அறிந்துகொள்வதற்காகப் பின்பற்று
(வேதபகுதி: உபாகமம் 16:1-8) “நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்” (வச. 3). இஸ்ரயேல் ஒரு நாடாக உருவான நாள் முக்கியமான நாள், அது மறக்கப்படக் கூடாத நாள். தேவனுடைய வல்லமையினால் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்ட விடுதலையின் நாள், இது அவர்களுடைய நாட்காட்டியையே மாற்றியமைத்த நாள். இதை ஆண்டுதோறும் நினைவுகூரும்படி நியமிக்கப்பட்டதே பஸ்கா. ஆயினும் உயிருள்ளவரை…