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,16 முதல் 18 வரை)  “தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.”(வச.9). தன்னுடைய ஒவ்வொரு முயற்சிகளும் தோற்கடிக்கப்படுவதைக் கண்ட சீரியாவின் அரசன் குழம்பிப் போனான். இஸ்ரவேல் நாட்டின் உளவாளிகள் தனது அரண்மனையில் யாரேனும் இருக்கிறார்களோ என்று சந்தேகமடைந்தான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு எதிராகத் தீட்டப்படும் எந்தவொரு திட்டமும் தேவனால் அனுமதிக்கப்படாத பட்சத்தில்…

March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2025 மார்ச் 9 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:8-10 “அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 15).      “தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.”(வச.9). இழந்துபோன கோடாரியை மீட்டுக்கொடுத்ததன் மூலமாக தீர்க்கதரிசிகளின் புத்திரன் ஒருவனுக்கு உதவிய எலிசா இப்பொழுது தனது நாட்டின் மன்னனுக்கு உதவி செய்கிறான். தேவன் தனக்கு அளித்துள்ள வரங்களை மக்களின்…

March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2025 மார்ச் 8 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:6-7)  “ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, அதை எடுத்துக் கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்”(வச. 6,7). எலிசா மரத்திலிருந்து ஒரு கொம்மை வெட்டி, கோடாரி (கோடாரியிலுள்ள வெட்டும் இரும்புக் கருவி) விழுந்த இடத்தில் தண்ணீரில் போட்டான். அப்பொழுது அந்தக் கோடாரி மிதந்தது. ஒரு விசுவாசிக்கு உதவி செய்ய வேண்டும் தேவன் நினைப்பாரானால் அவரால் இரும்புத்…

March

பாவத்தை அடையாளம் காணுதல்

2025 மார்ச் 7 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:4-6  “அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது”(வச. 6). தீர்க்கதரிசிகளின் புத்திரர் மரம் வெட்டுவதற்காக யோர்தான் ஆற்றருகே சென்றார்கள் (வசனம் 4). அவர்களோடு எலிசாவும் சென்றான். எலிசாவின் வாழ்க்கையில் சற்று முன்னர்தான் இரண்டு செயல்கள் நடைபெற்றிருந்தன. ஒன்று சீரியாவின் தளபதி நாகமானின் தொழுநோயை அற்புதமான வகையில் குணமாக்கியது. மற்றொன்று தன்னுடைய நெருங்கிய உதவியாளன் கேயாசியின் வீழ்ச்சி. ஒன்று பெருமைக்குரிய செயல், மற்றொன்று கவலைக்குரிய செயல். ஆயினும் இவையிரண்டும் தன்னுடைய அடுத்தகட்ட…

March

ஊழியங்களின் விரிவாக்கம்

2025 மார்ச் 6 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:1-3  “குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம்”(வச. 2). இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய இருளில் சிக்கியிருந்தாலும்கூட, கர்த்தரைத் தேடுகிற ஒரு கூட்டம் அங்கே இருந்தது. இவர்கள், “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” என்று அழைக்கப்பட்டார்கள். இது அந்நாட்களில் கர்த்தருடைய காரியங்களைக் கற்றுக்கொள்கிற “தீர்க்கதரிசனப் பள்ளியாக” விளங்கியது. “இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது” (வச. 1) என்ற கூற்றிலிருந்து அங்கே எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள…

March

தன் ஸ்தானத்தை இழந்துபோனவன்

2025 மார்ச் 5 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:27  “ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்”(வச. 26). எலியாவுக்குப் பின் எலிசா கர்த்தருடைய தீர்க்கதரிசியாக விளங்கியதைப் போன்று, எலிசாவுக்குப் பின் கேயாசி கர்த்தருடைய தீர்க்கதரிசியாகப் பயன்பட்டிருக்க வேண்டியவன். தன் பணத்தாசையால் ஒரு மாபெரும் பணியை இழந்துபோனான். இன்றைய நாட்களிலும்கூட பண ஆசை பல கர்த்தருடைய ஊழியக்காரர்களை ஊழியத்தைவிட்டு அப்புறப்படுத்த மூலகாரணமாக இருந்திருக்கிறது அல்லது பண ஆசையினால் தங்கள் செல்வாக்கை இழந்துபோயிருக்கிறார்கள். பண…

March

வேலைக்காரனைப் புரிந்துகொண்ட எஜமான்

 2025 மார்ச் 4 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:24-27  “என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?”(வச. 26). கேயாசி நாகமானிடமிருந்து பெற்ற இரண்டு பண மூட்டைகளையும் ஆடைகளையும் பத்திரமாய் வீட்டில் இறக்கி வைத்தான். மேலும் அவற்றை எலிசாவுக்குத் தெரியாமல் மறைத்துவைத்தான். கேயாசி தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்தான். பண ஆசை பணத்தை இரகசியமாய் மறைத்து வைத்தல் என்னும் மற்றொரு பாவத்துக்கு நேராக வழிநடத்தியது. தான் நாகமானிடமிருந்து பெற்ற பணத்தை எலிசாவிடம் கூறியிருந்தால், ஒருவேளை அவனுடைய வாழ்க்கையின்…