போஜனபலி பலி: ஒரு பூரணமான வாழ்க்கை
(வேதபகுதி: லேவியராகமம் 2:1-16) “ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக … அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக் குறியாகத் தகனிக்கக்கடவன். அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (வச. 1,2). இந்தப் பூமியில் மானிடத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் பரிபூரண நடத்தையை போஜனபலி தெரிவிக்கிறது. இது ஓர் இரத்தமில்லாத பலி. இந்தப் போஜனபலி, மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம், உப்பு ஆகியவற்றால் கலந்து செய்யப்படுகிறது. மேலும் போஜனபலியாக முதற்பலன்களைப் படைக்க நினைத்தால், அது…