March

இழப்பைச் சரிசெய்தல் என்னும் நற்குணம்

(வேதபகுதி: யாத்திராகமம் 22:1-15) “ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும் அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்” (வச. 14). இஸ்ரயேலருடைய வாழ்க்கை முறை கிராமத்துடனும், விவசாயத்துடனும், கால்நடைகளுடனும் பின்னிப்பிணைந்தது. கர்த்தர் இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மையும் நீதியும் ஒப்புவித்தலும் காணப்படும்படியான சட்டங்களை வரையறுக்கிறார். இவர்களுடைய சொத்துகள், ஆடு மாடுகள், உணவு தானியங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதைக் குறித்து தனிமனிதப் பொறுப்பையும், சமுதாயக் கடமையையும் இது…

March

மனிதனின் சமுதாயப் பொறுப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 21:28-36) “ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்பட வேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்” (வச. 13). மனிதன் சமுதாயப் பொறுப்புள்ளவனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பிறர் நலனில் அக்கறை கொள்ளுதல் வேண்டும், இல்லையேல் அது தண்டனைக்குரியது என்று இன்றியமையாத பாடத்தை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம். தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாயிருந்தால் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள…

March

மனிதரிடத்தில் அன்புகூருதல்

(வேதபகுதி: யாத்திராகமம் 21:12-27) “ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை நியமிப்பேன்” (வச. 13). பத்துக் கற்பனைகளின் சாரம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. தேவனை நேசிக்கிறவன் மனிதரையும் நேசிக்க வேண்டும். இந்த அன்பை எந்தெந்த வழிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள், ஒருவரையொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள். அன்பில்லாதபோது இந்த உறவுமுறையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கான தேவ ஆலோசனையே…

March

அன்பினால் ஒப்புவித்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 21:1-11) “அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்வானானால்” (வச. 5). எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக கொடூரமான முறையிலும் நியாயமற்ற வகையிலும் நடத்தப்பட்டார்கள். அடிமைகளின் சோகக் கதையை இவ்வுலக வரலாறும் நமக்கு அறிவிக்கிறது. ஆகவே விடுதலை பெற்ற மக்கள் அடிமைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கரிசணையுடனும் அக்கறையுடனும் அவர்களை நடத்த வேண்டும் என்று தேவன் போதிக்கிறார். கடன்…

March

அன்பினால் கிரியை செய்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 20:1-26) “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர் களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6). இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்கிய தேவனின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இந்தப் பிரமாணங்கள் (வச. 2). எகிப்தின் தெய்வங்கள், அவற்றின் சிலை உருவங்கள், வணங்கும் முறை, அவர்களுடைய கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் யாவும் இஸ்ரயேல் மக்களால் அறியப்பட்ட ஒன்று. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிபாட்டு முறை, வாழ்க்கை முறைக்கான தேவனின் எதிர்பார்ப்புகளாக இந்தக் கற்பனைகள் விளங்குகின்றன.…

March

புதிய உடன்படிக்கையின் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:16-25) “மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும், மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (வச. 16). “கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்“ என்ற இஸ்ரயேலர்களின் அர்ப்பணிப்பு போற்றக்கூடியதாக இருப்பினும் (வச. 8), அவர்கள் யாருடன் இவ்விதமாகக் கூறுகிறோம் என்பதை முழுமையாக உணராதவர்களாக இருந்தார்கள். ஆகவே தேவன் தம்மை யாரென்று காண்பிக்கும்பொருட்டு அவர்களுக்கு வெளிப்படுத்தினார். மேலும் மக்கள் தேவனின் வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிவோம் என்று உடன்படிக்கை செய்தால்,…

February

பரிசுத்தம் நாடும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:9-15) “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்” (வச. 11,12). இங்கே மோசே தேவனுக்கும் மக்களுக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறார். தேவனுடைய வார்த்தைகளை மக்களிடத்தில் தெரிவிப்பதற்கும், மக்களின் எண்ண ஓட்டங்களை தேவனிடத்தில் பிரதிபலிப்பதற்கும் அவர் பள்ளத்தாக்குக்கும் மலைக்குமாக ஏறி இறங்குகிறார். இப்பொழுது நமக்கான ஒரே மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே. இவர் மூலமாக நாம் எப்பொழுதும் தேவ…

February

நம்மைச் சிறப்பானவர்களாக்கிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:5-8) “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது ” (வச. 5). பூமியைச் சொந்தமாகக் கொண்டிருப்பவரின் சொந்தங்களாக இருக்கும்படி இஸ்ரயேல் மக்கள் அழைக்கப்பட்டார்கள். பூமியெல்லாம் அவருக்குச் சொந்தமாக இருந்தாலும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்களே அவருக்கென்று ஒரு சிறப்பான பொக்கிஷமாக இருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் பேதுரு நம்மைக் குறித்து, “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி”, “ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்”, “பரிசுத்த ஜாதி”,…

February

நம்மைச் சுமந்து வருகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:1-4) “நான் எதிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளினுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையில் சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்” (வச. 4). முன்னமே கர்த்தர் மோசேக்கு எரிகிற முட்செட்டியில் தரிசனமானபோது உறுதியளித்திருந்தபடியே (3:12), இப்பொழுது சீனாய் வனாந்தரத்துக்கு அவர்களை அழைத்துவந்தார் (வச. 1,2). இஸ்ரயேலர் வழியில் பல கடினமான சூழ்நிலைகளையும், தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்கள். ஆயினும் தேவன் தாம் சொன்னபடியே இந்த இடத்துக்கு அவர்களை அழைத்து வந்துவிட்டார். தேவன் உண்மையுள்ளவர்; தாம் சொன்ன வார்த்தைகளில்…

February

ஆலோசனைக் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 18:13-27) “மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கி சாயங்காலம் மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்” (வச. 13). குடும்பம் முக்கியமானது, அதேவேளையில் கர்த்தர் நமக்கு அருளிய பணியும் முக்கியமானது. குடும்பத்தின்மீதுள்ள ஆசாபாசம் கர்த்தருடைய காரியங்களில் நாம் ஈடுபடுவதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது. மோசே மாறுநாளே தன்னுடைய வேலையைத் தொடங்கிவிட்டான் (வச. 13). மேலும் குடும்பத்தாரின் ஆதிக்கத்தால், கர்த்தருடைய பணியில் இடையூறு உண்டாகாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்குமாக இஸ்ரவேலை வழிநடத்தும் பொறுப்பையும்…