தேவ தயவின் ஐசுவரியம்
(வேதபகுதி: யாத்திராகமம் 33:18-23) “அப்பொழுது அவன், உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்” (வச. 18). ஒரு மத்தியஸ்தனாக முதலாவது, மோசே தேவனிடம், உம்முடைய மக்களை அழித்துவிட வேண்டாம் என்று வேண்டினான். அடுத்ததாக நீர் அவர்கள் நடுவில் பிரசன்னராயிருக்க வேண்டும் என்று கேட்டான். இப்பொழுது தேவனுடைய அன்பில் ஒரு படி இன்னும் நெருக்கமாக முன்னேறி, “உம்முடைய மகிமையைக் எனக்குக் காண்பித்தருளும்” என்றான். முதலிரண்டு விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் தம்முடைய கிருபையால் பதில் அளித்தார். இக்கேள்விக்கு, “என்னுடைய தயையை எல்லாம்…