February

என்றென்றும் வழிநடத்தும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 13:17-22) “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார்” (வச. 21). கர்த்தர் பாவிகளுக்கு ஓர் இரட்சகராகவும், அடிமைகளுக்கு ஒரு விடுதலையாளராகவும், பயணிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். தம் மக்கள்மேல் இளகிய மனதுடையவர். தகுதிக்கு மிஞ்சி பாரத்தைச் சுமத்தாதவர். கழுகு தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து செல்வது போல் சுமந்து செல்கிறவர். போர் நமக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்று அறிந்து அதை…

February

பாவிகளை மீட்கும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 13:1-16) “இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருக ஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்” (வச. 2). மீட்கப்பட்ட மக்கள் மீட்பருக்குச் சொந்தமானவர்கள். ஆகவே தம்முடையவர்கள் என்ற முறையில் முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தின் ஆண்மக்களில் முதற்பிள்ளைகளை எனக்கென்று அவர்களைப் பிரித்தெடுத்துப் அர்ப்பணியுங்கள் என்று உரிமைகோருகிறார். நாமும் தேவனால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறோம், நாம் அவருக்கே சொந்தமானவர்கள் (1 கொரி. 6:20). மீட்பு என்னும் இஞ்சினைத் தொடர்ந்து வரும் பெட்டிகளே அர்ப்பணிப்பும் பரிசுத்தமும்.…

February

பாகுபாடு காட்டாத கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:43-51) “சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்” (வச. 49). தேவன் பாகுபாடு காட்டுகிறவர் அல்லர், ஆயினும் தம்முடையவர்களுக்கும் தம்முடையவர்கள் அல்லாதோருக்கும் வேறுபாட்டைக் காண்பிக்க விரும்புகிறார். மேலும் தம்முடைய நியமங்களை முறையற்ற வகையில் நிறைவேற்றப்படுவதையும் அவர் விரும்புகிறதில்லை. ஆகவே, சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற தேவனுடைய வீட்டில் நடந்துகொள்ளவேண்டிய முறைகளைத் தெரிவித்திருக்கிறார் (1 தீமோ. 3:15). கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்முடைய விருப்பப்படியெல்லாம் வாழ நினைக்கிற ஒரு விசாலமான வழி அல்ல,…

February

பெலவீனர்களையும் பெலவான்களாகக் காண்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:31-42) “நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்திலிருந்து புறப்பட்டது” (வச. 41). கர்த்தர் உண்டுபண்ணிய அற்புதச் செயல்களால் எகிப்தியரில் பலரும் கவரப்பட்டிருந்தார்கள். எபிரெயர்களோடு சேர்ந்து, அழிவுக்குப் பயந்து வேறு இன மக்களும் புறப்பட்டார்கள். வெளியரங்கமாகத் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையிட்டு, உள்ளுக்குள் மெய்யான மனந்திரும்புதல் அற்ற விசுவாசிகளுக்கு இவர்கள் அடையாளமாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் கிறிஸ்துவுக்குச் சம்பந்தமில்லாதோர் இன்று பெருகியிருக்கிறார்கள். கிறிஸ்துவின் அற்புதங்களைக் கண்டு அநேகர் அவரைப் பின்பற்றினார்கள்,…

February

விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காண்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:21-30) “கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுவதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டால், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்” (வச. 23). “சுவிசேஷம் கர்த்தரை அளவற்ற இரக்கமுள்ளவராக வெளிப்படுத்தினாலும், அந்த இரக்கம் பாவத்தோடு இணங்கிச் செல்லும் இரக்கமாக வகைப்படுத்தப்படவில்லை. அவருடைய கிருபையின் வழிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கோபத்தின் வெளிப்பாடும் அவசியமாக இருக்கிறது” என்று திருவாளர் வைன் கூறினார். பஸ்காவை வீட்டுக்குள்ளேயே புசிக்க…

February

பரிசுத்தத்தை விரும்புகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:15-20) “புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்க வேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்” (வச. 15). பஸ்கா அனுசரிப்பும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுதலும் வேறு வேறானவை: ஆயினும் பிரிக்க முடியாதவை. பஸ்காவுடன் இணைந்து ஏழு நாட்கள் புளிப்பில்லாத அதாவது ஈஸ்ட் கலக்காத அப்பத்தை அவர்கள் சாப்பிடவேண்டும். இஸ்ரயேலர் இரட்சிக்கப்படுவதற்காக புளிப்பில்லா…

February

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 12:1-14) “நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்” (வச. 3). பூட்டிய வீட்டுக்குள் அடிக்கப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியின் மரணம் ஒரு நாட்டின் விடுதலைக்கான கதவைத் திறந்துவிடுகிறது. பிறந்து ஓராண்டு நிறைவுற்ற இளம் ஆட்டுக்குட்டியின் மரணம் நானூறு ஆண்டுகால அடிமை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓர் எளிய ஆட்டுக்குட்டியின் முடிவு இஸ்ரயேலர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது.…

February

தயவுபாராட்டுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 11:1-10) “இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவனவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்” (வச. 2). “இன்னும் ஒரு வாதை” (வச. 1) என்பது பத்தாவதும் இறுதியானதுமான தண்டனையை முன்னறிவிக்கிறது. எகிப்திய குடும்பங்களின் தலைப்பிள்ளை மரணமே அது. பாவம் தன்னுடைய இறுதிப் பயணத்தை மரணத்தில் முடிக்கிறது. அரசன் முதல் அடிமை வரை எல்லோருடைய வீடுகளிலும் மிகுந்த ஓலத்தையும், கண்ணீரையும் வரவழைக்கும் என்று சொல்லப்பட்டது (வச. 5). பாவத்தின் கூலியாகிய…

February

ஆராதனைக்குத் தகுதியான தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 10:21-29) “மோசே தன் கையை வானத்துக்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்று நாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று” (வச. 22). சூரியனை உருவாக்கியவரும், சூரியனைக் காட்டிலும் வலிமையானவருமாகிய கர்த்தரால், எகிப்தின் சூரியக் கடவுளான ‘ரா’வின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே மூன்று நாள் காரிருள் (வச. 22). எகிப்தியரின் வழிபாடு பொய்யாக்கப்பட்டது, அவர்களுடைய கடவுளர்களது சக்தியின்மை நிரூபிக்கப்பட்டது. வெளிச்சம் மங்கியது, இருள் வந்தது, அவர்களுக்கு தேவ ஒத்தாசை அற்றுப்போயிற்று. பொல்லாங்கு செய்கிற எவனும்…

February

நம்முடைய அனைத்துக்குமான தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 10:1-20) “அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும், எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்றான்” (வச. 9). வாதைகள் தேவ தண்டனையின் அடையாளங்களாகவே இருக்கின்றன. அவை பார்வோன் கர்த்தரே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமின்றி, இந்தச் செய்தி தலைமுறை கடந்தும் சொல்லப்படுவதன் வாயிலாக இஸ்ரயேல் சந்ததியினரும் கர்த்தரே மெய்யான தேவன் அறிந்துகொள்ளப்பபடுவதற்காகவும் கொடுக்கப்பட்டன. நான்காயிரம்…