April

நம்முடைய அன்றாடச் சுத்திகரிப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 30:17-21; 38:8) “கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக” (வச. 18). ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களில், ஆசாரிய ஊழியத்தின் தொடர்பில் மிக முக்கியமானவைகளில் இந்த வெண்கலத் தொட்டியும் ஒன்றாகும். இது பொன் தூபபீடம் வைக்கப்பட்டிருந்த பரிசுத்த ஸ்தலத்துக்கும் வெண்கலப் பலிபீடத்துக்கும் நடுவே வைக்கப்பட்டிருந்தது. பலியின் மூலமாகத் தகுதியாக்கப்படுகிற ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குச் சென்று தூபங்காட்டுவதற்கு முன் (ஆராதிப்பதற்கு முன்)…

April

ஆத்துமாவுக்காக மீட்கும் பொருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:11-16) “நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப் பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன் தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்” (வச. 12). இஸ்ரயேல் மக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதற்கான அடையாளமாகவே ஆண்டுதோறும் பஸ்காவை ஆசரிக்கும்படி தேவனால் கட்டளை பெற்றிருந்தார்கள். ஆகவே இங்கே சொல்லப்பட்டிருக்கிற மீட்கும் பொருள் (வச. 12) என்பது அவர்களுடைய…

April

நமக்காகப் பரிந்துபேசும் பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:1-10; 37:25-28) “தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக” (வச. 1). ஆசாரியர்களின் சுத்திகரிப்பும் பிரதிஷ்டையும் நிறைவேறிய பின்பு மீண்டுமாக ஆசரிப்புக்கூடாரப் பொருட்களில் ஒன்றான தூப பீடத்தைப் பற்றிய விவரங்களைக் காண்கிறோம். வெண்கலப் பலிபீடத்தில் செலுத்தப்படுகிற பலி, சுத்திகரிப்பு முறைமைகள் இவற்றுக்கு அடுத்ததாக பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிற பொன் தூப பீடம் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பலிமரணமும், அதனால் உண்டாகும் பரிசுத்தமாகுதலும் நாம் தேவனை ஆராதிக்கும்படியான தகுதியை வழங்கி, பொற்தூப பீடத்துக்கு நேராக…

April

கிறிஸ்துவுக்குள் பூரணமாக்கப்பட்டோரின் பங்களிப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 29:35-46) “பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு, பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்தம் செய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய் ” (வச. 36). ஆசாரியர்களைச் சுத்தமாக்கி, தகுதிப்படுத்தும்படி பலிபீடத்தில் பலிகள் செலுத்தப்பட்டன. அதே நேரத்தில் அந்தப் பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவதற்காக அதே பலிபீடத்தில் ஏழு நாட்கள் தொடர்ச்சியாகப் பலிகள் செலுத்தப்பட்டன. தேவ சமூகத்தில் செல்வதற்கு பலிபீடம் ஆசாரியர்களுக்குத் தகுதியை வழங்குவதுபோல, இந்தப் பலிபீடமும் அவருடைய பார்வையில் பூரணமானதாக…

April

விசுவாசிகளின் கிறிஸ்துவோடுள்ள அடையாளம்

(வேதபகுதி: யாத்திராகமம் 29:10-34) “காளையை ஆசரிப்புக்கூடார வாசலுக்குக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவீர்கள்” (வச. 5). ஆரோனும் அவனுடைய குமாரரும் ஆசாரியர்களாகப் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு மூன்று பலிகள் செலுத்தப்பட்டன. ஒரு காளை பாவநிவாரண பலியாகவும் (வச. 10-14), ஓர் ஆட்டுக் கடா தகனபலியாகவும் (வச. 15-18), இன்னொரு (பிரதிஷ்டையின்) ஆட்டுக்கடா அவர்களைப் பரிசுத்தமாக்கும்படியாகவும் செலுத்தப்பட்டன. பின்னாட்களில் எல்லா விதமான பலிகளையும் செலுத்தப்போகிற இந்த ஆசாரியர்கள் இப்பொழுது பங்குபெறுகிறவர்களாக இருக்கிறார்கள்.…

