May

தனித்துவமான வாழ்க்கை

லேவியராகமம் 18:1-30) “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாலும், என்னுடைய நியாயயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” (வச. 2,3). இந்த அதிகாரத்தில் மூன்று தடவை “நான் கர்த்தர்” என்றும் “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்றும் ஆறுதடவை சொல்லப்பட்டிருக்கிறது (வச. 2,4,5,6,21,30).தேவன், இஸ்ரயேல் மக்களுடன் தம்மை ஒரு சிறப்பான வகையில் இணைத்துக்கொள்கிறார். தனக்கும்…

May

வாழ்க்கையின் ஆதாரம் இரத்தமே

(வேதபகுதி: லேவியராகமம் 17:1-16) “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே” (வச. 11). இவ்வசனம் முழு வேதாகமத்துக்குமான திறவுகோலாக விளங்குகிறது. இரத்தமே மக்களுடைய ஆத்துமாவுக்காகப் பாவநிவர்த்தி உண்டாகக்கூடிய ஒரே வழி என்று இது தெளிவாகக் கூறுகிறது. இரத்தமே மனித உயிரின் ஆதாரம் என்று வேதாகமம் கூறிய பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அறிவியல் இவ்வுண்மையைக் கண்டுகொண்டது. ஒருவரிடமிருந்து பெறப்படுகிற இரத்தம் இன்னொரு…

May

கிறிஸ்துவே நமக்கான போக்காடு

(வேதபகுதி: லேவியராகமம் 16:20-34) “… உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலைமையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்” (வச. 20,21). பாவநிவர்த்திப் பலியில் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் ஒரே தகன பலியாகக் கருதப்படுகிறது (வச. 5). இது கல்வாரிச் சிலுவை மரணத்தின் இரண்டு…

May

பாவநிவர்த்தி பெருநாள்

(வேதபகுதி: லேவியராகமம் 16:1-19) “பாவநிவர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும், இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது” (வச. 17). இந்தப் பகுதியில் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாகிய பாவநிவர்த்திப் பெருநாளைக் குறித்துப் படிக்கிறோம் (23:27). இந்நாளில் ஆரோன் மட்டுமே தனியே சென்று, தனக்காகவும், மக்களுக்காகவும் பலிகளைச் செலுத்தி, மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்று கிருபாசனத்தின்மேல் இரத்தத்தைத் தெளித்து, தூபங்காட்டுகிறான். இது ஆண்டுக்கு…

May

அனுதின சுத்திகரிப்பும் இளைப்பாறுதலும்

(வேதபகுதி: லேவியராகமம் 15:1-33) “பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக் குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்” (வச. 13,14). இந்த அதிகாரம் ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ இயல்பாய் ஏற்படக்கூடிய பிரமியம் (மேகவெட்டை), இந்திரியக்கழிவு (விந்து வெளியேறுதல்), அளவுக்கு…

May

புதிய வாழ்க்கைக்கு திரும்புதல்

(வேதபகுதி: லேவியராகமம் 14:1-57) “ஆசாரியன் பாளையத்துக்குப் புறம்பே போய், குஷ்டரோகியின் குஷ்ட வியாதி, சொஸ்தமாயிற்று என்று கண்டால், சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன்” (வச. 3,4). ஒரு குஷ்டரோகிக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைக்குமா? அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்குமா? அவன் மீண்டும் பொதுமக்களோடு மக்களாகக் கலந்து சகசமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா? ஆம், அதற்கான வாய்ப்பைத் தேவன் வழங்குகிறார். இதற்கான சுத்திகரிப்பு முறைகளையே…

May

கண்டுபிடித்துத் தீர்த்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 13:1-59) “குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும்” (வச. 9). குஷ்டரோகம் குணப்படுத்த வேண்டிய ஒரு நோயாக மட்டுமின்றி, அது சுத்தப்படுத்த வேண்டிய ஓர் அசுத்தமாகவும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இது பாவத்துக்கு ஒப்புமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரெய வேதாகமத்தில் இந்தத் தொழுநோய்க்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை வெறுமனே குஷ்டரோகத்தை மட்டும் குறிக்காமல் தோலில் ஏற்படக்கூடிய பிற வியாதிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. இவ்வகை அனைத்தும் ஆபத்தான நோயாகவும், தனிப்பட்ட நபரை மட்டுமின்றி, முழு…

May

பாவசுபாவத்தை நினைவூட்டல்

(வேதபகுதி: லேவியராகமம் 12:1-8) “ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண் பிள்ளையைப் பெற்றாள், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாயிருப்பாள். எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது” (வச. 2,3). இங்கு சொல்லப்பட்டிருக்கும் காரியங்களைக் கவனிக்கும்போது, தேவன் பிரசவத்துக்கு எதிரானவராக இருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அவ்வாறு அல்ல. அவர் குழந்தைகளுக்கும் எதிரானவர் அல்லர். மனிதப் பிறப்பும், பாலினமும் கூட அவருடைய பார்வையில் தீட்டானது அல்ல. அடிப்படையானதும், இன்றியமையாததுமான ஓர் உண்மையை…

May

வேறுபாட்டின் அளவீடு

(வேதபகுதி: லேவியராகமம் 11:1-47) “கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ சந்துக்கள் யாதெனில்” (வச. 1, 2). இந்தப் பகுதியில், நன்மை எது தீமை எது என்பதற்கான ஒரு தரநிர்ணய அளவுகோலை தேவன் வழங்குகிறார். இவ்வாறு நன்மை தீமையை அடையாளம் கண்டு தரம் பிரிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த ஒரு பொருளோ, அல்லது உயிரோ தீமையானது என எதுவும் இல்லை, நாம்…

May

நியாயப்பிரமாணத்தின் நோக்கம்

(வேதபகுதி: லேவியராகமம் 10:12-20) “அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரண பலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரண பலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான். மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்” (வச. 19,20). இரண்டு மகன்களை இழக்கக்கொடுத்த ஆரோனின் துயரமிக்க, ஆனால் ஆழமான உணர்வுமிக்க வார்த்தைகளை இங்கே காண்கிறோம். இரண்டு வகையான பாவநிவராண பலியைப் பற்றி கூறப்பட்டுள்ளது…