Genesis

வானத்துக்குரியவர்கள்

(வேத பகுதி: ஆதியாகமம் 1,6 முதல் 8 வரை) “தேவன் ஆகாய விரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்” (வசனம் 7). தேவன் தம்முடைய படைப்பின் இரண்டாம் நாளில் பூமியைச் சுற்றியிருந்த தண்ணீரை இரண்டாகப் பிரித்தார். இரண்டுக்கும் இடையில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். இதன் வாயிலாக நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய வல்லமையுள்ள வார்த்தைகள் இப்பிரபஞ்சத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்றன. அவருடைய படைப்பின் மீது அவர் தார்மீக உரிமையைக்…

Genesis

வெளிச்சம் உண்டாகக்கடவது

(வேத பகுதி: ஆதியாகமம் 1,2 முதல் 5 வரை) “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (வசனம் 2). சாயங்காலமும் விடியற் காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று (வசனம் 5). நாம் ஒரு நாளை நள்ளிரவில் தொடங்குகிறோம். ஆனால் வேதம் ஒரு நாளை மாலையில் தொடங்குகிறது. முதலில் மாலை பின்பு இரவு, அதன் பின்னர் காலை, பின்னர் பகல் பொழுது. அதாவது சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி, ஒளியின் காலத்துடன் முடிவடைகிறது. இது தேவன் செயல்படும் விதத்தின்…

Genesis

ஆதியிலே தேவன்

(வேத பகுதி: ஆதியாகமம் 1,1) “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (வசனம் 1). நாம் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையாக வாழ்க்கையைத் தொடங்கினோம். நாம் வளர வளர, வானம், கடல், காற்று, பறவைகள், பூக்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் கவனிக்க ஆரம்பித்தோம். உலகத்தைப் பற்றி நாம் அறிந்தவுடன் தவிர்க்க முடியாமல் அதைப் பற்றி சில கேள்விகளும் எழுந்தன. அத்தகைய கேள்விகளுக்கு வேதத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் சுருக்கமாகப் பதிலளிக்கிறது.…