March

விசுவாசிகளின் நீதியாயிருக்கிற கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 29:1-9) “அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி …” (வச. 5). ஆரோன் கிறிஸ்துவுக்கு நிழலாக இருக்கிறான். இங்கே ஆரோனும் அவனுடைய குமாரரும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவும் நாமும் இணைந்தே என்றென்றைக்குமாக இருப்போம் என்பதற்கு இது நல்லதோர் அடையாளமாயிருக்கிறது. பரலோகத்திலுள்ள மகா பிரதான ஆசாரியரான கிறிஸ்துவுடனான உறவின் காரணமாக, விசுவாசிகள் தேவனுக்குத் துதி செலுத்துவதில் அவருடன் இணைந்திருக்கிறார்கள்.…

March

விசுவாசிகளோடு இணைந்திருக்கிற பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: யாத்திராகமம் 28:31-43; 39:22-31) “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீல நூலால் உண்டாக்கக்கடவாய்” (வச. 31). ஏபோத்துக்கு கீழாக அணியக்கூடிய அங்கியைக் குறித்து நாம் சிந்திப்போம். இது முழுவதும் ஒரே துணியால், ஒரே வண்ணத்தால் ஆனது. இளநீல நூலால் செய்யப்பட்டது. இது பிரதான ஆசாரியனின் பரலோகக் குணத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஆரோனின் சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடிகளின் வழியாக அங்கியில் இறங்குகிற தைலத்துக்கு ஒப்பாக இருக்கிறது என சகோதரர்களின் ஒற்றுமையை சங்கீதக்காரன் வர்ணிக்கிறான் (சங். 133:1,22).…

March

நம்முடைய வழிகாட்டியாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 28:30) “நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை அவன் இருதயத்தின்மேல் இருக்க வேண்டும்” (வச. 30). மறைவானவைகள் நம்முடைய தேவனுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, … நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியவைகள் (உபா. 29:29). புரிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகளை எழுதிய பவுலும், “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வேன்” (1 கொரி. 13:12) என்று கூறுகிறார். இந்த ஊரீம் தும்மீம் என்பவற்றைப்…

March

நம்முடைய பாசமிக்க ஆண்டவர்

(வேதபகுதி: யாத்திராகமம் 28:15-30) “நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக” (வச. 15). ஆரோனின் ஆசாரிய உடையில் முக்கியமானதும், விலைமிகுந்ததுமான ஒன்று நியாயவிதி மார்ப்பதக்கம் ஆகும். இது கிறிஸ்துவின் இருதயத்தைப் படப்பிடித்துக் காட்டுகிற பழைய ஏற்பாட்டுச் சித்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பலவண்ண நூல்களினால் பின்னல் வேலைபாட்டுடன் சதுர வடிவிலான ஒன்றான இது, பொன் வளையங்கள் மூலமாக ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இஸ்ரயேல் கோத்திரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பன்னிரண்டுவிதமான கற்களும், ஊரீம், தும்மீம் என்ற கற்களும் மாப்பதக்கதில் பதிக்கப்பட்டு…

March

“நம்முடைய பெலனாகிய கிறிஸ்து”

(வேத பகுதி : யாத்திராகமம் 28: 4-14) ஏபோத்தைப் பொன்னினாலும் இள நீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் விசித்திர வேலையாய்ச் செய்யக்கடவர்கள். (வசனம் 6) ஆடைகள் உடலை மறைப்பதற்காக மட்டுமின்றி அழகுக்காகவும், அதிகாரத்துக்காகவும்அடையாளத்துக்காகவும் அணியப்படுகின்றன. ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் சீருடையிலோ அல்லது இராணுவ அதிகாரியின் சீருடையிலோ பலவித குறியீட்டுச் சின்னங்கள் அமைந்திருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பொருளையும், செய்திகளையும் தெரிவிக்கின்றன. மேலும் அவை அவர்களுடைய பதவி, அதிகாரம்,…