July

பாவத்தைப் பரிகரிக்கும் நீர்

(வேதபகுதி: எண்ணாகமம் 19:11-22) “ஆகையால், தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்திலே போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்க வேண்டும்” (வச. 17). சிவப்புக் கடாரியின் சாம்பல் கலந்த நீர் வனாந்தரப் பயணத்தில் தீட்டைக் கழிக்க பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டது. இறந்துபோன ஒருவருடைய சடலம் அல்லது அவரைப் புதைக்கிற கல்லறை அல்லது கல்லறையில் கிடக்கிற எலும்புத்துண்டுகள் பாவத்தாலும் அக்கிரமத்தாலும் மரித்துக்கிடக்கிற இந்த உலக மக்களால் நமக்கு ஏற்படும் தீமையையும், வன்முறையையும், ஊழலையும்…

July

சிவப்புக் கிடாரியும் சுத்திகரிப்பும்

(வேதபகுதி: எண்ணாகமம் 19:1-10) “… பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்” (வச. 2). இலட்சக்கணக்கான மக்களின் பயணத்தில் நாள்தோறும் இறப்பு தவிர்க்க முடியாதது. மேலும் எகிப்திலிருந்து புறப்பட்ட இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுடைய அவிசுவாசத்தால் பாலைவனத்தில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். பிணத்தைத் தொட்டால் தீட்டு நிச்சயம். அனுதின வாழ்க்கையின் ஒன்றாகிப்போன இத்தீட்டிலிருந்து விடுபடுவது எங்ஙனம்? இதற்கான நிவாரணமே சிவப்புக் கடாரியின் சாம்பல் கலந்த நீர். லேவியராகமத்தில்…

July

நாம் சகோதரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 18:1-32) “… நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள். ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்” (வச. 5,6). துளிர்த்த கோலின் மூலமாக ஆரோனின் ஆசாரியத்துவத்தை உறுதிப்படுத்திய தேவன் இப்பொழுது அக்குடும்பத்தாரின் மேன்மையையும் அவர்கள் செய்கிற சேவையின் முக்கியத்தையும் தெரிவிக்கிறார். தேவன் நமக்கென்று சில பணியைக் கொடுக்கிறார். அதைப் பயத்தோடும் பக்தியோடும் அவருடைய நாம மகிமைக்காகவும் செய்ய…

July

ஆரோனின் துளிர்த்த கோல்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:1-13) “அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்” (வச. 5). “நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்” (வச. 5) என்பதே ஆசாரியத்துவத்தைக் குறித்து எழுந்த சர்ச்சைக்கு தேவன் வைத்த முற்றுப்புள்ளி. இந்தப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்குள் எழுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தேவனுடைய ஆலோசனையே நித்தியத் தீர்வாக இருக்க வேண்டும். மனிதர்களுக்குள் அல்லது விசுவாசிகளுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு மனிதத் தீர்வு…

June

கோராகின் எதிர்க்குரல்

(வேதபகுதி: எண்ணாகமம் 16:36-50) “(ஆரோன்) செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது” (வச. 48). இருவித தூபகலசங்கள்; ஒன்று தவறான நபர்களால் கையாளப்பட்ட கலசங்கள், மற்றொன்று உண்மையான ஆசாரியனால் பயன்படுத்தப்பட்ட கலசம். தூபகலசம் தூபம் காட்டுவதற்காக ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப்பட்டது. இது தேவனால் சுகந்த வாசனையாக ஏற்றுக் கொள்ளப்படுகிற கிறிஸ்துவின் மகிமைக்கு அடையாளமாயிருக்கிறது (யாத். 30:34-38). கோராகும் அவனைச் சேர்ந்தவர்களும் கர்த்தருடைய சமூகத்தில் தூபங்காட்டுவதற்காக பொறாமையால் கொண்டுவந்தார்கள். தவறான நபர்கள், தவறான கண்ணோட்டத்தில் தேவசமூகத்தில் வருவது…

