April

ஏப்ரல் 10

ஏப்ரல் 10 நீர் என்னிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர்கள். அதை எனக்குத் தெரியப்படுத்தும் (யோபு 10:2). களைப்படைந்த ஆத்துமாவே, கர்த்தர் உன் நற்குணங்களை வளரச் செய்வதற்கு ஒருவேளை இதைச் செய்யலாம். சோதனைகளாலன்றி நம்மிலுள்ள சில நற்குணங்கள் ஒருபோதும் வெளி வந்திரா, உன் விசுவாசம் வெயில் காலத்திலிருந்ததைவிட, கடும் குளிர்காலத்தில் அதிகமாய் ஒளிவிடும் என்று நீ அறியாயோ. அன்பு சுற்றிலும் இருள் சூழ்ந்தாலன்றி ஒளிவிடாத மின்மினிப் பூச்சிபோல் இருக்கிறது. நம்பிக்கை என்பது வாழ்வாகிய சூரியஒளியில் காணப்படாமல், தாழ்வென்னும் இரவிலே காணப்படும்…

April

ஏப்ரல் 9

ஏப்ரல் 9 இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது (ஆதி.42:36). தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது (ரோ.8:28). அநேகருக்கு சக்தி தேவைப்படுகிறது. எப்படி சக்தி உண்டாகிறது? ஒருநாள் டிராலி வண்டிகள் மின்சார சக்தியால் ஓட்டப்படும் இயந்திரசாலையைக் கடந்து சென்றோம். அநேக உருளைகள் சப்தத்துடன் இரைந்து கொண்டிருப்பதைக் கேட்டு, நாங்கள் வேலையாள் ஒருவனை அச்சக்தியை எங்கனம் உற்பத்தி செய்கிறார்கள் என்று கேட்டோம். சக்கரங்கள் சுற்றுவதினாலும், அதனால் ஏற்படும் தேய்ப்பினாலும் உண்டாகிறது. உராய்தலே மின்சார ஓட்டத்தை உண்டாக்குகிறது என்று அவன்…

April

ஏப்ரல் 8

ஏப்ரல் 8 அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.  ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2.கொரி.12:10). நாம் இதை வார்த்தைக்கு வார்த்தையாகப் பொருள்படுத்திப் பார்த்தால், அதில் முன் காணாத சத்தியங்களைக் கண்டு, அதன் முக்கியத்துவத்தை உணருவோம். ஆனபடியால் நான் பலவீனமாயிருப்பதிலும், தூஷிக்கப்படுவதிலும், துன்புறுத்தப்படுவதிலும், துரத்தப்படுவதிலும், இயேசுவுக்காக ஒரு முடுக்கில் அடைப்பட்டிருப்பதிலும் களிகூருகிறேன். ஏனென்றால் நான் பலவீனமாயிருக்கையில் நான் வெடிமருந்துபோலிருக்கிறேன். நமது வல்லமையையும் சந்தர்ப்பங்களையும் இழந்தபோது, கர்த்தரே நமக்குப் போதுமானவர்…

April

ஏப்ரல் 7

ஏப்ரல் 7 சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் (ஏசா.30:7). தேவனை உண்மையாய் அறிவதற்கு அகத்தில் அமர்ந்து இருப்பது அத்தியாவசியமாம். இதை நான் முதன் முதல் கற்றுக்கொண்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஜீவியத்தில் ஒரு சமயம் அதி அவசர நிலைமை ஒன்று ஏற்பட்டது. உடனே செயல்பட வேண்டுமென்று என் உடலும் உள்ளமும் துடித்தன. ஆனால் அச்சயம் நான் ஒன்றும் செய்யக்கூடாத சூழ்நிலையில் இருந்தேன். உதவி செய்யக்கூடிய ஆளும் அசைவதாய்க் காணோம். என் உள்ளத்தில் பொங்கி எழுந்த புயலால், நான் சின்னா…

April

ஏப்ரல் 6

ஏப்ரல் 6 நான் என் காவலிலே தரித்து அரணிலே நிலை கொண்டிருந்து, அவர் எனக்கு சொல்வாரென்றும்…. கவனித்துப் பார்ப்பேன் என்றேன் (ஆப.2:1). கர்த்தர் உதவி செய்வார் என நம்பி எதிர்பார்திராது விட்டால், உண்மையில் நாம் அவருக்காகக் காத்திருக்கவில்லை. தேவனின் உதவியும் நமக்குக் கிட்டாது. அவரிடமிருந்து பலமும், பாதுகாப்பும் பெற, நாம் எப்போதாவது தவறினால், நாம் அதைப்பெற எதிர்பாத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே காரணம். நமக்கு இரட்சிப்பு வரும் என்று, அது வரும் முன் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்று…

