July

சகோதரர்களை மறந்துவிடவேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 32:20-42) “அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எமோரியருடைய … தேசங்களையும் அவைகளிலுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்” (வச. 33). ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோர்தானுக்கு இக்கரையில் தங்களுக்கான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பல நேரங்களில் இஸ்ரயேல் நாட்டின் தேசிய வாழ்க்கையோடும், சமய வழிபாடுகளுக்கும் இவர்கள் குடும்பமாக இணைந்து செல்ல முடியாமல் போவதற்கு இந்தத் தெரிந்தெடுப்பு ஒரு காரணமாக இருந்துவிட்டது. கர்த்தர்மேல் பெரும் வாஞ்சையும் விருப்பமும்…

July

யோர்தானைத் தாண்டுவோம்

எண்ணாகமம் 32:1-19 “ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும், கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது அது ஆடுமாடுகளுக்கு தகுந்த இடமென்று கண்டார்கள்” (வச. 27). ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் தங்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். முன்னொரு நாளில் லோத்து ஆடுமாடுகளின் நிமித்தம், நீர்வளம் பொருந்திய தேசத்தை தெரிந்துகொண்டதுபோல, இந்த மக்களும் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிறைந்த இடத்தைத் தெரிந்துகொண்டார்கள். “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும்…

July

கொடுங்கள் கொடுக்கப்படும்

(வேதபகுதி: எண்ணாகமம் 31:25-54) “கொள்ளையடிக்கப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்” (வச. 27). நாம் அனைவருமே ஆவிக்குரிய போரில் பங்கேற்றுள்ளோம். ஆயினும் இப்போரில் சிலர் மட்டும் முன் வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் தாக்குதலை நேரடியாகச் சந்திக்க வாய்ப்புள்ளவர்கள். இன்றைக்கும் சபை மக்கள் சமாதானமாகவும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு சபைத் தலைவர்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்கிறது. புதிய புதிய உபதேசங்கள், கள்ளப்போதகர்களின் தாக்குதல்கள், சபையைப் பாழ்படுத்துவதற்கென சபைக்குள்ளேயிருந்து எழும்பும் ஆட்டுக்குட்டியின் வேடம் தரித்த ஓநாய்கள் போன்றவற்றை…

July

தொடரும் போர்

(வேதபகுதி: எண்ணாகமம் 31:1-24) “இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்” (வச. 2). மோசே என்னும் மாபெரும் தேவமனிதனின் வாழ்க்கை மீதியானியருக்கு எதிரான போரோடு நிறைவு பெறுகிறது. யார் இந்த மீதியானியர்? மோசே எகிப்திலிருந்து தப்பி ஓடியபோது, அடைக்கலம் கொடுத்தவர்கள் அல்லவா? மோசேயின் மனைவி மீதியான் தேசத்துப் பெண் அல்லவா? அவனுடைய மாமனார், மைத்துனர்கள் அனைவரும் மீதியானியர்கள் அல்லவா? ஆம், இத்தகைய சொந்தபந்தங்களுக்கு எதிரான போரைத்தான் மோசே தன் வாழ்வின்…

July

ஆணையிட்டதில் உறுதியாயிருத்தல்

(வேதபகுதி: எண்ணாகமம் 30:1-16) “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்” (வச. 2). விசுவாசிகள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போதோ அல்லது குறைவோ, பிரச்சினையோ, துன்பமோ ஏற்படும்போதோ கர்த்தரிடம் பொருத்தனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தை எதிர்காலத்தில் செய்வேன் என்று நேர்ந்துகொள்வது இயல்பான காரியமாகவே இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் பொருத்தனை மற்றும்…