June

கோராகின் எதிர்க்குரல்

(வேதபகுதி: எண்ணாகமம் 16:1-35) “பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே கேளுங்கள்; … அவன் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும் (ஆசரிப்புக்கூடாரப் பணிக்காக), உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?” (வச. 8,10). கோராகு ஒரு லேவியின் என்ற முறையில் ஆசரிப்புக்கூடார பணிவிடைக்கு அழைக்கப்பட்டவனாயிருந்தும், அதில் திருப்தியடையாமல் ஆசாரியப்பணியை விரும்பினான் (வச. 10). ஆரோன் குடும்பத்தாரை ஆசாரியப்பணிக்கும், லேவி கோத்திரத்தாரை ஆசரிப்புக்கூடாரப் பணிக்கும் அழைத்து நியமித்தவர் தேவனே. இது தேவனுடைய நியமங்களுக்கு…

June

நம்பிக்கையின் வாசல்

(வேதபகுதி: எண்ணாகமம் 15:1-41) “நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் போய்ச் சேர்ந்தபின்பு” (வச. 2). மக்களுடைய அவிசுவாசம், தேவனுடைய கோபம், அமலேக்கியரிடத்தில் தோல்வி ஆகிய இவை எல்லாவற்றுக்கும் அப்பாலும் தேவன் தம்முடைய கிருபையை விளங்கப்பண்ணுகிறார். தேவனுடைய திட்டங்கள் மக்களுடைய தோல்வியினால் பாதிக்கப்படுவதில்லை. நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தால் என்று தேவன் கூறவில்லை, மாறாக, “சேர்ந்த பின்பு” (வச.2) என்று கூறுகிறார். அவருடைய வாக்குறுதிகள் நம்முடைய அவிசுவாசத்தால் தாமதமாகலாம், ஆனால் எதுவும்…

June

விசுவாசம் ஒரு குருட்டு நம்பிக்கையல்ல

(வேதபகுதி: எண்ணாகமம் 14:26-45) “நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலைக் காண்பீர்கள்” (வச. 34). விசுவாசம் தேவனுடைய ஆசீர்வாதங்கள் என்னும் பொக்கிஷங்களின் பெட்டியைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. நாம் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்றால் அந்த சாவியைக் கொண்டு பெட்டியைத் திறக்க வேண்டும். சந்தேகப்படுகிற ஒருவரிடத்தில் விசுவாசம் என்னும் சாவி இருந்தாலும் பயனில்லை. இஸ்ரயேல் மக்களின்…

June

விசுவாசமுள்ள யோசுவாவும் காலேபும்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:13-25) “உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தைவிட்டது முதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்” (வச. 19). சில நாட்களுக்கு முன்னர்தான், இந்த மக்கள் எனக்குப் பாரமாயிருக்கிறார்கள், நான் ஒருவனாய் அதைச் சுமக்க முடியாது என்று தன்னுடைய அங்கலாய்ப்பை மோசே வெளிப்படுத்தினான் (அதி. 11). ஆனால் இப்பொழுதோ அதே மக்களுக்காக தேவனிடத்தில் மனதுருக்கத்துடன் மன்றாடுகிறான். மோசே மெய்யாகவே ஒரு நல்ல மேய்ப்பனுடைய இருதயத்தைக் கொண்டிருந்தான். அவன்…

June

தேவன் வெறுக்கும் அவிசுவாசம்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:1-12) “அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள்.” (வச. 1). ஒரு விசுவாசி தேவனை விசுவாசிக்காவிட்டால் என்ன நடக்கும்? அவிசுவாசம் துதியின் பாடலுக்குப் பதில் அழுகையையும், புலம்பலையும் விரக்தியையும் கொண்டுவரும். அது பின்நோக்கிப் பார்த்து எகிப்துக்குப் போகச் செய்யும். தேவனுடைய வல்லமையை சந்தேகிக்கச் செய்யும். இஸ்ரயேலர்கள் செங்கடலைக் கடந்தபோது பாடிய பாடல் இப்பொழுது எங்கே போயிற்று? கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவன் செய்த மகத்தான வல்லமையின் செயல்கள் எல்லாம்…