ஏப்ரல் 2
ஏப்ரல் 2 அவர்கள்…. திரும்பிப் பார்த்தார்கள்…. அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்தில் காணப்பட்டது (யாத்.6:10). மேகத்தில் காணப்படும் வெள்ளிபோன்ற பிரகாசமான ஒரத்தைப் பார்க்கும் வழக்கத்தை உண்டுபண்ணிக்கொள். நடுவிலிருக்கும் கார்மேகத்தைவிட அந்த ஒளியையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிரு! எவ்வளவாக நெருக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் மனம் தளர்ந்துபோக இடம் கொடாதே. மனம் தளர்ந்தவன் செயலற்றுப் போவான். சத்துருவின் அம்புகளை எதிர்க்க அவனாலாகாது. இந்த நிலைமையில் மற்றவர்களுக்காக ஜெபிக்கவும் முடியாது. இந்தச் சத்துரு உன்னை நெருங்குவதாகக் காணும் ஒவ்வொரு அடையாளம் தோன்றும்போது விரியன்பாம்பைக் கண்டு…