February

தொடர்ந்து வாய்ப்புக்கொடுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:13-35) “அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று”(வச. 23). இந்த முறை பார்வோனுக்கு இழப்பு மிக அதிகம். வானத்திலிருந்து தேவ கோபம் கல்மழையாகவும், நெருப்பாகவும் (வச. 23) நேரடியாக இறங்கியது; வேறு வழியின்றி பார்வோனும் இறங்கி வந்தான். “நான் பாவஞ்செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்” என்றான் (வச. 27). இது ஒரு நேர்மையான மன்னிப்புக்கோரலாக…

February

நீதி செய்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:8-12) “அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருக ஜீவன்களும் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று” (வச. 10). ஒரு கைப்பிடி சூளையின் சாம்பல் எத்தகைய பெரிய விளைவுகளை உண்டாக்கும் என பார்வோனிடம் கேட்டால், ஐயோ அது மிகப் பயங்கரமானது என்று தன் வேதனையை விவரிப்பான். எபிரெயர்களின் செங்கல் சூளையின் சாம்பல், வாசனைத் திரவியங்களால் மினுமினுக்காப்பட்ட தங்களுடைய தோல்களில்…

February

தொலைநோக்குப் பார்வையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:1-7) “கர்த்தர் இஸ்ரவேலரின் மிருக ஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருக ஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்” (வச. 4). தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை, தமக்கு ஆராதனை செய்யவிடாதவாறு தடையை உண்டாக்கிய பார்வோனின் மீது சர்வ வல்லமை பொருந்திய தேவன் ஐந்தாவது தண்டனையை அனுப்புகிறார். ஒருவிதக் கொடிய நோய் எகிப்தியரின் மந்தையைத் தாக்கி அழித்தது. இது எகிப்தியரின் சுய பொருளாதார கட்டமைப்பின் மேல் வந்த பெருந்தாக்குதல். மிருகங்களை வேலைக்குப்…

February

தம்முடையவர்களைக் காப்பாற்றுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:20-32) “பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, விசேஷப்படுத்தி, என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்” (வச. 22-23). எகிப்தியர்கள் நதியை வணங்கினார்கள், அதில் புனித நீராடினார்கள். நதியிலிருந்து வருகிற தவளைகளை வணங்கினார்கள், இவைபோக அவர்கள் பேன்கள், வண்டுகள் போன்ற பூச்சியினங்களுக்கும் பலிகளை இட்டார்கள். ஆகவே அவர்களுடைய தவறான நம்பிக்கையை பொய்யானதாக ஆக்கும்படியும், பூமியின் நடுவில் அவரே கர்த்தர்…

January

தம் கரத்தின் வல்லமையை விளங்கப்பண்ணுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:16-19) “ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் புழுதியெல்லாம் பேன்களாயிற்று” (வச. 17). முதலிரண்டு வாதைகளை எச்சரித்துவிட்டு அனுப்பிய தேவன் மூன்றாவது வாதையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரப்பண்ணினார். எகிப்து நாட்டின் புழுதிகளெல்லாம் அருவருப்பான பேன்களாய் மாறி, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் திரளாய் ஒட்டிக்கொண்டன. தேவ எச்சரிப்புக்குச் செவிகொடாதோருக்கு எப்பொழுது…

January

வணங்கத்தக்க ஒரே தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:1-15) “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய், எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு; நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்” (வச. 1-2). எகிப்தியர்களின் புனித நதியின் புனித நீர் இரத்தமாக மாறி ஏழு நாட்களுக்குப் பின் (7:25) தேவன் இரண்டாவது வாதையை அனுப்பினார். கர்த்தர் அறிவித்து ஏழு நாள் சென்ற பின்பு பூமியின் மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று (ஆதி. 7:10). ஏழு…

January

படைப்பின்மேல் அதிகாரமுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 7:14-25) “நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்” (வச. 18). இந்த உலகம் கடவுள் என்று நம்பிக்கொண்டிருக்கிற எல்லாவற்றைக் காட்டிலும் “நானே கர்த்தர்” என்பதை பார்வோன் அறிந்துகொள்ளும்படி தேவன் பார்வோனுக்கு வழங்கிய வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்துக் கொண்டிருந்தான். தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும் (9:16), அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற அவர்கள்…

January

போலிகளை வெளிப்படுத்துகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 7:1-13) “நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்” (வச. 3). சூரியனின் வெப்பத்தால் பனிக்கட்டி உருகி ஓடுகிறது, அதே சூரிய வெப்பத்தால் களிமண் இறுகி கடினமாகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எகிப்தியர்களுக்கு வாதைகளாவும் இஸ்ரயேலருக்கு அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கின்றன. நீதியின் சூரியனின் எச்சரிப்புக்கு ஒருவன் இருதயத்தைத் திறக்காவிட்டால், நியாயத்தீர்ப்பு என்னும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். பார்வோனுக்கு இரண்டாவது சம்பவித்தது. பல நேரங்களில் இஸ்ரவேல் மக்களும் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்,…

January

முன்னதாகவே ஆயத்தம் செய்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:14-30) “இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளை பெற்ற மோசேயும் ஆரோனும் இவர்களே” (வச. 26). தேவனுடைய தெரிந்தெடுப்பின் அட்டவணை இயற்கையின்படியானது அல்ல, மாறாக அது இறையாண்மைமிக்க அவருடைய கிருபையின்படியானது. இந்தப் பகுதி இஸ்ரயேல் வம்சத்தாரின் தெரிந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களும் அவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம் மோசே மற்றும் ஆரோனின் பூர்வீகத்தை தெரிவிப்பதே. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த மோசே இப்புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டான். மிகவும் சாதாரண மனிதர்களைக்…

January

மீண்டும் பணிக்கு அனுப்புகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:9-13) “மோசே கர்த்தருடைய சந்நிதானத்திலே நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்” (வச. 12). இஸ்ரயேல் புத்திரரர் செவிகொடாமற்போனது, மோசேயை அடுத்த தீர்மானத்துக்கு நேராக நடத்தியது. தேவனுடைய ஜனங்களே கீழ்ப்படிய மறுக்கும்போது, உலகத்தின் பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படிவார்கள் என்று தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினான். இஸ்ரயேலின் மூப்பர்களே கர்த்தருடைய அற்புதங்களை இவ்வளவு எளிதில் மறப்பார்களாயின் (4:29-31), பார்வோன் எப்படி ஏற்றுக்கொள்வான் எனப் பயந்தான். கர்த்தருடைய…