ஏப்ரல் 10
ஏப்ரல் 10 நீர் என்னிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர்கள். அதை எனக்குத் தெரியப்படுத்தும் (யோபு 10:2). களைப்படைந்த ஆத்துமாவே, கர்த்தர் உன் நற்குணங்களை வளரச் செய்வதற்கு ஒருவேளை இதைச் செய்யலாம். சோதனைகளாலன்றி நம்மிலுள்ள சில நற்குணங்கள் ஒருபோதும் வெளி வந்திரா, உன் விசுவாசம் வெயில் காலத்திலிருந்ததைவிட, கடும் குளிர்காலத்தில் அதிகமாய் ஒளிவிடும் என்று நீ அறியாயோ. அன்பு சுற்றிலும் இருள் சூழ்ந்தாலன்றி ஒளிவிடாத மின்மினிப் பூச்சிபோல் இருக்கிறது. நம்பிக்கை என்பது வாழ்வாகிய சூரியஒளியில் காணப்படாமல், தாழ்வென்னும் இரவிலே காணப்படும்…