மன்னிப்பும் இரக்கமும்
(வேதபகுதி: லேவியராகமம் 23:26-32) “அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்த நாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.” (வச. 27). இஸ்ரயேல் மக்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டுள்ள பண்டிகைகளில் முக்கியமானது யாம் கீப்போர் என்று அழைக்கப்படுகிற “பாவநிவர்த்தி பெருநாள்” ஆகும். லேவியராகமம் பதினாறாம் அதிகாரத்தில் இந்தப் பண்டிகையைக் குறித்த முறைகள் மற்றும் ஆசாரியனின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலோ இந்தப் பாவநிவர்த்தி நாளின்போது மக்கள் நடந்துகொள்ள…