April

போஜனபலி பலி: ஒரு பூரணமான வாழ்க்கை

(வேதபகுதி: லேவியராகமம் 2:1-16) “ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக … அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக் குறியாகத் தகனிக்கக்கடவன். அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (வச. 1,2). இந்தப் பூமியில் மானிடத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் பரிபூரண நடத்தையை போஜனபலி தெரிவிக்கிறது. இது ஓர் இரத்தமில்லாத பலி. இந்தப் போஜனபலி, மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம், உப்பு ஆகியவற்றால் கலந்து செய்யப்படுகிறது. மேலும் போஜனபலியாக முதற்பலன்களைப் படைக்க நினைத்தால், அது…

April

சர்வாங்க தகன பலி: ஒரு முழுமையான ஒப்புவித்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 1:2-17) “உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது, ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும். … இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (வச. 2,9). தேவனுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தை நிரப்பிற்று. இத்தகைய தெய்வீக மகிமையின் பிரசன்னத்தில் நிலைத்திருப்பதற்கு ஏற்றவாறு மக்கள் தகுதியாக்கப்படும்படியாக அவர்தாமே அதற்கான பலிமுறைகளைத் தந்தருளுகிறார். இந்தப் பலிகள், மனிதர்கள் பாவஞ்செய்துவிட்டால் தேவனுடைய தயவைப் பெற்று மீண்டும் அவருடன் ஒப்புரவாவதற்கும், பாவஞ்செய்யாதபோது பக்திவிநயத்துடன் மனபூர்வமாக ஒப்புவிப்பதற்காகவும்…

April

இன்றும் பேசும் இறைவன்

(வேதபகுதி: லேவியராகமம் 1:1) “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி” (வச. 1). இதுவரை சீனாய் மலையில் வைத்து வானத்திலிருந்து பேசினார் (யாத். 20:22). இப்பொழுது தேவன் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து பேசுகிறார் (வச. 1). மனிதர்கள் நடுவில் நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்லத்தை உண்டாக்குவார்களாக என்று தேவன் மோசேயிடம் கூறினார் (யாத். 25:8). இப்பொழுது அவர் கட்டளைப்படியே ஆசரிப்புக் கூடாரம் நிறுவப்பட்டுவிட்டது. தேவன் இந்த பூமியில் மனிதர்களுக்குள்ளே இந்தக் கூடாரத்தின் வாயிலாக…

April

கர்த்தருடைய மகிமையே பிரதான காரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 40:1-38) “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (வச. 34). ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு நல்லது. யாத்திராகமத்தின் முதல் அதிகாரம் அடிமைத்தனம், துன்பம் வேதனை ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இறுதி அதிகாரம் மகிழ்ச்சி, மனநிறைவு, மகிமை ஆகியவற்றுடன் நிறைவடைகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையும் பள்ளத்தாக்கின் அனுபவங்களாலும் மலையுச்சியின் அனுபவங்களாலும் நிறைந்ததுதான். சில வேளைகளில் நாம் துன்பம் என்னும் குகையின் வழியாக இருளில் நடந்து செல்கிறோம். சில நேரங்களில் மகிழ்ச்சி…

April

மீண்டும் அடிப்படைக்குத் திரும்புவோம்

(வேதபகுதி: யாத்திராகமம் 39:32-43) “இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்” (வச. 32). இரட்சிப்பின் மேன்மை என்ன? அது ஒருவரை எவ்விதமாக மாற்றுகிறது? இஸ்ரயேல் மக்கள் முன்பு எகிப்தில் பார்வோனுக்காக கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது யெகோவா வாசம்பண்ணும்படியாக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இதையே எதிர்பார்க்கிறார். திருச்சபைகளானது உலக ஆதாயத்தை உதறித்தள்ளியோரின் தன்னலமற்ற சேவையினாலேயே கட்டப்பட்டது என்பதை வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த வாசஸ்தலம்…

