January

ஒப்புவித்தலுக்கான ஆசீர்வாதம்

2025 ஜனவரி 21 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,11)  “அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில்…”(வசனம் 11). யோர்தானைக் கடந்து எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துபோனார்கள். அவர்கள் எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்? என்ன பேசினார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்படாவிட்டாலும், எலிசாவின் வருங்கால ஊழியத்தைக் குறித்தும், இஸ்ரவேல் நாட்டின் நிலையைக் குறித்தும் பேசியிருக்கலாம். மல்கியா தீர்க்கதரிசி எழுதியிருக்கிறதைப் போல, கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் என்ன பேசியிருப்பார்களோ அதையே இவர்களும் பேசியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறுரூப மலையில்,…

January

ஒப்புவித்தலுக்கான ஆசீர்வாதம்

2025 ஜனவரி 20 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,9 முதல் 10 வரை)  “அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்”(வசனம் 9). எலியா பரலோகத்தை நோக்கிய தனது இறுதிப் பயணத்தின் இறுதி நேரத்தில், எலிசாவை நோக்கி, “நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன? கேள்” என்று வினவினான். ஏனெனில் எலிசாவின் திரும்பிப் பார்க்காத முழுமையான ஒப்புவித்தலில் திருப்தி அடைந்தார். எலியாவைப் பின்பற்றிச் சென்றால் ஏதாவது தனக்குக் கிடைக்கும் என்று…

January

முற்றிலும் ஒப்புவித்தல்

2025 ஜனவரி 19 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2, 6 முதல் 8 வரை)  “பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான்”(வசனம் 6). எலியாவின் இறுதிப் பயணத்தில் அடுத்ததாக கர்த்தர் அவனை அனுப்பிய இடம் யோர்தான். இந்தத் தடவையும், எலிசாவிடம், “நீ இங்கே இரு” நான் மட்டும் யோர்தான் செல்கிறேன் என்று எலியா கூறினான். இது எலிசாவுக்கு அவன் நடத்திய இறுதித் தேர்வு. தான் இந்த…

January

இடைவிடாது பின்பற்றுதல்

2025 ஜனவரி 18 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,4 முதல் 5 வரை)  “பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான்”(வசனம் 4). எலியாவினுடைய இறுதிப் பயணத்தின் அடுத்த நிறுத்தம் எரிகோ. எரிகோ என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இடிந்துவிழுந்த கோட்டையும், சபிக்கப்பட்ட பட்டணமும் ஆகும். இப்பொழுது அங்கே ஒரு தீர்க்கதரிசனப் பள்ளி இருக்கிறது, அங்கே ஊழியங்கள் நடைபெறுகின்றன. பெத்தேலிலும் தீர்க்கதரிசிகளின் புத்திரர் இருந்தார்கள்,…

January

தேவனுடைய வீட்டில் இணைந்திருத்தல்

2025 ஜனவரி 17 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,2 முதல் 3 வரை)  “எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான்”(வசனம் 2). எலிசாவின் ஊழியம், “போய்த் திரும்பிவா” என்னும் எலியாவின் அழைப்பிலிருந்து தொடங்கியது. அது முதல் எலிசா விடாமல் அவனைப் பற்றிக்கொண்டான். எலியாவின் ஒப்புவித்தல் எவ்வளவு மேன்மையானதாக இருந்ததோ அதேவிதமாகவே எலிசாவின் ஒப்புவித்தலும் சிறப்புமிக்கதாகவே விளங்கியது. எலியாவின் இறுதி நாட்களில் எலிசாவின் ஒப்புவித்தலைச் சோதிக்க விரும்பினான்.…

January

கில்கால்: நமது வாழ்வை திரும்பிப்பார்த்தல்

2025 ஜனவரி 16 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,1)  “எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனான்”(வசனம் 1). எலியா எலிசாவோடேகூட தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கினான். சில ஆண்டுகளுக்கு முன்பு “உம்மைப் பின்தொடர்வேன்” (1 ராஜாக்கள் 19,20) என்று எலிசா எலியாவிடம் வாக்குப் பண்ணியிருந்தான். அவன் உலகப்பிரகாரமான கலப்பையிலிருந்து தன் கையை எடுத்து, கர்த்தரைப் பின்பற்றும் கலப்பையில் கையை வைத்திருந்தான். அதன் விளைவாக இப்பொழுது எலியாவின் இறுதிப் பயணத்தின்போது உடனிருக்கும் பாக்கியத்தைப் பெற்றான். எலியாவும் எலிசாவும்…

January

இறுதிப்பயணம்

2025 ஜனவரி 15 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,1)  “கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனான்” (வசனம் 1). சாமானிய மனிதனாயிருந்தும் உறுதியான விசுவாசத்தோடும், வல்லமையான மனிதனாயிருந்தும் மிகுந்த தாழ்மையோடும், மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தவனாயிருந்தும் எளிமையோடும் வாழ்ந்தவனாகிய எலியாவின் வாழ்க்கைப் பயணம் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. கர்த்தர் எலியாவைச் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்போகிறார் என்னும் செய்தி அவனுடைய நெருங்கிய சீடர்களின் வட்டாரத்தில் பரவியிருந்தது. அவனுடைய வாழ்க்கை…

January

வார்த்தையில் தைரியம்

2025 ஜனவரி 14 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,16 முதல் 18 வரை)  “எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்”(வசனம் 17). தாழ்மையோடும் பணிவோடும் தேவனை அணுகினால் மட்டுமே அவர் தனது செய்தியை மாற்றுவாரே தவிர, அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் அவரை மாற்ற முடியாது. இதற்குமுன் அகசியாவைக் குறித்து எலியா என்ன சொன்னானோ அந்தச் செய்தியையே அவனுடைய முகத்துக்கு நேராக நின்று உரைத்தான்.  “இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்;…

January

வசனத்தில் உறுதியுடனிருத்தல்

2025 ஜனவரி 13 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,15)  “அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்”(வசனம் 15). “அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே” (வசனம் 15) என்னும் கர்த்தருடைய வார்த்தையின்பேரில் எலியா தன்னை அழைக்கும்படி வந்த அந்த ஐம்பது பேருக்குத் தலைவனுடன் மலையிலிருந்து இறங்கிச் சென்றான். எலியா மிகப் பெரிய வல்லமையும் விசுவாசமுமிக்க தீர்க்கதரிசியாக இருந்தாலும், நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்ற முறையில் ராஜாவாகிய அகசியாவைச் சந்திக்க…

January

மனக்கடினத்துக்குத் தண்டனை

2025 ஜனவரி 12 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,13 முதல் 15 வரை)  “இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக” என்றான் (வசனம் 13). அகசியாவிடம் ஒரு பயங்கரமான பிடிவாத குணம் காணப்பட்டது. தன்னுடைய படையில் இருந்து, எலியாவை அழைத்துவரும்படி அனுப்பப்பட்ட இரு தளபதிகளுக்கும் நூறு வீரர்களுக்கும் என்ன ஆனதோ என்பதைப் பற்றிக் கவலைப்படாத…