March

தேவகோபம் தணிகிற இடம்

(யாத்திராகமம் 25:17-22; 37:6-9) “பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது” (வச. 17). கிருபாசனம் எவ்விதக் கலப்படமும் இல்லாமல் சுத்தமான பசும்பொன்னினால் ஆனது. உடன்படிக்கைப் பெட்டியைப் போல இதில் சீத்திம் மரம் கலக்கப்படவில்லை. ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களிலேயே இது ஒன்றுதான் மிகவும் மதிப்புள்ள பரிசுத்த பொருள். இதன்மீது எதிர் எதிராக கீழ்நோக்கிப் பார்த்தவண்ணம் இரு கேருபீன்கள் இருந்தன. இவை வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலம் பயபக்திக்குரிய இடமாக இருந்தது.…

March

மனிதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிற தேவன்

(யாத்திராகமம் 25:10-16; 37:1-5) “சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியையைப் பண்ணக்கடவர்கள் ” (வச. 10). தேவன் தாம் பூமியில் வாசம்பண்ணுகிற வாசஸ்தலத்தின் பொருட்களில் முதலாவது குறிப்பு உடன்படிக்கைப் பெட்டி அல்லது சாட்சிப் பெட்டியைப் பற்றியது. இதுவே அவருடைய மகிமை வெளிப்படுகிற தேவ ஆசனம் (சங். 80:1; 99;1). இது சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, பசும்பொன்னால் மூடப்பட்டது. இது இயேசு கிறிஸ்துவையும், மரமும், பொன்னும் அவருடைய தெய்வீகத்தையும், மனுஷீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரயேல் மக்களுடைய வனாந்தர…

March

மனிதர்களோடு வாசம்பண்ண விரும்புகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:1-9) “நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக” (வச. 9). தேவன் கற்களினால் எழுதப்பட்ட தம்முடைய பிரமாணத்தை எழுதிக் கொடுக்கும்படி மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். அதைத் தொடர்ந்து, மனிதர்களின் நடுவில் நான் வாசம்பண்ண விரும்புகிறேன் என்றும், அதற்கான ஒரு வாசஸ்தலத்தை உருவாக்க வேண்டும் என்ற தம்முடைய மனவாஞ்சையைத் தெரிவிக்கிறார். பரலோகத்தில் தூதர்களின் துதிக்கு நடுவில் வீற்றிருக்கிற தேவன் இந்தப் பூமியில் மனிதர்களின் நடுவிலும் வாசம்பண்ண விரும்புகிறார்…

March

மேகத்தில் வெளிப்பட்ட கர்த்தருடைய மகிமை

(வேதபகுதி: யாத்திராகமம் 24:12-18) “கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்” (வச. 16). மோசே சீனாய் மலையில் ஏறினான், மகிமையின் மேகம் மூடிக்கொண்டது, ஆறு நாள் காத்திருந்தான், ஏழாம் நாளில் கர்த்தர் அவனை அழைத்தார். அங்கே கர்த்தர் தம்முடைய பிரமாணங்களையும் கற்பனைகளையும் எழுதிக் கொடுத்தார். இதுவே இஸ்ரயேல் மக்கள் கடைப்பிடிக்கும்படியான பரிசுத்தமான தேவனின் பிரமாணங்கள். இதைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில், “எழுத்துகளினால்…

March

தேவனிடம் நெருங்கிச் சேரும் சிலாக்கியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 24:1-11) “மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபத்து வரலாம்; அவர்கள் சமீபத்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவர வேண்டாம் என்றார்” (வச. 2). கர்த்தரிடத்தில் நெருங்கிச் செல்வதற்கு பலவித படிநிலைகளை இப்பகுதியில் காண்கிறோம். மக்கள் தூரத்தில் நிற்க வேண்டும் (வச. 2). ஆரோனும், நாதாபும், அபியூவும், எழுபது மூப்பர்களும் மலையில் ஏறலாம் ஆயினும் தள்ளியே நின்று பணிந்து கொள்ள வேண்டும் (வச. 1). மோசேயும் யோசுவாவும் இன்னும் சற்று கர்த்தரிடத்தில் நெருங்கிச் சென்றார்கள் (வச. 13).…

