January

2022 ஜனவரி 15

(வேதபகுதி: யாத்திராகமம் 3:13-15) “அதற்குத் தேவன்: இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார் ” (வச. 14). மோசே இன்னும் தேவனுடைய பணிக்குத் தன்னைத் தகுதியற்றவனாகவே கருதுகிறான். ஆகவே தன்னுடைய அடுத்த மறுப்பை “இஸ்ரவேல் மக்கள் உம்முடைய பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்” என்று கூறுகிறான். “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் எற்படுத்தினவன் யார்” (2:14) என்ற கேள்வியை நாற்பது…

January

2022 ஜனவரி 14

(வேதபகுதி: யாத்திராகமம் 3:11-12) “அப்பொழுது மோசே, தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும், நான் எம்மாத்திரம் என்றான் ” (வச. 11). நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மோசேயிடம் இருந்த மனப்பான்மை முற்றிலும் மாறிவிட்டது. இந்தப் பெரிய வேலைக்கு “நான் எம்மாத்திரம்” என்ற தாழ்மையின் உச்சரிப்பை வெளிப்படுத்தினான். தேவன் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கிறார். இந்தப் பண்பு நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இஸ்ரயேல் மக்களின் முதல்…

January

2022 ஜனவரி 13

(வேதபகுதி: யாத்திராகமம் 3:7-10) “அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளின் நிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனையையும் அறிந்திருக்கிறேன்” (வச. 7). நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர். நம்முடைய உபத்திரவத்தைக் காண்கிறவர்; ஒடுக்குதலின் புலம்புதலுக்குச் செவிகொடுக்கிறவர்; வலியையும் வேதனையையும் அறிகிறவர். இறைவனுக்கு என்னுடைய நிலை தெரியுமா என்று கலங்கத் தேவையில்லை. தேவன் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து, நம்மைப் போன்ற மாம்ச சரீரத்தில் வாழ்ந்தவர். அவர்தாமே சோதிக்கப்பட்டு…

January

2022 ஜனவரி 12

(வேதபகுதி: யாத்திராகமம் 3:3-6) “அப்பொழுது அவர், இங்கே நீ கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்” (வச. 5). நீ எகிப்து நாட்டுக்குப் போகப் பயப்பட வேண்டாம் என்று யாக்கோபுக்குத் தரிசனமாகிப் பேசிய அதே தேவன்தான் (ஆதி. 46:3; யாத். 3:4) இப்பொழுது மோசேக்கும் தரிசனமாகிப் பேசுகிறார். ஈசாக்கின் பயபக்திக்குரியவர் (ஆதி. 31:42) மோசேக்கும் பயபக்திக்குரியவரே. தம்மைப் பார்க்கும்படி அருகில் வர முயன்ற மோசேயிடம் தன்னுடைய…

January

2022 ஜனவரி 11

(வேதபகுதி: யாத்திராகமம் 3:2) “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான்; முட்செடி ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது” (வச. 2). விசுவாசத்தினால் கிறிஸ்துவைத் தரிசித்து, அவரால் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணி எகிப்தின் பொக்கிஷங்களை உதறித் தள்ளிய மோசேக்கு (எபி. 11:26,27) இப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அக்கினி ஜுவாலையின் வாயிலாகக் காட்சியளிக்கிறார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற ஓர் எளிய மேய்ப்பனிடம்…

January

2022 ஜனவரி 10

(வேதபகுதி: யாத்திராகமம் 3:1) “மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான்; அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்” (வச. 1). அரண்மனை ராஜகுமாரன் இப்பொழுது ஆடுகளின் மேய்ப்பன். மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிற ஒரு தலைவனாகவும், பொறுமையும், சாந்தமும் நிறைந்த ஒரு தலைவனாகவும் மாற்றுவதற்கான பயிற்சி இப்பொழுது நிறைவு பெற்றது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் மேய்ப்பர்களைப் பற்றி அதிகமாகவே பேசுகிறது. ஒரு மேய்ப்பனின் பணி கனிவு,…

January

2022 ஜனவரி 09

(வேதபகுதி: யாத்திராகமம் 2:23-25) “தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்” (வச. 24). காலங்கள் கடந்தன. எபிரெயர்களைக் கொடுமைக்குள்ளாக்கிய அரசன் இறந்தான். ஒருவேளை புதிய அரசன் தங்களை மென்மையாக நடத்தலாம் என்று இவர்கள் நம்பியிருக்கலாம். ஆனாலும் இவர்களுடைய துன்பத்துக்கு முடிவில்லை. புதிய பார்வோனும் இவர்களைத் துன்பப்படுத்துவதையே தெரிந்துகொண்டான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த மக்கள் உலகத்திலிருந்து நமக்கு நன்மை உண்டாகும் என்ற பொய்யான நம்பிக்கையைச் சார்ந்துகொள்ளாமல் இருப்பதற்கு துன்பத்தைத் தேவன்…

January

2022 ஜனவரி 08

(வேதபகுதி: யாத்திராகமம் 2:15-22) “அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்திலே பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்” (வச. 22). மோசேயின் வாழ்க்கையை மூன்று நாற்பதுகளாகப் பிரிக்கலாம்: முதல் நாற்பது எகிப்திய இளவரசன், இரண்டாவது நாற்பது மீதியான் தேசத்து மந்தை மேய்ப்பன், கடைசி நாற்பது எபிரெயர்களின் விடுதலைத் தலைவன். உலகக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த மோசே, இப்பொழுது தெய்வீகப் பல்கலைக் கழகத்தின் முதுநிலைப் படிப்புக்கான இரண்டாவது காலகட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கிறான்.…

January

2022 ஜனவரி 07

(வேதபகுதி: யாத்திராகமம் 2:10-14; எபிரெயர். 11: 24-27) “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணினான் ” (எபி. 11:26). எந்தப் பார்வோன் ஆண் பிள்ளைகளையெல்லாம் ஆற்றில் போட்டுவிட ஆணையிட்டானோ, அவனே, “மோசே” என்று ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் “இவன் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டவன்“ என்பதை பறை சாற்றிக்கொண்டிருந்தான். ஒரு நகைமுரண். “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” (சங். 2:4) என்ற சங்கீதக்காரனின் கூற்றை இந்த வகையிலும் தேவன் நிறைவேற்றுவார் போல. தம்முடைய…

January

2022 ஜனவரி 06

(வேதபகுதி: யாத்திராகமம் 2:5-9) “அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயப் பிள்ளைகளில் ஒன்று என்றாள் ” (யாத். 2:6). தேவன் காலங்களைக் கச்சிதமாக ஒருங்கிணைக்கிறவர். குழந்தை வைக்கப்பட்ட பெட்டி கரை ஒதுங்கிய இடம் மற்றும் நேரம், பார்வோனின் குமாரத்தி நீராட வருகிற நேரம் எல்லாம் தேவனின் அநாதி திட்டத்தில் இருந்தன. நைல் நதியின் நீர் அவளுடைய அழுக்கைக் கரைத்ததோ இல்லையோ, ஆனால் இளங்குழந்தையின் அழுகை அவளுடைய கடின இருதயத்தைக்…