February

நமது குடும்பங்களை நேசிக்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 18:1-12) “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்” (வச. 6). நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் இங்கே மோசேயின் குடும்பத்தாரை மீண்டும் சந்திக்கிறோம் (4:24-26). மோசே அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டிருந்தான் (வச. 2). இப்பொழுது கர்த்தரை முன்னிட்டு மனைவியும் பிள்ளைகளும் மோசேயைத் தேடிவருகிறார்கள். இந்த உலகத்தில், பல நிகழ்வுகளை முன்னிட்டு பல வேளைகளில் நாம் ஒன்று கூடுகிறோம். இவை…

February

யெகோவாநிசியாகிய நமது கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 17:8-16) “அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்” (வச. 9). உலகமாகிய எகிப்திலிருந்தும், சாத்தானாகிய பார்வோனிடமிருந்தும் விடுதலை பெற்று, தங்களைக் கிறிஸ்துவுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, ரெவிதீமிலே கன்மலையின் நீராகிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்று புதிய சுபாவத்துக்குப் பங்குள்ள விசுவாசிகள் எதிர்கொள்ள வேண்டியது பழைய சுபாவமாம் மாம்சத்துக்கு அடையாளமாயிருக்கிற அமலேக்கியர்களுடனான போர். மாம்சம் ஆவிக்கு…

February

அடிக்கப்பட்ட கன்மலையாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 17:1-7) “பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும், கர்த்தருடைய கட்டளையின்படியே சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.” (வச. 1). இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய விசுவாசத் தேர்வைச் சந்திக்கிறார்கள். தேவனைச் சார்ந்துகொள்ளும் அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது. தேவன் அவர்களைத் தங்கச் செய்த இடத்தில் தண்ணீர் இல்லை (வச. 1). தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற ஒவ்வொரு நிகழ்வுகளும், அவை நிறைவோ அல்லது…

February

நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 16:22-36) “ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள். … கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்” (வச. 22,34). ஏழாம் நாள் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகையால், ஆறாம் நாளில் இரண்டு மடங்கு மன்னாவைச் சேகரித்தார்கள் (வச. 22). புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் ஓய்வுநாளை ஆசரிப்பவர்கள் அல்லர், மாறாக, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல் நாளில் அவரை ஆராதிப்பவர்கள். ஆயினும்…

February

நம்முடைய மன்னாவாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 16:13-21) “இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து ஒருவரையொருவர் பார்த்து, இது என்ன என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களை நோக்கி, இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்” (வச. 15). நம்முடைய இந்த உலகமென்னும் வனாந்தரப் பயணத்தில் நாம் பெலன் பெற்று தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கும், வாழ்வதற்குமான தேவ கிருபையின் அதிசயமான ஏற்பாடே வானத்திலிருந்து இறங்கிய மன்னா. இந்த மன்னா வார்த்தையாகிய கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைiயும் பிரதிபலிக்கிற சித்திரமாயிருக்கிறது. கிறிஸ்துவே…

February

கிருபையும் இரக்கத்தையும் காண்பிக்கிற கர்த்தர்

 (வேதபகுதி: யாத்திராகமம் 16:1-12) “ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தர திசையாய்த் திரும்பிப் பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது” (வச. 10). நீருற்றுகளும், பேரீட்சை மரங்களும் நிறைந்த ஏலீமுக்கும், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட சீனாய்க்கும் நடுவாக இருக்கிற சீன் வனாந்தரத்துக்கு வந்தார்கள் (வச. 1). மக்களுடைய முறுமுறுப்புகளுக்குப் பதிலாக கர்த்தருடைய மகிமை வெளிப்பட்ட இடம். நம்முடைய பயணத்தின் அடுத்த நிறுத்தம் தேவனுடைய மகிமையும் கிருபையும் அளவற்ற வகையில் வெளிப்படுகிற இடமாக இருக்கலாம்.…

February

மாராவை மதுரமாக்குகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 15:22-27) “மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான், அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில்போட்டவுடனே அது மதுரமான தண்ணீராயிற்று” (வச. 25). இரட்சிப்பில் தொடங்குகிற நம்முடைய பயணம் மகிமையில் முற்றுப்பெறும். இவ்விரண்டுக்கும் இடையிலான சாலை, வனாந்தரம் என்னும் இந்த உலகத்தின் வழியாகச் செல்கிறது. சூர் வனாந்தரத்திலிருந்து மூன்று நாள் பயணத்தில் மாரா வந்தார்கள் (வச. 22-23). மூன்று நாள் பிரயாணம் செய்து நாங்கள் வனாந்தரத்தில் ஆராதனை செய்ய எங்களைப் போகவிடு…

February

பாட்டுடைத் தலைவனாகிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 15:1-21) “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்” (வச. 2). தேவனைப் புகழுவதற்கும், அவர் பண்பைப் போற்றுவதற்கும் பாடல்கள் ஓர் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் காக்கப்பட்டு, செங்கடலைக் கடந்த இரட்சிக்கப்பட்ட ஒரு விசுவாசியால் மட்டுமே கர்த்தரைப் பற்றிய பொருள் நிறைந்த பாடல்களை மகிழ்ச்சி பொங்கப் பாடமுடியும். இளைய குமாரன்…

February

நம்முடைய புதிய எஜமானனாகிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 14:15-31) “இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது” (வச. 22). இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்து சென்றது அவர்களது வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்பட்ட தனித்துவமிக்க ஒரு நிகழ்வாகும். “விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்” (எபி. 11:29). மோதி அடிக்கிற அலைகளின் நடுவாகச் செல்வது சாத்தியமற்றது, ஆயினும் தேவன்மீதுள்ள விசுவாசம் அதைச் சாத்தியமாக்குகிறது. “நீங்கள் நின்றுகொண்டிருங்கள்” (வச. 13)…

February

நம்முடைய சார்பாக இருக்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 14:1-14) “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எதிப்தியரை என்றைக்கும் காணமாட்டீர்கள்” (வச. 13). கர்த்தருடைய சித்தத்தின் மையத்தில் இருப்பதே அல்லாமல் இந்த உலகத்தில் பாதுகாப்பு மிக்க இடம் வேறு எதுவும் இல்லை. அது கடக்கவியலா கடற்கரையாக இருக்கலாம், அல்லது வழிகாணா வனாந்தரமாக இருக்கலாம், எதுவாயினும் தேவனுடைய பிள்ளைகளுக்கு அதுவே அடைக்கலம். ஆம் சமுத்திரக் கரையிலேயே தேவன் இஸ்ரயேலரை…