March

பரலோகப் பயணியின் விசுவாசமும் கீழ்ப்படிதலும்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:20-36) “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20). நான் ஒரு தூதனை அனுப்புவேன், அவர் உங்களுக்கு முன்னே போவார், வெற்றியைத் தருவார், உங்களைக் காப்பாற்றுவார், பாதுகாப்பார், ஆரோக்கியம் நல்குவார், ஆயுளைப் பெருக்குவார், சந்ததியைப் பெருகப்பண்ணுவார் என்னும் வாக்குறுதிகளை தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கினார். கிறிஸ்துவே இந்தத் தூதன் (ஒப்பிடுக 1 கொரி. 10:9). இதை அனுபவிப்பதற்கு…

March

அர்ப்பணிப்புள்ள ஆராதனை

(வேதபகுதி: யாத்திராகமம் 23:13-19) “… என் சந்நிதியில் வெறுங்கையாய் வர வேண்டாம்” (வச. 15). இஸ்ரயேல் மக்கள் பண்டிகை கொண்டாடும்படி ஓராண்டில் மூன்று தடவை கூடிவர வேண்டும். மீட்கப்பட்ட மக்களாகிய நாம், நம்முடைய மீட்பின் கர்த்தருக்கு நம்முடைய பக்தி மிகுந்த கனத்தையும், இதயபூர்வமான நன்றிகளையும் கிரமமாக அர்ப்பணிக்க கடன்பட்டுள்ளோம். அவர்கள் ஆண்டுக்கு மூன்று முறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் (பின்னாட்களில் எருசலேமில்) கூடினார்கள். நமக்கோ, அவரை எங்கும் கூடி ஆராதிக்கும்படியான சிலாக்கியத்தை அருளியிருக்கிறார். அவர்களுடைய பஸ்காவும், அறுப்புக்கால…

March

படைப்புகள் யாவற்றின்மேலும் அக்கறையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:10-12) “ஆறு நாள் வேலையைச் செய்து, ஏழாம் நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக” (வச. 12). தேவனை ஆராதிப்பதும், அவர் அவர்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலத்தில் வேலை செய்வதும் ஒன்றுக்கொன்று இணைந்த செயலாகவே இஸ்ரயேலருக்கு இருந்தது. அதாவது இஸ்ரயேலர்களின் பண்டிகைகள் அவர்களுடைய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட காலங்களின்படியே அனுசரிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தன (ஒப்பிடுக லேவி. 23). ஏழாவது நாள் ஓய்வு நாள், அவ்வாறே ஏழாவது…

March

தீமையை வெறுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:1-9) “தீமைசெய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக, வழக்கிலே நியாயத்தைப்புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து உத்தரவு சொல்லாதிருப்பாயாக” (வச. 2). இஸ்ரயேல் மக்கள் தேவனுடைய சுதந்தரர், அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இவர்கள் தேவனிடமிருந்து சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள். இவர்கள் உலகம் சார்ந்த தங்கள் நடக்கைகளில் சிறப்பான குணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த வேதபகுதில், இவர்கள் உண்மையுள்ளவர்களாக, உத்தமமானவர்களாக, பாகுபாடுகாட்டாதவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். சுற்றத்தாருடன் நம்முடைய உறவு முக்கியம். நம்முடைய…

March

எளியவர்களுக்குச் செவிகொடுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 22:16-31) “அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே” (வச. 21). தேவனுடைய மக்கள் என்ற முறையிலும், அவரால் மீட்கப்பட்டவர்கள் என்ற முறையிலும் இஸ்ரயேலர்கள் இந்த உலகத்தார் அனுபவிக்கிற சில காரியங்களை செய்யும்படி அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்த உலகத்தாரோடுள்ள தொடர்பில் அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்து கணக்குக் கேட்கிறவராகவும் அவர் இருக்கிறார். “நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாயிருப்பீர்கள்” (வச. 31) என்று அவர் அழைக்கிறதால் அழைப்புக்குப் பாத்திரமான செயல்களை அவர் எதிர்பார்க்கிறார். இஸ்ரயேலர்களுக்கு…