February

பரிசுத்தம் நாடும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:9-15) “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்” (வச. 11,12). இங்கே மோசே தேவனுக்கும் மக்களுக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறார். தேவனுடைய வார்த்தைகளை மக்களிடத்தில் தெரிவிப்பதற்கும், மக்களின் எண்ண ஓட்டங்களை தேவனிடத்தில் பிரதிபலிப்பதற்கும் அவர் பள்ளத்தாக்குக்கும் மலைக்குமாக ஏறி இறங்குகிறார். இப்பொழுது நமக்கான ஒரே மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே. இவர் மூலமாக நாம் எப்பொழுதும் தேவ…

February

நம்மைச் சிறப்பானவர்களாக்கிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:5-8) “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது ” (வச. 5). பூமியைச் சொந்தமாகக் கொண்டிருப்பவரின் சொந்தங்களாக இருக்கும்படி இஸ்ரயேல் மக்கள் அழைக்கப்பட்டார்கள். பூமியெல்லாம் அவருக்குச் சொந்தமாக இருந்தாலும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்களே அவருக்கென்று ஒரு சிறப்பான பொக்கிஷமாக இருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் பேதுரு நம்மைக் குறித்து, “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி”, “ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்”, “பரிசுத்த ஜாதி”,…

February

நம்மைச் சுமந்து வருகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:1-4) “நான் எதிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளினுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையில் சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்” (வச. 4). முன்னமே கர்த்தர் மோசேக்கு எரிகிற முட்செட்டியில் தரிசனமானபோது உறுதியளித்திருந்தபடியே (3:12), இப்பொழுது சீனாய் வனாந்தரத்துக்கு அவர்களை அழைத்துவந்தார் (வச. 1,2). இஸ்ரயேலர் வழியில் பல கடினமான சூழ்நிலைகளையும், தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்கள். ஆயினும் தேவன் தாம் சொன்னபடியே இந்த இடத்துக்கு அவர்களை அழைத்து வந்துவிட்டார். தேவன் உண்மையுள்ளவர்; தாம் சொன்ன வார்த்தைகளில்…

February

ஆலோசனைக் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 18:13-27) “மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கி சாயங்காலம் மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்” (வச. 13). குடும்பம் முக்கியமானது, அதேவேளையில் கர்த்தர் நமக்கு அருளிய பணியும் முக்கியமானது. குடும்பத்தின்மீதுள்ள ஆசாபாசம் கர்த்தருடைய காரியங்களில் நாம் ஈடுபடுவதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது. மோசே மாறுநாளே தன்னுடைய வேலையைத் தொடங்கிவிட்டான் (வச. 13). மேலும் குடும்பத்தாரின் ஆதிக்கத்தால், கர்த்தருடைய பணியில் இடையூறு உண்டாகாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்குமாக இஸ்ரவேலை வழிநடத்தும் பொறுப்பையும்…

February

நமது குடும்பங்களை நேசிக்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 18:1-12) “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்” (வச. 6). நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் இங்கே மோசேயின் குடும்பத்தாரை மீண்டும் சந்திக்கிறோம் (4:24-26). மோசே அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டிருந்தான் (வச. 2). இப்பொழுது கர்த்தரை முன்னிட்டு மனைவியும் பிள்ளைகளும் மோசேயைத் தேடிவருகிறார்கள். இந்த உலகத்தில், பல நிகழ்வுகளை முன்னிட்டு பல வேளைகளில் நாம் ஒன்று கூடுகிறோம். இவை…

February

யெகோவாநிசியாகிய நமது கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 17:8-16) “அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்” (வச. 9). உலகமாகிய எகிப்திலிருந்தும், சாத்தானாகிய பார்வோனிடமிருந்தும் விடுதலை பெற்று, தங்களைக் கிறிஸ்துவுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, ரெவிதீமிலே கன்மலையின் நீராகிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்று புதிய சுபாவத்துக்குப் பங்குள்ள விசுவாசிகள் எதிர்கொள்ள வேண்டியது பழைய சுபாவமாம் மாம்சத்துக்கு அடையாளமாயிருக்கிற அமலேக்கியர்களுடனான போர். மாம்சம் ஆவிக்கு…

February

அடிக்கப்பட்ட கன்மலையாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 17:1-7) “பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும், கர்த்தருடைய கட்டளையின்படியே சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.” (வச. 1). இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய விசுவாசத் தேர்வைச் சந்திக்கிறார்கள். தேவனைச் சார்ந்துகொள்ளும் அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது. தேவன் அவர்களைத் தங்கச் செய்த இடத்தில் தண்ணீர் இல்லை (வச. 1). தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற ஒவ்வொரு நிகழ்வுகளும், அவை நிறைவோ அல்லது…

February

நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 16:22-36) “ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள். … கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்” (வச. 22,34). ஏழாம் நாள் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகையால், ஆறாம் நாளில் இரண்டு மடங்கு மன்னாவைச் சேகரித்தார்கள் (வச. 22). புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் ஓய்வுநாளை ஆசரிப்பவர்கள் அல்லர், மாறாக, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல் நாளில் அவரை ஆராதிப்பவர்கள். ஆயினும்…

February

நம்முடைய மன்னாவாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 16:13-21) “இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து ஒருவரையொருவர் பார்த்து, இது என்ன என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களை நோக்கி, இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்” (வச. 15). நம்முடைய இந்த உலகமென்னும் வனாந்தரப் பயணத்தில் நாம் பெலன் பெற்று தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கும், வாழ்வதற்குமான தேவ கிருபையின் அதிசயமான ஏற்பாடே வானத்திலிருந்து இறங்கிய மன்னா. இந்த மன்னா வார்த்தையாகிய கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைiயும் பிரதிபலிக்கிற சித்திரமாயிருக்கிறது. கிறிஸ்துவே…

February

கிருபையும் இரக்கத்தையும் காண்பிக்கிற கர்த்தர்

 (வேதபகுதி: யாத்திராகமம் 16:1-12) “ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தர திசையாய்த் திரும்பிப் பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது” (வச. 10). நீருற்றுகளும், பேரீட்சை மரங்களும் நிறைந்த ஏலீமுக்கும், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட சீனாய்க்கும் நடுவாக இருக்கிற சீன் வனாந்தரத்துக்கு வந்தார்கள் (வச. 1). மக்களுடைய முறுமுறுப்புகளுக்குப் பதிலாக கர்த்தருடைய மகிமை வெளிப்பட்ட இடம். நம்முடைய பயணத்தின் அடுத்த நிறுத்தம் தேவனுடைய மகிமையும் கிருபையும் அளவற்ற வகையில் வெளிப்படுகிற இடமாக இருக்கலாம்.…