பாவத்தைப் பரிகரிக்கும் நீர்
(வேதபகுதி: எண்ணாகமம் 19:11-22) “ஆகையால், தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்திலே போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்க வேண்டும்” (வச. 17). சிவப்புக் கடாரியின் சாம்பல் கலந்த நீர் வனாந்தரப் பயணத்தில் தீட்டைக் கழிக்க பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டது. இறந்துபோன ஒருவருடைய சடலம் அல்லது அவரைப் புதைக்கிற கல்லறை அல்லது கல்லறையில் கிடக்கிற எலும்புத்துண்டுகள் பாவத்தாலும் அக்கிரமத்தாலும் மரித்துக்கிடக்கிற இந்த உலக மக்களால் நமக்கு ஏற்படும் தீமையையும், வன்முறையையும், ஊழலையும்…