அந்நிய நெருப்பு
(வேதபகுதி: லேவியராகமம் 10:1-11) “பின்பு ஆரோனின் குமாரனாகிய நாதாவும் அபியூவும் தன் தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவர் சந்நிதியில் கொண்டுவந்தார்கள் ” (வச. 1). ஓர் அற்புதமான காட்சிக்குப் பிறகு ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு. மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆரோனின் நான்கு மகன்களின் இருவரின் மரணம் அவனை மட்டுமின்றி, நம்மையும், பேச்சற்றவர்களாக்கிவிட்டது. மோசே, ஆரோனின் குடும்பத்தார், முழு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும்…