February

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 12:1-14) “நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்” (வச. 3). பூட்டிய வீட்டுக்குள் அடிக்கப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியின் மரணம் ஒரு நாட்டின் விடுதலைக்கான கதவைத் திறந்துவிடுகிறது. பிறந்து ஓராண்டு நிறைவுற்ற இளம் ஆட்டுக்குட்டியின் மரணம் நானூறு ஆண்டுகால அடிமை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓர் எளிய ஆட்டுக்குட்டியின் முடிவு இஸ்ரயேலர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது.…

February

தயவுபாராட்டுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 11:1-10) “இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவனவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்” (வச. 2). “இன்னும் ஒரு வாதை” (வச. 1) என்பது பத்தாவதும் இறுதியானதுமான தண்டனையை முன்னறிவிக்கிறது. எகிப்திய குடும்பங்களின் தலைப்பிள்ளை மரணமே அது. பாவம் தன்னுடைய இறுதிப் பயணத்தை மரணத்தில் முடிக்கிறது. அரசன் முதல் அடிமை வரை எல்லோருடைய வீடுகளிலும் மிகுந்த ஓலத்தையும், கண்ணீரையும் வரவழைக்கும் என்று சொல்லப்பட்டது (வச. 5). பாவத்தின் கூலியாகிய…

February

ஆராதனைக்குத் தகுதியான தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 10:21-29) “மோசே தன் கையை வானத்துக்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்று நாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று” (வச. 22). சூரியனை உருவாக்கியவரும், சூரியனைக் காட்டிலும் வலிமையானவருமாகிய கர்த்தரால், எகிப்தின் சூரியக் கடவுளான ‘ரா’வின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே மூன்று நாள் காரிருள் (வச. 22). எகிப்தியரின் வழிபாடு பொய்யாக்கப்பட்டது, அவர்களுடைய கடவுளர்களது சக்தியின்மை நிரூபிக்கப்பட்டது. வெளிச்சம் மங்கியது, இருள் வந்தது, அவர்களுக்கு தேவ ஒத்தாசை அற்றுப்போயிற்று. பொல்லாங்கு செய்கிற எவனும்…

February

நம்முடைய அனைத்துக்குமான தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 10:1-20) “அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும், எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்றான்” (வச. 9). வாதைகள் தேவ தண்டனையின் அடையாளங்களாகவே இருக்கின்றன. அவை பார்வோன் கர்த்தரே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமின்றி, இந்தச் செய்தி தலைமுறை கடந்தும் சொல்லப்படுவதன் வாயிலாக இஸ்ரயேல் சந்ததியினரும் கர்த்தரே மெய்யான தேவன் அறிந்துகொள்ளப்பபடுவதற்காகவும் கொடுக்கப்பட்டன. நான்காயிரம்…

February

தொடர்ந்து வாய்ப்புக்கொடுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:13-35) “அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று”(வச. 23). இந்த முறை பார்வோனுக்கு இழப்பு மிக அதிகம். வானத்திலிருந்து தேவ கோபம் கல்மழையாகவும், நெருப்பாகவும் (வச. 23) நேரடியாக இறங்கியது; வேறு வழியின்றி பார்வோனும் இறங்கி வந்தான். “நான் பாவஞ்செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்” என்றான் (வச. 27). இது ஒரு நேர்மையான மன்னிப்புக்கோரலாக…

February

நீதி செய்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:8-12) “அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருக ஜீவன்களும் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று” (வச. 10). ஒரு கைப்பிடி சூளையின் சாம்பல் எத்தகைய பெரிய விளைவுகளை உண்டாக்கும் என பார்வோனிடம் கேட்டால், ஐயோ அது மிகப் பயங்கரமானது என்று தன் வேதனையை விவரிப்பான். எபிரெயர்களின் செங்கல் சூளையின் சாம்பல், வாசனைத் திரவியங்களால் மினுமினுக்காப்பட்ட தங்களுடைய தோல்களில்…

February

தொலைநோக்குப் பார்வையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 9:1-7) “கர்த்தர் இஸ்ரவேலரின் மிருக ஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருக ஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்” (வச. 4). தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை, தமக்கு ஆராதனை செய்யவிடாதவாறு தடையை உண்டாக்கிய பார்வோனின் மீது சர்வ வல்லமை பொருந்திய தேவன் ஐந்தாவது தண்டனையை அனுப்புகிறார். ஒருவிதக் கொடிய நோய் எகிப்தியரின் மந்தையைத் தாக்கி அழித்தது. இது எகிப்தியரின் சுய பொருளாதார கட்டமைப்பின் மேல் வந்த பெருந்தாக்குதல். மிருகங்களை வேலைக்குப்…

February

தம்முடையவர்களைக் காப்பாற்றுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:20-32) “பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, விசேஷப்படுத்தி, என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்” (வச. 22-23). எகிப்தியர்கள் நதியை வணங்கினார்கள், அதில் புனித நீராடினார்கள். நதியிலிருந்து வருகிற தவளைகளை வணங்கினார்கள், இவைபோக அவர்கள் பேன்கள், வண்டுகள் போன்ற பூச்சியினங்களுக்கும் பலிகளை இட்டார்கள். ஆகவே அவர்களுடைய தவறான நம்பிக்கையை பொய்யானதாக ஆக்கும்படியும், பூமியின் நடுவில் அவரே கர்த்தர்…