June

யூன் 1

யூன் 1

இதுவே நீங்கள் இளைத்தவனைஇளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல். இதுவே ஆறுதல் (ஏசா.28:12).

நீ கவலைப்பட்டுக்கலங்குவானேன்? உன் எரிச்சல் என்ன பலனைத் தரும்? மாலுமியாகிய உன் ஆண்டவர் கரத்தில்சுக்கானைக் கொடுத்து, நீ செல்லும் படகை அதாவது உன் வாழ்க்கையைச் செலுத்திக்கொள்.அவர் அதை உன்னிடத்திலே தந்துவிட்டாலும் அதை நடத்தத் தெரியாதவன் நீ. அதன் பாய்களைச்சுருட்டவும்கூட உனக்குத் தெரியாது. அவ்வாறான நீ ஒரு கப்பல் தலைவனைப்போன்று கவலைகொள்வானேன்? அமைதலாய் இரு. ஆண்டவரே தலைவர். அவரே உன்னை நடத்துவார்.

இப் பேரிரைச்சல்களையும்குழப்பங்களையும் கண்டு நீ, ஆண்டவர் தம் அரியாசனத்தை விட்டுவிட்டுச் சென்று விட்டாரெனஎண்ணத் தொடங்கிவிட்டாயோ? இல்லை நண்பனே! அவருடைய முறைகள் தொடர்ந்து நடக்கும்.புயல்தான் அவருடைய இரதம். அதில் பூட்டப்பட்ட அவருடைய குதிரைகளின் வாய்களிலும்கடிவாளங்கள் உண்டு. அக் கடிவாளக் கயிறுகளைப் பிடித்திருப்பவர் ஆண்டவரே, தாம்விரும்பியபடியெல்லாம் அவர் தம் இரதத்தை நடத்துவார். யேகோவாவே தலைவர். இதை நீ நம்பு.உனக்குச் சமாதானம் கிட்டும். அச்சஞ்கொள்ளாதே.

இன்றிரவு அமர்ந்துதுயில்கொள், ஆன்மாவே,

இறைவனின் கடல்மேல்அலைகள் எழும்புகிறது

இறைவனின்கடல்மேல்தான், உன்மேல் அல்ல.

இனிய அமைதியுடன்அமர்ந்து உறங்கிவிடு.

இன்றிரவு அமர்ந்துதுயில்கொள், ஆன்மாவே

இறைவனின் கரங்கள் காற்றைஉருவாக்கும்,

இறைவனின் கரங்கள்தான்,உனதல்ல.

இனிய அமைதியுடன் அமர்ந்துஉறங்கு.

இன்றிரவு அமர்ந்துதுயில்கொள் ஆன்மாவே

இரவு செல்கையில், இறைவனினன்புவலியதே,

இறைவனினன்பு தானே, உனதல்ல.

இனிய அமைதியுடன் அமர்ந்துஉறங்கு.

இன்றிரவு அமர்ந்துதுயில்கொள், ஆன்மாவே

இறைவினின் இல்லம்,துக்கிப்போர்க்கு அமைதி தரும்

இறைவனின் இல்லமே, உனதல்ல.

இனிய அமைதியுடன் அமர்ந்துஉறங்கிவிடு.

மனத்தளர்ச்சிக்கு இடந்தராதே என்று உன்னைக்கெஞ்சிக் கேட்கிறேன். மனச்சோர்வு ஒரு பயங்கரமான சோதனை. எதிரியாகிய சர்தானின்கவர்ச்சிமிக்க முரட்டுத் தன்மை நிறைந்த சோதனை, மனச்சோர்வு நிலை இதயத்தைத் சுருங்கச்செய்து வாடவைக்கும். இதயம் அதனால், கிருபையின் அடையாளங்களை எற்றுக்கொள்ள முடியாது.உன் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பெரிதாக்கி, அவற்றிக்கு வேறு பல வண்ணங்களை மனச்சோர்வுதரும். அது உன் மன பாரங்களைத் தாங்கமுடியாதபடி கனமுள்ளவைகளாக்கி விடும். உன்னைக்குறித்த ஆண்டவருடைய திட்டங்களும், அவற்றைக் கொண்டுவரும் அவருடைய முறைகளும் மிகுந்தஞானமானவை.