June

யூன் 28

யூன் 28

… இதோ பரலோகத்தில்திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் (வெளி 4:1).

மத்திய தரைக்கடலில்,கிரேக்க நாட்டுக்கருகிலுள்ள பாறையான ஒரு தீவு பத்மு தீவென்பது. அப்போஸ்தலனாகிய யோவான்,தன் ஆண்டவருக்காகக் கிறிஸ்து நாதருக்காக அளித்த சாட்சியின் நிமித்தமாகத் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். அது மானிடர் வாழ்வதற்கு எற்ற இடமே இல்லை. அவர் எபேசுசபையில் உள்ள தமக்கருமையானவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். சபையாரோடு சேர்ந்துஆண்டவரை ஆராதிக்க அனுமதிக்கப்படவில்லை. விரும்பத்தகாதவர்களோடு சிறையிலிருந்தார். இவ்வாறானசூழ்நிலையில்தான் அவருக்கு மோட்சத்தின் தரிசனக் காட்சிகள் அளிக்கப்பட்டன. அவருக்குஒரு கதவு திறக்கப்பட்டது.

யாக்கோபு தனது தந்தையின்வீட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் போலிருந்தார். பாலை நிலத்தில் தனியாக ஓரிடத்தில் உறங்குவதற்காகப் படுத்தார். உறங்குகையில் அவர் கண்ட கனவு வானத்தையும், பூமியையும் இணைத்தஒரு ஏணி. அதன் உச்சியில் கர்த்தர்.

இவர்களுக்கு மட்டுமல்ல, இன்னும்பலருக்கும் மோட்சவாசல்கள் திறக்கப்பட்டன. உலகப் பிரகாரமாக நோக்கினால், அவர்கள் இருந்தசூழ்நிலைகளில் அவர்களுக்கு இத்தகைய காட்சிகள் காணப்படமாட்டாது.

கைதிகளுக்கும்,சிறையிலடைக்கப்பட்டோருக்கும், நோவு என்னும் இரும்புச் சங்கிலிகளினால் படுக்கையிலேகட்டப்பட்டுக் கிடப்போருக்கும், தனிப் பயணிகளுக்கும், நாடோடிகளாயலைந்து திரிவோருக்கும்,வீட்டில் தொல்லைகளால் ஆலயங்களுக்கும் ஆராதனைகளுக்கும் செல்ல இயலாது அடைபட்டுக்கிடக்கும்அம்மணிகளுக்கும் மோட்சத்தின் கதவுகள் எத்தனை முறை திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் கதவுகள் திறக்கப்படநிபந்தனைகள் உண்டு. ஆவியானவருக்குள்ளாகியிருப்பதென்றால் என்னவென்று உனக்கும்தெரிந்திருக்கவேண்டும். இதயத்தில் தூய்மையுள்ளவனுமாயிருக்கவேண்டும். காட்சிகள் காண,கதவு உனக்காகத் திறக்கப்பட நீ விருப்பமுள்ளவனாக இருக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவைப்பற்றிஅறிகிற அறிவில் சிறப்பு நிலை பெறுவதற்கு ஆகும் எச்செயலையும் நீ பொருள்படுத்தலாகாது. இவ்வாறுஆண்டவரே, நமக்கு எல்லாவற்றிலும் முழுவதையும் ஒப்படைத்து அவரிலேயே அசைக்கிறவர்களாகவும் இருந்தால்நமக்கும் கதவுகள் திறக்கும்.

சில வேளைகளில் அவர் நம்மை

அமர்ந்து ஓய்வு பெறச்சொல்லும்

சில மலைகள் உண்டு,ஆண்டவரிடம்

அவை வெறும் பாறைபோன்றவையே.

மலை உச்சியில் நமக்கென்று

தூய காற்றுகள்தான் உண்டு.

சில சிகரங்கள் உதய ஒளியில்

அழகாய்த்தோன்றிஉற்சாகந்தரும்.

தனித்து நாம் இருந்திட அவர்தம்

கொடும் பாலைவனம் தானுண்டு

துணிந்து நீ வாழ்ந்திடவேண்டுமென

அவருன்னை வைத்திடுவார்.

அங்கவர் தம் மோட்சத்தின்

திரைச் சீலைகள் எல்லாம்

அவிழ்த்துவிட்டுப் பாலையின்

வெப்பத்தினின்றுகாத்திடுவார்.