July

யாக்கோபிலிருந்து தோன்றும் நட்சத்திரம்

(வேதபகுதி: எண்ணாகமம் 24:12-25) “… ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (வச. 17). தேவனுடைய வழிகள் நம்மால் ஆராய்ந்து முடியாதவை. நம்முடைய எண்ணங்களைக் காட்டிலும் அவருடைய எண்ணங்கள் உயர்வானவை. நம்முடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறவர். நாம் நினைத்தபடி அவருடைய ஒரு கட்டத்துக்குள் அடக்கமுடியாதவர். பணத்துக்காக அஞ்சனம் பார்க்கிற ஒரு மனிதன் மூலமாகவும் தம்முடைய நோக்கத்தை, இஸ்ரயேலரைக் குறித்த எதிர்காலத் திட்டத்தை…

July

தேவனுக்குப் பிரியமான யாக்கோபு

(வேதபகுதி: எண்ணாகமம் 24:1-11) “யாக்கோபே, உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவை” (வச. 5). தேவனுடைய மக்களைத் தெளிவாகக் காணக்கூடாதபடிக்கு பாலாக் பிலேயாமை உயரமான மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். பரிசுத்த ஆவியானவரோ பிலேயாமினிடத்தில் வந்து அவனுடைய கண்களைத் திறந்து இஸ்ரயேலரின் பாளையத்தை தெளிவாகக் காண்பித்தார். இப்பொழுது தேவன் காண்கிற வண்ணமாகவே பிலேயாமும் இஸ்ரயேலரைக் கண்டான். கண்கள் திறக்கப்பட்டவனாக ஆண்டவரின் வார்த்தைகளை இஸ்ரயேலரின் அழகை வர்ணித்தான். தேவன் காண்கிறவிதமாகவே நாமும் பார்ப்பதற்கு பரிசுத்த ஆவியானவரின்…

July

பொய்யுரையாத தேவன்

(வேதபகுதி: எண்ணாகமம் 23:13-30) “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ? (வச. 19). பாலாக் பிலேயாமை நோக்கி, இஸ்ரயேலரின் கடைசிப் பாளையத்தை மட்டும் பார்க்கும்படி இன்னும் உயரமான மலையுச்சிக்கு அழைத்துச் சென்றான். அதாவது அவர்களுடைய குடியிருப்பு முழுவதையும் பார்க்கக்கூடாதபடி, பிலேயாமின் கண் பார்க்கும் தூரத்தை இன்னும் அதிகமாக்கினான். (வச. 13,14). பல நேரங்களில் இந்த பாலாக்கைப் போலவே நாம் என்ன…

July

இஸ்ரயேலை ஆசீர்வதிப்பதை கர்த்தருக்குப் பிரியம்

(வேதபகுதி: எண்ணாகமம் 23:1-12) “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பது எப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி” (வச. 8). பாலாக் இஸ்ரயேல் மக்களை சபிக்க வேண்டும் என்று விரும்பினான்; கர்த்தரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். பாலாக் எந்த மனிதனுக்கு பணம் கொடுத்து சபிக்க ஏற்பாடு செய்தானோ அந்த பிலேயாமைக் கொண்டே தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய நலனுக்காக யாரைக் கொண்டும் கிரியை செய்ய முடியும் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டை இங்கே காண்கிறோம்.…

July

தேவசித்தத்தை மாற்ற முயல வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 22:22-4) “அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி; … இப்பொழுதும் உம்முடைய பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்” (வச. 34). பிலேயாம் கர்த்தருடைய சித்தத்தை மாற்ற முயன்றான். நம்முடைய விடாப்பிடியான சுயசித்தம் பல நேரங்களில் தேவசித்தத்தை அறிய முடியாதவாறு கண்களை மறைத்துவிடுகிறது. பாதிதூரம் வந்தபின்னர் “இது தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” எனக்கூறிய பிலேயாமைப் போலவே நம்முடைய ஜெபங்களும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே ஒன்றை மனதில் நிர்ணயம் செய்துவிட்டு அற்கேற்ப…

July

இருமனம் வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 22:1-21) “… ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்க வேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச் சொன்னான்” (வச. 6). இஸ்ரயேலரின் வெற்றி யோர்தான் ஆற்றுக்கு இக்கரையில் இருந்த மக்களையும், அவர்களுடைய அரசர்களையும் கலங்கடித்தது. அவர்களை போரிட்டு வெற்றி கொள்ள முடியாது என்று உணர்ந்துகொண்டார்கள். இவர்களைத் தோற்கடிக்க மோவாபியர் மீதியானியரோடு கூட்டுச் சேர்ந்து, ஆலோசனை பண்ணினார்கள். பின்னர் பிலேயாமின் ஆலோசனையை நாடினார்கள். ஆவிக்குரிய…

July

தேவனின் முடிவில்லாத வல்லமை

(வேதபகுதி: எண்ணாகமம் 21:10-35) “அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச் செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்” (வச. 16). இஸ்ரயேல் மக்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காவும் முறுமுறுத்து தேவனுக்கு எதிராகக் கலம் செய்தார்கள். மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீரைக் கொடுக்க முடியாதவர் அல்லர் நம்முடைய தேவன். தம்முடைய ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் முன்னர், அதைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரவான்களாக நம்மை மாற்ற முயலுகிறார். கிறிஸ்துவின் சிலுவை மரணமே நம்முடைய அனைத்து…

July

உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம்

(வேதபகுதி: எண்ணாகமம் 21:1-9) “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார்” (வச. 9). இஸ்ரயேலரின் முந்தின தலைமுறை விசுவாசிகள் அனைவரும் மரித்து விட்டார்கள். இஸ்ரயேலர் ஏறத்தாழ கானான் நாட்டை நெருங்கி விட்டார்கள். இந்தப் புதிய தலைமுறை விசுவாசிகளுடைய வேண்டுதலை தேவன் கேட்டு, கானானியரை வெற்றிகொள்ளும்படி செய்தார். கானானை நோக்கிய தொடர் பயணம் அவர்களுக்கு…

July

எதிரியாகிப்போன சகோதரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 20:14-29) “இப்படி ஏதோம் தன் எல்லை வழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனைவிட்டு விலகிப்போனார்கள்” (வச. 21). இஸ்ரயேலர் தங்கள் நிலையை விவரித்தும், தயவுபண்ணிக் கேட்டும் (வச. 15-17) தங்கள் நாட்டின் எல்லை வழியாகச் செல்வதற்கு ஏதோமியர் மறுத்துவிட்டார்கள். இந்த எதோமியர் யார்? யாக்கோபுடன் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் ஒருவனாகிய ஏசாவின் வழிவந்தவர்கள். ஒருவேளை உணவுக்காக, தலைமகனுக்குரிய சுதந்தரத்தை இழந்துபோன உலகீய மனிதன். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை புறக்கணிக்கிற இயற்கை சுபாவத்தால் நிறைந்த…

July

கன்மலையாகிய கிறிஸ்து

(வேதபகுதி: எண்ணாகமம் 20:1-13) “அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், நாங்கள் இந்தக் கன்மலையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான். ” (வச. 10,11). கன்மலை கிறிஸ்துவுக்கு அடையாளம் (1 கொரி. 10:4). ஏற்கனவே ஒருமுறை தேவ ஆலோசனையின்படி மோசே கன்மலையை அடித்தான் (யாத். 17 அதி), தண்ணீர் அதிலிருந்து புறப்பட்டது, மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. மக்கள் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.…