March

ஆசாரியத்துவத்தின் சிறப்பு

வேத பகுதி: யாத்திராகமம் 28:2-3 “உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக” (வச. 2). தேவ ஆலோசனையின்படி, மோசேயால் ஆசாரியர்கள் ஒரு சிறப்பு வகுப்பாராக, மக்களுக்காக தேவனிடத்தில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள். பிற இஸ்ரயேல் மக்கள் அனுபவிக்காத பலவிதமான சிலாக்கியங்களையும் சலுகைகளையும் இவர்கள் அனுபவித்தார்கள். தேவனோடு நெருக்கமான வகையில் உறவாடும் ஆசீர்வாதத்தை இவர்கள் பெற்றார்கள். மக்களின் பிரதிநிதிகளாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் விளங்கினார்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் ஆசாரியர்கள் என்ற சிறப்பான அந்தஸ்தைப்…

March

ஆரோன் பெற்ற கிருபையின் அழைப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 28:1) “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக” (வச. 1). தேவ கிருபையின் அற்புதமான தெரிந்தெடுப்பை ஆரோனின் அழைப்பில் காண்கிறோம். இந்நாள்வரை இஸ்ரயேல் மக்களை வழிநடத்திவந்த மோசேயை தேவன் ஆசாரிய ஊழியத்துக்கு அழைக்கவில்லை; மாறாக மோசேயைக் காட்டிலும் பலவிதங்களிலும் குறைந்த தகுதியைப் பெற்றிருந்த ஆரோனை அழைத்தார்.…

March

தேவ மகிமை விளங்கும் கூடாரம்

(வேதபகுதி: யாத்திராகமம் 27:20-21) “ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலமட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்” (வச. 21). ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களைப் பற்றியும் இன்னும் கூறி முடிக்காதபோதிலும், குத்துவிளக்கு எப்பொழுதும் எரியும்படிக்கு மக்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பாக ஆரோன் மற்றும் அவருடைய குமாரருடைய பங்களிப்பு பற்றியும் இடையில் சொல்லப்பட்டுள்ளது. ஆசரிப்புக்கூடாரம் அதனுடைய பொருள்கள் இல்லாமல் பயனற்றது, அவ்வாறே அதில் பணியாற்றும் ஆசாரியர்கள் இல்லாமல் அதன் பொருட்களும் பயனற்றது. ஆகவே ஆசரிப்புக்கூடாரம், அதன்…

March

நுழைவாயிலுக்குள் செல்லும் உரிமை

(வேதபகுதி: யாத்திராகமம் 27:9-19; 38:9-20) “வாசஸ்தலத்துக்குப் பிரகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக” (வச. 9). திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைத் சுற்றியுள்ள மூன்றாவது பிரிவாகிய பிரகாரத்தைப் பற்றி இவ்வசனங்களில் நாம் காண்கிறோம். நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் ஐந்து முழ உயரமும் கொண்ட செவ்வக வடிவமுடையது இது. இதன் கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் இருந்தது. இது மெல்லிய பஞ்சு நூலால் ஆனது. வெளிப்பார்வைக்கு இதன் வெண்மை நிறம் மட்டுமே கண்களுக்குத் தெரியும். பாவ மக்களின் பார்வையில்…

March

புதிய மார்க்கத்துக்கான நுழைவாயில்

(வேதபகுதி: யாத்திராகமம் 27:1-8; 38:1-7) “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக” (வச. 1). சீத்திம் மரத்தாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பலிபீடம் அல்லது தகன பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்தில் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. இது ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் அடக்கிக்கொள்ளக் கூடிய அளவுக்கு இது மிகப் பெரியது. உள்ளே நுழைகிற ஒருவருடைய கண்களில் முதலாவது தெரியக்கூடியது இந்த பலிபீடமே ஆகும்.…