April

ஏப்ரல் 5

ஏப்ரல் 5 உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி….. (2.இராஜா.4:4). அவர்கள் தேவனோடு தனித்திருக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர்கள் செய்ய வேண்டிய காரியம், இயற்கை விதி, மானிட ஆட்சிமுறை, சபை, ஆசாரியத்துவம், கர்த்தருடைய தீர்க்கதரிசி இவற்றோடு சம்பந்தப்பட்டதல்ல. ஆகையால் அவர்கள் எல்லாச் சிருஷ்டிகளையும் விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பாராமல், மனுஷீக யோசனையைச் சார்ந்திராமல், ஒரு மூலைமுடுக்கில் தள்ளப்பட்ட போதிலும், கர்த்தர் மேல் மாத்திரம் சார்ந்திருந்து, அற்புதங்களின் ஊற்றண்டை இருக்கவேண்டியிருந்தது. கர்த்தருடைய திட்டத்தில் இது…

April

ஏப்ரல் 4

ஏப்ரல் 4 அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான் (2.இராஜா.6:17). தேவனே, நாங்கள் பார்க்கத்தக்கதாய் எங்கள் கண்களைத் திறந்தருளும். இதுவே, நாம் நமக்காகவும், பிறருக்காகவும் செய்யவேண்டிய ஜெபம். ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும், தீர்க்கதரிசியைச் சுற்றியிருப்பதுபோல, நம்மை மகிமையுள்ள வெற்றியின் இடத்திற்குக் கொண்டு போகக் காத்துக்கொண்டிருக்கிற தேவனுடைய குதிரைகளாலும் இரதங்களாலும் நிறைந்திருக்கிறது. இவ்விதமாய்க் காண, நம் கண்கள் திறக்கப்படும்பொழுது, நம் ஜீவியத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா விஷயங்களிலும் நம்…

April

ஏப்ரல் 3

ஏப்ரல் 3 நெருப்பில் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள் (ஏசா.24:15) இல் என்ற வார்த்தையை கவனியுங்கள். நமக்குத் துன்பத்தையளிக்கும் சோதனையில் அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டும். தேவன் தமது பக்தர்களில் சிலரை சோதனையாகிய நெருப்பின் வெம்மையை உணரவிடவில்லை. என்றாலும் நெருப்பு சுடும் தன்மையுடையது. இந்த இடத்தில்தான் அவருடைய சற்குணம், அன்பு என்பதில் நாம் வைக்கிற பூரண விசுவாசத்தினால் அவரை மகிமைப்படுத்தவேண்டும். அந்த அன்பே இச்சோதனை நமக்கு வர அனுமதித்தது. மேலும் இச் சோதனையால் தேவனுக்கு அதிக மகிமை வரும் என்று நம்பவேண்டும்.…

April

ஏப்ரல் 2

ஏப்ரல் 2 அவர்கள்…. திரும்பிப் பார்த்தார்கள்…. அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்தில் காணப்பட்டது (யாத்.6:10). மேகத்தில் காணப்படும் வெள்ளிபோன்ற பிரகாசமான ஒரத்தைப் பார்க்கும் வழக்கத்தை உண்டுபண்ணிக்கொள். நடுவிலிருக்கும் கார்மேகத்தைவிட அந்த ஒளியையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிரு! எவ்வளவாக நெருக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் மனம் தளர்ந்துபோக இடம் கொடாதே. மனம் தளர்ந்தவன் செயலற்றுப் போவான். சத்துருவின் அம்புகளை எதிர்க்க அவனாலாகாது. இந்த நிலைமையில் மற்றவர்களுக்காக ஜெபிக்கவும் முடியாது. இந்தச் சத்துரு உன்னை நெருங்குவதாகக் காணும் ஒவ்வொரு அடையாளம் தோன்றும்போது விரியன்பாம்பைக் கண்டு…

April

ஏப்ரல் 1

ஏப்ரல் 1 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15). ஏனென்றால் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் (2.தீமோ.1:12). கடலிலுள்ள என் கப்பல்கள் யாவும் பாய்மரம் உடைந்து, அழிந்து திரும்பினும், நான் சந்தேகியேன். என்னை ஒருபோதும் கைவிடாது, தீமையிலிருந்து நன்மை வரச் செய்யும் கரத்தை நான் நம்புவேன். பாய்மரம் உடைந்ததற்காகா நான் அழுதாலும், என் நம்பிக்கை சிதறிக் கிடக்கும் வேளையிலும், உம்மை நம்புவேன் என்பேன் வெள்ளை சிம்மாசனத்திலிருந்து விடையின்றித் திரும்பினும் நான் சந்தேகியேன் எல்லாம்…