July

கிறிஸ்துவின் ஒப்பற்ற பலி

(வேதபகுதி: எண்ணாகமம் 28:11-29:40) “நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்த வேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்” (வச. 29:39). இந்த நீண்ட வேதபகுதியில் இஸ்ரயேல் மக்கள் அனுசரிக்க வேண்டிய ஏழு பண்டிகைகளும் அப்பண்டிகையின் நாட்களில் செலுத்த வேண்டிய பலிமுறைமைகளும் கூறப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி மக்கள் தானாக முன்வந்து மனபூர்வமாகச் செலுத்த வேண்டிய பலிகளுக்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளன. இவையாவும் முடிவில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டிய பலிகள். இந்தப் பண்டிகைகள் இஸ்ரயேல் மக்களின் கடந்த காலத்தோடும் வருங்காலத்தோடும் தொடர்புடையவை.…

July

புதிய தலைமுறைக்கான நினைவூட்டல்

(வேதபகுதி: எண்ணாகமம் 28:1-10) “எனக்குச் சுகந்த வாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்த காலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு” (வச. 2.) இஸ்ரயேல் மக்களுடைய சூழ்நிலை இப்பொழுது மாறிவிட்டது. ஒரு புதிய தலைவரின் கீழ், ஒரு புதிய நாட்டுக்குள், ஒரு புதிய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ளப் போகிறார்கள். ஆயினும் சில குறிப்பிட்ட காரியங்கள் மாறாதவை. அவை புதிய நாட்டிலும் தொடர்ந்து செய்ய வேண்டியவை. பலி செலுத்துதலும் அவற்றுள் ஒன்று. முதல்…

July

புதிய தலைவர் யோசுவா

எண்ணாகமம் 27:1-23 “கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போல இராதபடிக்கு… தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்த வேண்டும் என்றான்” (வச. 16,17). மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். தன்னிடம் வந்த எந்தப் பிரச்சினைக்கும் தேவனிடத்தில் ஆலோசனை கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அவர் சொல்லுகிற வார்த்தைக்கு கீழ்ப்படிகிற பழக்கத்தையும் கொண்டிருந்தான் (வச. 11, 22). உன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது, நீ மரணமடையப்போகிறாய் என தேவன் அறிவித்த தன்னுடைய முடிவை எவ்வித மறுப்புமின்றி…

July

மீண்டும் மக்கள் தொகை கணக்கீடு

(வேதபகுதி: எண்ணாகமம் 26:1-65) “அநேகம்பேருக்கு அதிகச் சுதந்தரமும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சம் சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்டவர்களின் இலக்கத்துக்குத் தக்கதாக அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்க வேண்டும்” (வச. 11). பின்னாவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி தேவன் அழைத்த பரம அழைப்புக்கு இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்று பவுல் அடிகளார் சொன்னதுபோல, பாவத்தினால் ஏற்பட்ட தோல்விகள், அவிசுவாசத்தினால் உண்டான இழப்புகள், பாலைவனத்தில் நிகழ்ந்த மரணங்கள் ஆகிய யாவற்றிலிருந்து விடுபட்டவர்களாக ஒரு புதிய சந்ததியாக இஸ்ரயேலர் கானானுக்குள் பிரவேசிக்க இருக்கிறார்கள்.…

July

நம்மைக் காப்பாற்றுகிற கிறிஸ்து

(வேதபகுதி: எண்ணாகமம் 25:1-18) “… பினெகாஸ், என் நிமித்தம் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரகத்தைத் திருப்பினான்” (வச. 11). இஸ்ரயேலர்கள் தனித்துவமான வாழ்க்கைக்காக பிரித்து எடுக்கப்பட்டவர்கள். தேவனுக்கு விரோதமான பகையை உண்டுபண்ணுகிற உலக சிநேகத்தை நாடாதீர்கள் என்று தேவன் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். மோவாபின் அரசன் பிலேயாம் மந்திரத்தால் முடியாததை தந்திரத்தினால் சாதித்தான். தங்களுடைய வாளுக்கு முன் மண்டியிட வைக்கமுடியாத இஸ்ரயேலரை தம்முடைய சிலைகளுக்கு முன் மண்டியிட வைத்தான். கெர்ச்சிக்கிற சிங்கமாய் வந்தான், முடியவில்லை,…