June

கோத்திரப் பிரபுக்களின் காணிக்கைகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 7:1-89) “பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்” (வச. 10). இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் தேதியிலே ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது *(காண்க யாத். 40). அந்த நாளிலே இஸ்ரயேல் புத்திரரின் கோத்திரப் பிரபுக்கள் தங்கள் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து தேவனுக்கென்று படைத்தார்கள். முதலாவது இவர்கள் வண்டிகளையும் மாடுகளையும் கொண்டுவந்தார்கள் (வச. 3). இவை லேவியர்களின் வேலைக்கு…

June

ஆசீர்வாதத்தின் தேவன்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:22-27) “இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்” (வச. 13-15). ஆசாரியர்கள் கர்த்தரின் திருப்பெயரில் மக்களை ஆசீர்வதிப்பது எத்தனை பெரிய சிலாக்கியம்! கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது எவ்வளவு பெரிய பேறு! நான் உன்னை ஆசீர்வதிப்பேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னார் (ஆதி. 12;1-3). இந்த வாக்குறுதி கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரிடத்திலும் நிறைவேறக்கூடியதாக இருக்கிறது. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்…

June

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான பாடுகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:13-21) “நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக்கூடார வாசலிலே வந்து, … போஜனபலியையும், பானபலிகளையும், கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்” (வச. 13-15). தான் கர்த்தருக்காக நசரேய விரதம் பண்ணிக்கொள்கிற ஒருவன் அதில் நிலைத்திருந்து, அதைக் கவனத்தோடும், கருத்தோடும் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அக்காலம் முடிந்தவுடன் அவன் அதற்கான சடங்கு முறைகளைச் செய்து நிறைவேற்றுவது ஆகும். என்னுடைய நசரேய விரதக் காலம் முடிந்துவிட்டது, இனி அதிலிருந்து…

June

பிரித்தெடுக்கப்பட்ட நாட்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:1-12) “புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக் கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்” (வச. 2). லேவி கோத்திரம் முழுவதையும் தேவன் தம்முடைய ஊழியத்துக்கென்று பிரித்து எடுத்துக்கொண்டார். லேவியர் தவிர வேறு எவரும் கர்த்தருக்குத் தங்களை ஒப்புவிக்க விரும்பினால் என்ன செய்வது? இதற்கான வழியே நசரேய விரதம். நான் என்னைக் கர்த்தருக்கென்று ஒப்புவிக்கிறேன் என மனபூர்வமாகவும், தன்னிச்சையாகவும் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ எடுக்க வேண்டிய தனிப்பட்ட தீர்மானமாகும்…

June

தொழு நோயாளிகளைக் கையாளுதல்

(வேதபகுதி: எண்ணாகமம் 5:1-31) “குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும், பாளையத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு” (வச. 2). தொழு நோய்க்கு ஆட்பட்டவர்கள், உதிரப்போக்கு உள்ளவர்கள் மற்றும் பிணத்தினால் தீட்டுப்பட்டவர்கள் ஆகிய மூன்று விதமான நபர்களை குடியிருப்புகளை விட்டு தனிமைப்படுத்த வேண்டும். இவைகள் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்று பரவக்கூடிய நோய்கள். குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இல்லாத காரணத்தாலும், பிறருக்கு இத்தொற்றுகள் பரவாமல் இருக்கவும், அல்லது நோயின் பாதிப்பினால் துர்நாற்றத்தினால் வேறு எவரும் பாதிக்கப்படாமல்…

June

மெராரி புத்திரர்களின் பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:29-49) “மெராரி புத்திரருடைய பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்” (வச.29,30). ஆசரிப்புக்கூடாரத்தைத் தாங்கி நிற்கக்கூடிய பொன் மற்றும் வெள்ளியிலான ஆதாரத் தூண்களை சுமந்து செல்லும் பொறுப்பு மெராரி புத்திரர்களுக்கு வழங்கப்பட்டது. இது அதிக எடையுள்ள பாரமான வேலை. இப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக நான்கு வண்டிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன (எண். 7:8). கர்த்தர்மேல் நம்முடைய பாரங்களை வைக்கும்போது…

June

கெர்சோன் புத்திரர்களின் பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:21-28) “கொர்சோன் புத்திரருடைய பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக்கூடாரத்திலே பணிவிடை வேலை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி தொகை ஏற்றுவாயாக” (வச. 22,23). ஆசரிப்புக்கூடாரத்தில் என்னென்ன திரைகள் பயன்படுத்தப்பட்டதோ அவை எல்லாவற்றையும் சுமந்து செல்லும் பொறுப்பு கெர்சோன் புத்திரருக்கு வழங்கப்பட்டது. இதற்கு வசதியாக அவர்களுக்கு இரண்டு வண்டிகள் கொடுக்கப்பட்டன (எண். 7:7). ஆனால் ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள பரிசுத்த பொருட்களைச் சுமந்துசெல்வதற்கு கோகாத் புத்திரருக்கு வண்டிகள் வழங்கப்படவில்லை, அவர்கள் தங்கள்…

June

கோகாத்தியர்களின் சிறப்பான பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:1-20) “ஆசரிப்புக்கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது” (வச. 4). இஸ்ரயேலரின் பாலைவனப் பயணத்தில் கர்த்தருடைய மகிமை விளங்கும் ஆசரிப்புக்கூடாரத்தை சுமந்து செல்லும் பொறுப்பு லேவி கோத்திரத்தைச் சார்ந்த கோகாத், கெர்சோன், மெராரி புத்திரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இவர்களில் முதலாவது கோகாத் புத்திரர்களின் பணி சொல்லப்பட்டுள்ளது. இவர்களில் முப்பது வயது முதல் (இருபத்தைந்து வயதில் தெரிந்துகொள்ளப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். எண். 8:25) ஐம்பது வரை உள்ளவர்கள் இப்பணிக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டார்கள்…

June

லேவியர்கள் என்னுடையவர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 3:40-51) “நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருக ஜீவன்களுக்குப் பதிலாக லேவியரின் மிருக ஜீவன்களையும் பிரித்தெடு. லேவியர் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். நான் கர்த்தர்” (வச. 45). இஸ்ரயேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, “மனிதரிலும் மிருக ஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து, அது என்னுடையது” (யாத். 13:2) என்று தேவன் உரிமைபாராட்டினார். இவர்கள் இரத்தத்தினால் சங்காரக்காரனின் அழிவுக்குத் தப்பியவர்கள். இப்பொழுது இவர்கள் விடுதலை பெற்ற மக்கள். தேவனுடைய சிறப்பானவர்கள்.…

June

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 3:1-39) “நீ லேவி கோத்திரத்தாரை சேர்த்து அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து” (வச. 6). லேவியர்கள் ஆரோனுக்கு உதவியாளர்களாக இருக்கும்படி பரலோகத்திலிருந்து தெய்வீகக் கட்டளை பிறந்தது. பொருட்களைப் பராமரிப்பதும், காவல் காப்பதும், அவற்றைச் சுமப்பதும் ஆகிய தாழ்மையான வேலையாக இவை இருக்கலாம். ஆயினும் கர்த்தரின் பார்வையில் இவை கனமுள்ள வேலையாக இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியங்களிலும், திருச்சபைகளிலும் நிறைவேற்ற பணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆகவே அவற்றைச் செய்யும்படி நம்மைக் கர்த்தர் அழைத்திருப்பாரானால்அவற்றை…