April

பெசலெயேலும் அவனுடைய குழுவினரும்

(வேதபகுதி: யாத்திராகமம் 35:30-36:8) “பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலைடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்” (வச. 36:2). ஆசரிப்புக்கூடாரத்தின் திட்டப் பொறியாளர் தேவனே ஆவார்; பெசலெயேலும் அவனுடைய குழுவினரும் அவர் அருளிய வரைபடத்தின்படி அதை நுட்பமான முறையில் வடிவமைத்த கைவினைஞர்கள் ஆவார்கள். அவ்வரைபடத்தின்படி அவர்கள் ஓய்வில்லாமல், சோர்ந்துபோகாமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொரு அம்சத்திலும் மேசியாவைப் பிரதிபலிக்கிற ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்களுடைய ஒவ்வொரு உழைப்பையும் வெளிப்படுத்தினார்கள். கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிற…

April

மனபூர்வமாக காணிக்கை கொடுத்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 35:1-29) “உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ அவன் அதைக் கொண்டு வரட்டும்” (வச. 5). இந்தப் பகுதியில் மூன்று முக்கியமான காரியங்களைப் படிக்கிறோம். ஓய்வு நாள் ஆசரிப்பு, ஆசரிப்புக்கூடாரப் பணிக்கான காணிக்கை கொடுத்தல் மற்றும் அதைக் கட்டுவதற்காக முன்வருதல். கர்த்தருக்குக் காணிக்கை கொடுப்பதும், அவருக்காக பணிசெய்ய முன்வருவதும் இருதயத்திலிருந்து வரவேண்டுமாகையால் அது முதலாவது ஓய்வு நாள் ஆசரிப்பின் மூலமாக ஆயத்தம் செய்யப்படுகிறது. சொந்த வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, கர்த்தருக்குக்…

April

கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையின் ஒளி

(வேதபகுதி: யாத்திராகமம் 34:18-35) “மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அறியாதிருந்தான்” (வச. 29). மோசே உணவில்லாமலும், தண்ணீரில்லாமலும் நாற்பது நாட்கள் மலையில் தேவன்மேல் வைத்த அன்பினாலும் வாஞ்சையினாலும் அவருடன் இருந்தான். அவரோடு இருந்த நாட்கள் அவனுக்கு சில நிமிடங்கள் தோன்றி மறைகிற ஒரு கனவைப் போலவே இருந்திருக்கலாம். அவருடனான ஐக்கியம் நாட்களை மணித்துளிகளாக மாற்றியிருந்தது. ஒரு நண்பணிடம் பேசுவதுபோல, தேவனிடம் மோசே முகமுகமாய்ப் பேசினான். இந்தச் சந்திப்பு…

April

ஐக்கியத்தில் நிலைத்திருத்தலின் விளைவுகள்

(வேதபகுதி: யாத்திராகமம் 34:8-17) “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும்; … எங்கள் பாவத்தை மன்னித்து எங்களை ஏற்றுக்கொள்ளும் ” (வச. 9). கிருபையும் சத்தியமும் நிறைந்த தேவனின் திவ்விய ஐக்கியத்தில் நிலைத்திருக்கும் ஒரு பரிசுத்தவானின் இருதயம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டை மோசேயிடம் நாம் காண்கிறோம். முதலாவது, தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்து கொண்டான். ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து வணங்கியதுபோல (ஆதி. 17:3), சேனையின் அதிபதியாம் கர்த்தரைக்…

April

அன்பின் ஐக்கியத்தில் நிலைத்திருத்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 34:1-7) “அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன்கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்” (வச. 18). முதலாவது, பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை தேவனே உண்டாக்கி மோசேயிடம் கொடுத்தார். துரதிஷ்டவசமாக மக்களின் பாவங்களினிமித்தம் மோசே அதை உடைத்துவிட்டான். மக்கள் பிரமாணங்களை நிறைவேற்றக்கூடாதபடி, குறைவுள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இது தெரிவிக்கிறது. இரண்டாவது, கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்துக்கு அடையாளமாயிருக்கிற மோசே…