June

வேற்றுமையில் ஒற்றுமை

(வேதபகுதி: எண்ணாகமம் 2:1-34) “இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்” (வச. 2). ஆசரிப்புக் கூடாரம் நடுவிலும், அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் அவரவருக்கு தேவன் ஒதுக்கிய இடத்தில் அவர்களுடைய கொடிகளுடன் கூடாரம் போட்டு தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் எங்கே தங்க வேண்டும் என்பதை தேவனே தீர்மானித்தார். எந்தத் திசையில் எந்தக் கோத்திரத்துடன் தாங்கள் இணைந்து…

June

ஆன்மீக போர் வீரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:47-54) “நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும் லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும் அதிலுள்ள சமஸ்த பொருட்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து.” (வச. 49,50). ஒரு நாட்டைக் காப்பதற்கு இராணுவம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆவிக்குரிய காரியங்களில் அந்த நாட்டை வழிநடத்திச் செல்வது. எல்லா கோத்திரத்தாரிலும் இருபது வயதுக்கு மேற்பட்டோர் தங்களை போர்வீரர்களாக அடையாளப்படுத்திக்கொண்டபோது, லேவியர் இதிலிருந்து விலக்கப்பட்டார்கள். இவர்களுக்கென சிறப்பான…

June

கிறிஸ்துவின் போர் வீரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:22-37) “சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்” (வச. 22,23). வாழ்வதற்கு சாதகமற்ற பாலைவனத்தில் தேவனுக்கென்று ஓர் இளைஞர் படை உருவாகிக்கொண்டிருந்தது. இந்த உலகத்தில் போர் இருக்கிறது, அதற்கு ஆட்கள் தேவை, பயிற்சியும் அவசியம். ஆயினும் வெற்றி எப்பொழுதும் கர்த்தரைச் சார்ந்தது. ஒவ்வொரு கோத்திரத்திலும் இருபது வயதுக்கு மேற்பட்ட போரிடக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ…

June

தேவ குடும்பத்தின் உறுப்பினர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:1-21) “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர் பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்” (வச. 2). ஆதியாகமம் தேவனுடைய பிள்ளைகளை வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் பூமியில் தங்களை அந்நியர்களும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர்களாகச் சித்திரிக்கிறது. யாத்திராகமமும், லேவியராகமமும் தேவனுடைய விடுதலையின் மக்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த இனத்தாராகவும் நமக்கு முன் காட்டுகிறது. இந்த எண்ணாகமம் தேவனுடைய மக்களை, எதிரிகளை வாகை சூடி வாக்குத்தத்த நாட்டைச்…

May

உன்னத தேவனின் உயரிய எதிர்பார்ப்பு

(வேதபகுதி: லேவியராகமம் 27:14-34) “இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” (வச. 34). ஆசரிப்புக் கூடாரத்தில் செலுத்தப்படும் பலிகள் பற்றிய கட்டளைகளுடன் தொடங்குகிற இந்நூல், அவரால் மீட்டுக்கொள்ளப்பட்ட மக்களின் உற்சாகம் நிறைந்த விசேஷ பொருத்தனைகளுடன் முடிவடைகிறது. நம்மை ஆண்டவருக்கு பொருத்தனையாகப் படைப்பது மட்டுமின்றி, நம்முடைய விலங்குகளோ, வீடுகளோ, நிலங்களோ அவற்றையும் அவருடைய நாமத்துக்கு மகிமையாகப் பொருத்தனையாகப் படைக்கலாம். இவை அவரை ஆராதிக்கக்கூடிய நம்முடைய பார்வையை அதிகரிக்குமானால், தேவனுடைய திட்டங்களுக்கும் நோக்கங்களுக்கும்…

May

மனபூர்வமான கொடுத்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 27:1-13) “… யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்” (வச. 2). ஆண்களோ பெண்களோ யாராயிருந்தாலும், அவர்கள் மனபூர்வமான பொருத்தனையைப் பண்ணிக்கொண்டால், பொருத்தனைக்குரிய நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்” (பிர.5;4) என்று சாலொமோன் ஞானியும் இதுபற்றிக் கூறுகிறார். ஆண், பெண், வயது ஆகிய வேறுபாடுகளுக்கு ஏற்ப செலுத்த…

May

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆதாரம்

(வேதபகுதி: லேவியராகமம் 26:1-46) “உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவில் உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (வச. 11,12). சமாதானமுள்ள, அமரிக்கையான, சண்டை சச்சரவுகள் இல்லாத, பயமற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவோம். இஸ்ரயேல் மக்களுக்காக இதற்கான ஆதாரத்தை தேவன் இந்தப் பகுதியில் எழுதிவைத்திருக்கிறார். இது ஆசீர்வாதங்களும், தேவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறுதலும் இம்மக்கள் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்து இருக்கிறது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.…

May

சமூக பொருளாதார சமத்துவம்

(வேதபகுதி: லேவியராகமம் 25:1-55) “தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம், நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் அந்நியருமாயிருக்கிறீர்கள் … உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்” (வச. 10). இஸ்ரயேல் நாட்டின் சமுதாய பொருளாதாரம் ஸ்திரத்தன்மை தேவன் அருளிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதாக விளங்கியது. முதலாவது, தேவனே நிலத்துக்குச் சொந்தக்காரர், அவரே அதனுடைய முழுக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கிறார் (வச. 23),…

May

இரண்டு சுபாவங்களின் போராட்டம்

(வேதபகுதி: லேவியராகமம் 24:1-23) “அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும், எகிப்திய புருஷனுக்குப் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடுகூடப் புறப்பட்டு வந்திருந்தான். இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளையத்தில் சண்டைபண்ணினார்கள்” (வச. 10). பாதி இஸ்ரேலியனாகவும் பாதி எகிப்தியனாகவும் இருந்த ஒரு மனிதனின் கதை இங்கே சொல்லப்பட்டுள்ளது. இவனுடைய தாய் இஸ்ரேலியப் பெண், தந்தை எகிப்தியன். இவன் இஸ்ரயேல் மக்களுடன் வந்ததில் எவ்விதத் தவறும் இல்லை, ஆயினும் இவனுடைய செயல் அல்லது இவன் நடந்துகொண்ட விதம் நமக்குப்…

May

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருத்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:23-44) “நீ இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் ஏழு நாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக” (வச. 24). இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி, கானான் நாட்டில் சேருமட்டுமாக கூடாரங்களில் குடியிருந்தார்கள். வருங்காலத் தலைமுறையினர் இதை அறிந்துகொள்ளும்பொருட்டாகவும், எதிர்காலத்தில் இவர்கள் அடையப்போகும் ஆசீர்வாதங்களைக் குறிக்கும்பொருட்டும் இந்த கூடாரப்பண்டிகை ஆசரிக்கப்பட்டது. இது அறுவடையின் முடிவுறு காலத்தில் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கொண்டாடப்பட்டது. இது பாவநிவிர்த்திப் பண்டிகை முடிந்தவுடன் அனுசரிக்கப்பட்டது.…