March

பரிசுத்த இடத்துக்கு புதிய மார்க்கம்

 (வேதபகுதி: யாத்திராகமம் 26:31-37; 36:35-38) “அந்தச் திரைச் சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்” (வச. 33). இன்றைய நம்முடைய வேதபகுதியில், பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே ஒரு திரைச் சீலை மூலம் ஒரு பிரிவு உண்டாக்கப்படுகிறதைக் காண்கிறோம் (வச. 33). மேலும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கான வழியாகவும் இது இருக்கிறது. நாம் வெளியே இருந்து படிப்படியாக பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகாபரிசுத்த ஸ்தலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை…

March

முற்றிலும் அழகானவர்

(வேதபகுதி: யாத்திராகமம் 26:15-30; 36:20-34) “வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக” (வச. 15). ஆசரிப்புக் கூடாரத்துக்கு வடிவத்தைக் கொடுக்கிறதும் சாய்ந்துவிழாதபடி தாங்கி நிற்கிறதுமான சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, பொன் தகட்டால் மூடப்பட் பலகையை அடுத்ததாகக் காண்கிறோம் (வச. 15,29). எளிதில் கெட்டுப்போகாத இந்த மரம் கிறிஸ்துவின் மானிடத்தன்மையை நமக்கு முன்பாக வைக்கிறது. கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப் போலவே அவருடைய மானிடத் தன்மையும் உண்மையானது. அவர் எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரருக்கு (மானிடருக்கு) ஒப்பாயிருந்தார். பலகையை…

March

கட்டடம் கட்டிடும் சிற்பிகள்

(வேதபகுதி: யாத்திராகமம் 26:1-14; 36:8-19) “மூடு திரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக” (வச. 1). ஆசாரியர்கள் மட்டுமே பார்க்கிற பொருட்களிலிருந்து இப்பொழுது வெளியே யாவருக்கும் தெரியக்கூடிய ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகளைப் படிக்கிறோம். பலவித நூல்களால் நெய்யப்பட்ட கண்கவர் வண்ணத் திரைகள், இதன் அளவுகள், இதிலுள்ள கேரூபின்களின் சித்திரவடிவமைப்பு, இவற்றைக் இணைக்கும் காதுகள், கொக்கிகள் இவை யாவும் கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நீதியையும், மகிமையையும், ராஜரீகத்தையும், பிதாவுக்கும் பிரியமான ஊழியத்தையும், பூரணத்தையும், தாழ்மையையும், பாடுகளையும் வெளிக்காட்டுகின்றன. திரைகள், கேரூபின்கள், காதுகள், கொக்கிகள்,…

March

ஐக்கியத்துக்கான ஆற்றலின் ஆதாரம்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:31-40; 37:17-24) “பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக” (வச. 31). பரிசுத்த இடத்தில் நாம் பார்க்கிற அடுத்த பொருள் குத்துவிளக்கு ஆகும் (வச. 31). சமுகத்து அப்ப மேசை நம்முடைய ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு சித்திரமாக இருக்குமானால், குத்துவிளக்கு அந்த ஐக்கியம் வளருவதற்கான ஆற்றலின் ஆதாரமாக விளங்குகிறது. இந்த இடத்துக்கு ஆசாரியர்களைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. கிறிஸ்துவுடனான இந்த ஐக்கியத்தை விசுவாசிகள் மட்டுமே அனுபவிக்க முடியுமே தவிர இந்த உலகத்தால் அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும்…

March

ஐக்கியம் பாதுகாக்கப்படுகிற இடம்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:23-30; 37:10-15) “சீத்திம் மரத்தால் ஒரு மேசையையும் உண்டுபண்ணுவாயாக” (வச. 23). நாம் இப்பொழுது ஆண்டுக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மட்டுமே செல்லக்கூடிய இடத்திலிருந்து தினந்தோறும் செல்லக்கூடிய பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்கிறோம். இங்கே இருக்கிற பொருட்களில் முதலாவது சொல்லப்பட்டிருப்பது அப்பம் வைக்கிற மேசை ஆகும். இது உடன்படிக்கைப் பெட்டியின் அதே அளவிலும் மற்றும் அதே சீத்திம் மரத்தாலும் பசும் பொன்னாலும் ஆனது. வேதத்தில் மேசை பெரும்பாலும் பந்தியுடனும் ஐக்கியத்துடன் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “மேவிபோசேத் நித்தம்…