January

2022 ஜனவரி 05

(வேதபகுதி: யாத்திராகமம் 2:1-4) “மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்துவைத்தார்கள்” (எபி. 11:23). ஒரு திருமணம், ஒரு குடும்பம், ஒரு குழந்தை. முழு இஸ்ரவேல் குடும்பத்தாரையும் மீட்க ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். நிலைமை மோசமாகும்போது தேவன் தம்முடைய வேலையைத் தொடங்குகிறார். துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிற மக்கள் கூட்டத்திலிருந்தே ஓர் இரட்சகனை ஆயத்தம் செய்கிறார். நம்முடைய பரம மீட்பரும் நேரே வானத்திலிருந்து இறங்காமல்…

January

2022 ஜனவரி 04

(வேதபகுதி: யாத்திராகமம் 1:15-22) “மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்” (வச. 17). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய இரண்டாவது உபாயம் எபிரெய மக்களில் பிறக்கிற ஆண் பிள்ளைகளைக் கொல்வது. இவ்வாறு செய்வதன் மூலமாக எபிரெய இனம் மேலும் பெருக விடாமல் தடுப்பது, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போரிடக்கூடிய ஆண்கள் இல்லாதபடி ஒழிப்பது. இதை நிறைவேற்றுவதற்காக பார்வோனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே சிப்பிராள், பூவாள் என்னும் பிள்ளைப்பேறு பார்க்கிற…

January

2022 ஜனவரி 03

(வேதபகுதி: யாத்திராகமம் 1:9-14) “நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும்” (வச. 10). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய முதல் எண்ணம் பயம். போர் ஏற்பாட்டால், இஸ்ரவேலர் எதிரியோடு சேர்ந்துவிடுவாhர்கள் என்ற பயம். அவர்களுடைய ராணுவ வீரர்கள், அவர்கள் வைத்திருக்கிற போர் ரதங்கள், இன்னும் பல ஆயுதங்கள்; இவற்றின்மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. தங்களுடைய பலவீனம், அவநம்பிக்கை, பயம் இவற்றை மறைக்க இஸ்ரவேலரைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் கிறிஸ்தவர்களைக் எண்ணம் இப்படியானதாகவே இருக்கிறது.…

January

2022 ஜனவரி 02

(வேதபகுதி: யாத்திராகமம் 1:1-8) “யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்” (வச. 8). யாக்கோபும், அவனுடைய பிள்ளைகளும் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குச் சென்றார்கள். இவனுடைய மகன் யோசேப்பு அங்கே அதிபதியாயிருந்தான். இந்த யோசேப்பைக் கொண்டு கர்த்தர் எகிப்தையும், சுற்றியிருந்த நாடுகளையும் பஞ்சத்தினின்று காப்பாற்றினார். யோசேப்பு உயிரோடிருந்த நாட்களிலும், அவனுக்குப் பின் அவனுடைய செயல்களை அறிந்த வரையிலும் யாக்கோபின் இனத்தார் அங்கே சுதந்தரமாக வாழ்ந்தார்கள். இப்பொழுது எகிப்தில் வேறொரு புதிய சாம்ராஜ்யம் உருவாகிறது.…

January

புத்தாண்டின் நுழைவாயில்

“உலகத்தோற்றமுதல் தேவனுக்கு தம்முடைய கிரியையெல்லாம் தெரிந்திருக்கிறது” (அப். 15:18). 1939 -ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததன் வாயிலாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. முழு ஐரோப்பாவையும் போர் மேகம் சூழ்ந்தது, மக்கள் அச்சத்திலும் திகிலிலும் இருந்தார்கள். எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்ற சூழல் காணப்பட்டது. இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக ஆண்டு இறுதிச் செய்தி வழங்க வேண்டிய தருணம். எந்த வகையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை அளிக்கலாம் என்று யோசித்துக்…