August

தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்

(வேத பகுதி: உபாகமம் 5:22-33) ”அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (வச.29). தேவன் எங்களோடு நேரடியாகப் பேச வேண்டாம், அவர் என்ன பேசுகிறாரோ அதைக் கேட்டு நீர் எங்களுக்குச் சொல்லும் என்று மோசேயிடம் மக்கள் வைத்த விண்ணப்பத்தை கேட்டு தேவன் மக்களின் நிலைக்கு இறங்கி வந்தார். பல நேரங்களில் தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் நாம் புரிந்து கொள்ளாமல் போகும் போதோ,…

August

கேள், கற்றுக்கொள், கைக்கொள்

(வேதபகுதி: உபாகமம் 5:1-21) “இஸ்ரவேலரே, நான் இன்று காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும், நியாயங்களையும், கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக்கொள்ளக்கடவீர்கள்” (வச.1). தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளைகளைக் கொடுத்து, அவர்களுடன் உடன்படிக்கை பண்ணினார். அவர் மோசேயின் மூலமாக இந்தக் கட்டளைகளை ஓரேப் மலையிலிருந்து அவர்களுக்கு வழங்கினார். இந்த தலைமுறை மக்களுக்கு மிட்டுமின்றி, இனிவரும் தலைமுறையினர் அனைவருக்கும் இது பொதுவானது, அவர்கள் அனைவரும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கற்பலகைகளில் எழுதப்பட்ட பிரமாணத்துக்கு உட்பட்டிருந்தார்கள்.…

August

தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்

(வேத பகுதி: உபாகமம் 4:32-49) ”அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (வச. 37,38). தேவன் இஸ்ரயேல் மக்களோடு பேசவும், தமது வல்லமையைக் காண்பிக்கவும், அவர்களைத் தெரிந்துகொண்டு ஒரு நாட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது எது; அவருடைய…

August

தேவனை உடைய மக்கள்

(வேதபகுதி: உபாகமம் 4:15 -31) “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்கு தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்” (வச. 31). வேதத்தை உடைய மக்கள் என்னும் சிறப்பைப் பெற்றிருந்த இஸ்ரயேலர், தங்களுடைய கடவுளாக மெய்த் தேவனைப் பெற்றிருந்த மக்கள் என்னும் அந்தஸ்தை உடையவர்களாகவும் விளங்கினார்கள். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருந்தவர் இஸ்ரயேலர்களின் தேவனாக விளங்கினார். சதாகாலங்களிலுமுள்ள இந்தத் தேவனே நமக்கும் தேவனாயிருக்கிறார்.…

August

வேதத்தின் மக்கள்

(வேதபகுதி: உபாகமம் 4:1-14) இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? (வச. 8). தேவன் இஸ்ரயேலர்களுக்கு வேதத்தைக் கொடுத்தார். தங்களுடைய வழிபாட்டு முறைக்கு மட்டுமின்றி, தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கான நடைமுறை ஆலோசனைகளையும் அந்த நல்ல தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய வேதம் அவர்களைச் சிறப்பானவர்களாக ஆக்கியது. பல்வேறு மதங்களும் வழிபாடுகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுடனும் ஊடுருவிச்…

August

சசோகோதர பாசம்

(வேத பகுதி: உபாகமம் 3:18-29) ”யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள். உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்” (வச. 18,19). கர்த்தரின் பேரில் மிகப் பெரிய விசுவாசம் இருந்தால் தவிர இரண்டரைக் கோத்திரத்தார் தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், ஆடு மாடுகளையும் யோர்தானின் இக்கரையில் விட்டு விட்டு ஆற்றைக் கடந்து பிற கோத்திரத்தாருக்காக ஆண்கள் போருக்குச் செல்ல முடியாது.…

August

ஜெயங்கொள்ளும் விசுவாசம்

(வேதபகுதி: உபாகமம் 3:1 -17) “பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்” (வச. 1). எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் தோல்வி, அவனுடைய கூட்டாளியான ஓகை உசுப்பிவிட்டது. ஓக் தன்னுடைய சகல பலத்தோடும், இராணுவத்தோடும் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிடவந்தான். நம்முடைய கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் வெற்றிக்கான போர் என்பது தொடர்ச்சியானது. சீகோனின்மேல் பெற்ற வெற்றி என்பது நாம் ஓய்ந்திருப்பதற்காக அல்ல, அடுத்த போருக்கு ஆயத்தம் செய்வதற்காகவும் தான். மீந்திருந்த…

August

தேவனுடைய முதலாவதே நமக்கும் இருக்கட்டும்

(வேதபகுதி: உபாகமம் 2:24 -37) “நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்” (வச. 24). ஏதோமியரோடும் அம்மோனியரோடும் மோவாபியரோடும் போரிட வேண்டாம் என்று கூறிய தேவன் இப்பொழுது சிலைவணத்துக்கும் குழந்தைகளைப் பலியிடுவதற்கும் பேர்போன எமோரியருடன் போரிட்டு அதன் ராஜாவையும் மக்களையும் முற்றிலுமாக அழித்து அவர்களுடைய நாட்டைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறுகிறார். தேவன் எல்லா மக்களுக்கும் தேவனாக…

August

சகோதர யுத்தத்தைத் தவிர்ப்போம்

(வேத பகுதி: உபாகமம் 2:1-23) சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம் (வச. 4,5). கிறிஸ்தவ வாழ்கையில் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்கொள்ளவது ஆகும். அவர்களை விட்டு விலகியும் செல்ல முடியாது, நெருங்கி உறவாடும் முடியாது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் சகோதரரான ஏசாவின் வம்சத்தாரான ஏதோமியரை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும்…

August

உண்மையை ஏற்றுக்கொள்ளும் தலைவன்

(வேதபகுதி: உபாகமம் 1:43-46) “அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என் மேல் கோபங்கொண்டு நீயும் அதில் பிரவேசிப்பதில்லை. உனக்கு முன்பாக இருக்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்” (வச. 37,38). தன்னைப் பற்றிய தாழ்வான விமர்சனங்களையும் பிறரைப் பற்றிய உயர்வான பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்கிற தலைவனே ஓர் உண்மையான தலைவனாக இருக்க முடியும். தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டு, யோசுவா மற்றும் காலேப்பின் நற் பண்புகளை மெச்சிக் கூறுகிற செயல் இங்கே மோசேயை ஒரு மாமனிதனாகக்…