March

மார்ச் 1

தேவனுடைய செயலைக் கவனித்துப் பார். அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? (பிர.7:13). அடிக்கடிகர்த்தர் தமது பிள்ளைகளைத் தப்ப வழியில்லாதபடி இடுக்கத்தில் நிறுத்துகிறார். முன்பேஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட இடுக்கண்களுக்கு மனுஷீக தீர்ப்பு ஒருபொழுதும் இடங்கொடுத்திராது.மேகங்களே அவர்களை இந்நிலைமைக்கு வழி நடத்துகின்றன. ஒருவேளை இந்த நேரத்தில் நீஅப்படிப்பட்ட நிலைமையிலிருக்கலாம். அது நம்மைக் கலங்கச்செய்வதாயும், வெகு கவலைக்கிடமாக்குவதாயுமிருக்கலாம். ஆனால் அது சரியான காரியமே. அதன்பயன் உன்னை இவ்வழிக்கு நடத்தியவர் செய்தது சரி என்று காட்டக்கூடும். அது அவருடைய சர்வவல்லமையுள்ள ஆற்றலையும் கிருபையும்…